தமிழில் தேட.....

Thursday, October 1, 2020

கவிதை அரங்கேறும் நேரம் - அந்த ஏழு நாட்கள் பாடல் வரிகள்



படம்: அந்த ஏழு நாட்கள்

இசை: எம் எஸ் விஸ்வநாதன்


*********************************


ஆண்: 

ஸஸக நிஸபநி ஸஸ 

ஸஸ ஸமக நிஸபநி  ஸ 

நிஸ ஸபப பபப பதமம

மம கமக கம கமநிப கரிஸநி


சப்த ஸ்வரதேவியுணரு

இனி என்னில் வரதானமருளு

நீ அழகில் மமனாவில் வாழு

என் கழிவில் ஒளி தீபமேற்று

சப்த ஸ்வரதேவி உணரு


கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் தேகம்

இனி நாளும் கல்யாண ராகம்

இந்த நினைவு சங்கீதமாகும்

கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் தேகம்


*********************************


பெண்: 

பார்வை உன் பாதம் தேடி

வரும் பாவை என் ஆசை கோடி

பார்வை உன் பாதம் தேடி

வரும் பாவை என் ஆசை கோடி

இனி காமன் பல்லாக்கில் ஏறி

நாம் கலப்போம் உல்லாச ஊரில்


ஆண்: 

உன் அங்கம் தமிழோடு சொந்தம்

அது என்றும் திகட்டாத சந்தம்

கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் தேகம்


*********************************


ஆண்: 

கைகள் பொன்மேனி கலந்து

மலர்ப்பொய்கை கொண்டாடும் விருந்து

கைகள் பொன்மேனி கலந்து

மலர்ப்பொய்கை கொண்டாடும் விருந்து

இனி சொர்க்கம் வேறொன்று எதற்கு

எந்த சுகமும் ஈடில்லை இதற்கு


பெண்: 

மனம் கங்கை நதியான உறவை

இனி எங்கே இமை மூடும் இளமை

கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் தேகம்


*********************************


பெண்: 

நீரில் நின்றாடும் போதும்

சுடும் நெருப்பாய் என் தேகம் ஆகும்

அது நேரில் நீ வந்த மாயம்

இந்த நிலைமை எப்போது மாறும்


ஆண்: 

என் இளமை மழை மேகமானால்

உன் இதயம் குளிர் வாடை காணும்

கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் தேகம்


பெண்: 

இனி நாளும் கல்யாண ராகம்

இந்த நினைவு சங்கீதமாகும்


இருவரும்: 

கவிதை அரங்கேறும் நேரம்

மலர் கணைகள் பரிமாறும் தேகம்


*********************************


No comments:

Post a Comment

உங்கள் கருத்து...