தமிழில் தேட.....

Showing posts with label பிரம்மா. Show all posts
Showing posts with label பிரம்மா. Show all posts

Sunday, March 17, 2019

எங்கிருந்தோ இளங்குயிலின் - (பிரம்மா)

படம்: பிரம்மா
இசை: இளையராஜா

*********************************

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசை கேட்டு கண்விழித்தேன்
நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம்
தட்டிவிட்டேன் மனக்கதவை
திறந்து பார்க்க விறைந்து வா
நெஞ்சம் உந்தன் நெஞ்சம்
கொண்ட சஞ்சலங்கள் மறைய

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசை கேட்டு கண்விழித்தேன்

*********************************

நீங்காமல் தானே நிழல் போலே நானே
வருவேன் உன் பின்னோடு எந்நாளும் தான்
பூப்போன்ற மனதை பொல்லாத மனதாய்
தவறாக எடைப்போட்டு சென்றாலும்தான்
பாலைப்போல கள்ளும் கூட வெண்மையானது
பருகிடாது விளங்கிடாது உண்மையானது
நீயும் காணக்கூடும் இங்கும் ஓர் தினம்
இந்த பால் மனம்

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசை கேட்டு கண்விழித்தேன்

*********************************

பூர்வீகம் உனக்கு எதுவென்று எனக்கு
மறைத்தாலும் என் கண்கள் ஏமாறுமா
புரியாத புதிராய் விளங்காத விடையாய்
இருந்தாலும் உண்மைகள் பொய்யாகுமா
என்னை கண்டு அச்சம் கொள்ள தேவையில்லையே
வேலி மீது குற்றம் சொன்ன தோட்டம் இல்லையே
நண்பன் என்று என்னை ஏற்கும் நாள் வரும்
அந்த நாள் வரும்

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசை கேட்டு கண்விழித்தேன்
நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம்
தட்டிவிட்டேன் மனக்கதவை
திறந்து பார்க்க விறைந்து வா
நெஞ்சம் உந்தன் நெஞ்சம்
கொண்ட சஞ்சலங்கள் மறைய

எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசை கேட்டு கண்விழித்தேன்

*********************************

Friday, March 8, 2019

வருது வருது இளங்காற்று - (பிரம்மா)

படம்: பிரம்மா
இசை: இளையராஜா

*********************************

கோரஸ்:
ம் ம் ம் ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்
ம் ம் ம் ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஆஆஆ ஆஅஆஆ ஆஆஆ ஆஆ
ஆஆஆ ஆஅஆஆ ஆஆஆ ஆஆ


பெண்: வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு

ஆண்: சிறகு முளைத்த கிளி போலே
மனம் பறக்க நினைக்கும் புவி மேலே
தனிமை நினைவு இனி ஏது
ஒரு தலைவன் தழுவ வரும்போது

பெண்:  வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு

*********************************

ஆண்: நாடியெங்கும் ஓடிச்சென்று
நாளும் ஒரு சூடேற்றும் ரூபமே

பெண்:  நேசம் என்னும் நெய்யை விட்டு
நெஞ்சில் நிதம் நான் ஏற்றும் தீபமே

ஆண்: தோளில் உனை தாங்குவேன்
இதழ் தேனை தினம் வாங்குவேன்

பெண்:  கேளு பரிமாறுவேன்
அதில் நானும் பசியாறுவேன்

ஆண்: பாலும் தேனும் தீர தீர ஊறுமா

பெண்:  வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து

ஆண்: இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு

*********************************

கோரஸ்:
துத்து துது துத்து துது துத்து துது
துத்து துது துத்து துது துத்து துது துத்து துது து
துத்து துது துத்து துது துத்து துது
துத்து துது துத்து துது துத்து துது துத்து துது து
துத்து துது துத்து துது துத்து துது து
துத்து துது துத்து துது துத்து துது து

பெண்:  ஊரைச் சுற்றும் தேரும் இன்று
சேரும் இடம் சேராமல் வாடுதே

ஆண்: தேவன் வந்தான்தேரைக்கண்டு
சோகம் இனி சொல்லாமல் ஓடுமே

பெண்:  நாளை சுப வேளைதான்
அதில் கூடும் மணமாலை தான்

ஆண்: நாளும் புது லீலைதான்
இனி ஏது இடைவேளை தான்

பெண்:  ஆடல் பாடல் ஆவல் தீர காணலாம்

ஆண்: வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு

பெண்:  சிறகு முளைத்த கிளி போலே
மனம் பறக்க நினைக்கும் புவி மேலே
தனிமை நினைவு இனி ஏது
ஒரு தலைவன் தழுவ வரும்போது

ஆண்: வருது வருது இளங்காற்று
இந்த வசந்தமலரின் இடம் பார்த்து

பெண்:  இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு

*********************************