தமிழில் தேட.....

Thursday, October 1, 2020

தென்றலது உன்னிடத்தில் - அந்த ஏழு நாட்கள் பாடல் வரிகள்



படம்: அந்த ஏழு நாட்கள்

இசை: M S விஸ்வநாதன் 


*********************************


ஆண் : 

ஸகமப கமகஸ

நிஸநிப கமநிப ஸ ஸ

ஸகமப கமகஸ

நிஸநிப கமநிப ஸ ஸ

ககரி மமக 

பபமபத ரிநிஸ


பெண் : 

தென்றலது உன்னிடத்தில்

சொல்லி வைத்த சேதி என்னவோ

தென்றலது உன்னிடத்தில்

சொல்லி வைத்த சேதி என்னவோ

பெண்மையின் சொர்க்கமே

பார்வையில் வந்ததோ

காவியம் தந்ததோ

தென்றலது உன்னிடத்தில்

சொல்லி வைத்த சேதி என்னவோ


*********************************


ஆண் : 

உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை

இன்று தங்கரதம் ஏறியது


பெண் : 

உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை

இன்று கங்கை என மாறியது

உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை

இன்று கங்கை என மாறியது


ஆண் : 

இதுவரை கனவுகள்

இளமையின் நினைவுகள்

ஈடேறும் நாளின்றுதான்


பெண் : 

எதுவரை தலைமுறை

அதுவரை தொடர்ந்திடும்

என்னாசை உன்னோடுதான்


ஆண் : 

பெண்மையின் சொர்க்கமே

பார்வையில் வந்ததோ

காவியம் தந்ததோ


பெண் : 

தென்றலது உன்னிடத்தில்

சொல்லி வைத்த சேதி என்னவோ


*********************************


பெண் : 

சந்தம் தேடி சிந்து பாடி

உந்தன் சன்னதிக்கு நான் வருவேன்


ஆண் : 

தஞ்சை கோவில் சிற்பம் போலே

ஒரு முத்திரையை நான் பதிப்பேன்

தஞ்சை கோவில் சிற்பம் போலே

ஒரு முத்திரையை நான் பதிப்பேன்


பெண் : 

அனுதினம் இரவெனும்

அதிசய உலகினில்

ஆனந்த நீராடுவோம்


ஆண் : 

தினமொரு புது வகை

கலைகளை அறிந்திடும்

ஏகாந்தம் நாம் காணுவோம்


பெண்:

பெண்மையின் சொர்க்கமே

பார்வையில் வந்ததோ

காவியம் தந்ததோ


ஆண் : 

தென்றலது உன்னிடத்தில்

சொல்லி வைத்த சேதி என்னவோ

பெண் : 

பெண்மையின் சொர்க்கமே

பார்வையில் வந்ததோ


இருவர் : 

காவியம் தந்ததோ


*********************************



No comments:

Post a Comment

உங்கள் கருத்து...