தமிழில் தேட.....

Thursday, October 1, 2020

தென்றலது உன்னிடத்தில் - அந்த ஏழு நாட்கள் பாடல் வரிகள்



படம்: அந்த ஏழு நாட்கள்

இசை: M S விஸ்வநாதன் 


*********************************


ஆண் : 

ஸகமப கமகஸ

நிஸநிப கமநிப ஸ ஸ

ஸகமப கமகஸ

நிஸநிப கமநிப ஸ ஸ

ககரி மமக 

பபமபத ரிநிஸ


பெண் : 

தென்றலது உன்னிடத்தில்

சொல்லி வைத்த சேதி என்னவோ

தென்றலது உன்னிடத்தில்

சொல்லி வைத்த சேதி என்னவோ

பெண்மையின் சொர்க்கமே

பார்வையில் வந்ததோ

காவியம் தந்ததோ

தென்றலது உன்னிடத்தில்

சொல்லி வைத்த சேதி என்னவோ


*********************************


ஆண் : 

உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை

இன்று தங்கரதம் ஏறியது


பெண் : 

உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை

இன்று கங்கை என மாறியது

உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை

இன்று கங்கை என மாறியது


ஆண் : 

இதுவரை கனவுகள்

இளமையின் நினைவுகள்

ஈடேறும் நாளின்றுதான்


பெண் : 

எதுவரை தலைமுறை

அதுவரை தொடர்ந்திடும்

என்னாசை உன்னோடுதான்


ஆண் : 

பெண்மையின் சொர்க்கமே

பார்வையில் வந்ததோ

காவியம் தந்ததோ


பெண் : 

தென்றலது உன்னிடத்தில்

சொல்லி வைத்த சேதி என்னவோ


*********************************


பெண் : 

சந்தம் தேடி சிந்து பாடி

உந்தன் சன்னதிக்கு நான் வருவேன்


ஆண் : 

தஞ்சை கோவில் சிற்பம் போலே

ஒரு முத்திரையை நான் பதிப்பேன்

தஞ்சை கோவில் சிற்பம் போலே

ஒரு முத்திரையை நான் பதிப்பேன்


பெண் : 

அனுதினம் இரவெனும்

அதிசய உலகினில்

ஆனந்த நீராடுவோம்


ஆண் : 

தினமொரு புது வகை

கலைகளை அறிந்திடும்

ஏகாந்தம் நாம் காணுவோம்


பெண்:

பெண்மையின் சொர்க்கமே

பார்வையில் வந்ததோ

காவியம் தந்ததோ


ஆண் : 

தென்றலது உன்னிடத்தில்

சொல்லி வைத்த சேதி என்னவோ

பெண் : 

பெண்மையின் சொர்க்கமே

பார்வையில் வந்ததோ


இருவர் : 

காவியம் தந்ததோ


*********************************



கவிதை அரங்கேறும் நேரம் - அந்த ஏழு நாட்கள் பாடல் வரிகள்



படம்: அந்த ஏழு நாட்கள்

இசை: எம் எஸ் விஸ்வநாதன்


*********************************


ஆண்: 

ஸஸக நிஸபநி ஸஸ 

ஸஸ ஸமக நிஸபநி  ஸ 

நிஸ ஸபப பபப பதமம

மம கமக கம கமநிப கரிஸநி


சப்த ஸ்வரதேவியுணரு

இனி என்னில் வரதானமருளு

நீ அழகில் மமனாவில் வாழு

என் கழிவில் ஒளி தீபமேற்று

சப்த ஸ்வரதேவி உணரு


கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் தேகம்

இனி நாளும் கல்யாண ராகம்

இந்த நினைவு சங்கீதமாகும்

கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் தேகம்


*********************************


பெண்: 

பார்வை உன் பாதம் தேடி

வரும் பாவை என் ஆசை கோடி

பார்வை உன் பாதம் தேடி

வரும் பாவை என் ஆசை கோடி

இனி காமன் பல்லாக்கில் ஏறி

நாம் கலப்போம் உல்லாச ஊரில்


ஆண்: 

உன் அங்கம் தமிழோடு சொந்தம்

அது என்றும் திகட்டாத சந்தம்

கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் தேகம்


*********************************


ஆண்: 

கைகள் பொன்மேனி கலந்து

மலர்ப்பொய்கை கொண்டாடும் விருந்து

கைகள் பொன்மேனி கலந்து

மலர்ப்பொய்கை கொண்டாடும் விருந்து

இனி சொர்க்கம் வேறொன்று எதற்கு

எந்த சுகமும் ஈடில்லை இதற்கு


பெண்: 

மனம் கங்கை நதியான உறவை

இனி எங்கே இமை மூடும் இளமை

கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் தேகம்


*********************************


பெண்: 

நீரில் நின்றாடும் போதும்

சுடும் நெருப்பாய் என் தேகம் ஆகும்

அது நேரில் நீ வந்த மாயம்

இந்த நிலைமை எப்போது மாறும்


ஆண்: 

என் இளமை மழை மேகமானால்

உன் இதயம் குளிர் வாடை காணும்

கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் தேகம்


பெண்: 

இனி நாளும் கல்யாண ராகம்

இந்த நினைவு சங்கீதமாகும்


இருவரும்: 

கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் தேகம்


*********************************