தமிழில் தேட.....

Showing posts with label S A ராஜ்குமார். Show all posts
Showing posts with label S A ராஜ்குமார். Show all posts

Wednesday, September 11, 2019

பூந்தென்றலே நீ பாடி வா - மனசுக்குள் மத்தாப்பு பாடல் வரிகள்



படம்: மனசுக்குள் மத்தாப்பு
இசை: S A  ராஜ்குமார்

******************************************

ஆண்:
ம்ம்ம்
ம்ம்ம்
நன்ன நான நந நநநந நநநந

இரு: நநநந நநநந
நநநந நநநந நநநந

ஆண்:
பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூச்சூட வா

பெண்:
கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம்

ஆண்:
கண்ணில் வரும் பெண்ணின்
முகம் பிருந்தாவனம்
பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூச்சூட வா

******************************************

ஆண்:
தூங்காத கண்களால் நீங்காமல் காண்கிறேன்
நீதானே என் காலைகளின் சூர்யோதயம்

பெண்:
தாங்காமல் பெண் உனை
தாலாட்டு கேட்கிறேன்
நீயில்லையேல் பாவை மனம் பாலை வனம்

ஆண்:
ஹே ப்ரம்ம தேவா தர வேண்டும்
நூறாண்டுகள்

பெண்:
நான் காதல் செய்ய
போதாது நூறாண்டுகள்

ஆண்:
கண்ணே உன் வாசகம் என் ஜீவ யாசகம்

பெண்:
கண்ணா என் மன்னா நீ
கோடி பேரில் மானுடன்

ஆண்:
பூந்தென்றலே நீ பாடி வா

பெண்:
பொன் மேடையில் பூச்சூட வா

பெண்:
ல ல ல ல ல ல ல ல
ல ல ல ல ல ல ல ல
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஹ ஹ ஹ ம்

******************************************

பெண்:
ஏன் இந்த பெண் மனம் ஏகாந்தமானது
நீ பாடினால் பூவானது தேனானது

ஆண்:
நீ வந்து காவியம் நிஜமாகிப் போனது
வார்த்தைகளில் இல்லாதது நாம் கண்டது

பெண்:
பூலோக சொர்க்கம் கண்
முன்னே நான் காண்கிறேன்
ஆண்:
நீ தேவ வர்க்கம் உன்
நெஞ்சில் நான் வாழ்கிறேன்

பெண்:
காலங்கள் மாறினும்
தேகங்கள் போயினும்

ஆண்:
காதல் அழியாது
அது நாளும் வாழும் உன் வசம்

பெண்:
பூந்தென்றலே நீ பாடி வா

ஆண்:
பொன் மேடையில் பூச்சூட வா

பெண்:
கண்ணன் மனம் மங்கை தொழும்
தேவாலயம்

ஆண்:
கண்ணில் வரும் பெண்ணின் முகம்
பிருந்தாவனம்

பெண்:
பூந்தென்றலே நீ பாடி வா

ஆண்:
பொன் மேடையில் பூச்சூட வா

******************************************

Friday, June 14, 2019

சங்கீத வானில் சந்தோஷம் - சின்ன பூவே மெல்ல பேசு பாடல் வரிகள்



படம்: சின்ன பூவே மெல்ல பேசு
இசை: S A ராஜ்குமார்

******************************************

ஆண்: சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூமயிலே
தோள் மீது வா உன்னைத் தாலாட்டுவேன்
காதல் சொன்னால் உன்னை சீராட்டுவேன்
என் நெஞ்சம் எங்கெங்கும்
உன் மஞ்சம் தானே

சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூமயிலே

******************************************

பெண்: ஆ ஆ ஆ ஆஹா ஆஹா ஆஹா ஆ ஆ ஆ
ஆனந்த ராகங்களில் நான்
ஆலாபனை செய்கிறேன்

ஆண்: வா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நான் உந்தன் கீதம் தன்னை
ஆராதனை செய்கிறேன்
கன்னங்களில் ஒரு வான் வண்ணமே
கண்டேன் இங்கே மலர் தேன் கிண்ணமே

பெண்: கண்ணா உந்தன் குழல் ராகங்களால்
என் நாவிலும் இன்று குளிர்கின்றதே

ஆண்: ஒன்றோடு ஒன்றாகி உண்மைகள் கண்டுவர
சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூமயிலே

******************************************

ஆண்: ஆ ஆ ஆ ஆஹா ஆஹா ஆஹா ஆ ஆ ஆ
பொன்மாலை வேளைகளில்
உன் வாசல் நான் தேடினேன்

பெண்: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கண்ணென்னும் ஓடங்களில்
கரைதேடி நான் ஓடினேன்

ஆண்: கன்னல் எனும் இதழ் சுவை ஊட்டுதே
காணும் முகம் இன்று எனை வா ட்டுதே

பெண்: கண் மைகளில் சுகம் வளர்கின்றதே
உன்னில் தினம் உடல் கரைகின்றதே

ஆண்: இன்றோடு தீராத பந்தங்கள் கொண்டு வர
சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூமயிலே

பெண்: தோள் மீது தான் உன்னை தாலாட்டுவேன்
காதல் சொல்லி உன்னை சீராட்டுவேன்
என் நெஞ்சம் என்றென்றும்
உன் மஞ்சம் தானே

ஆண்: சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே

பெண்: இந்த ஏகாந்த வேளையில்
மௌனங்கள் தேடும்

ஆண்: என் காதல் பூமயிலே

******************************************