படம்: மனசுக்குள் மத்தாப்பு
இசை: S A ராஜ்குமார்
******************************************
ஆண்:
ம்ம்ம்
ம்ம்ம்
நன்ன நான நந நநநந நநநந
இரு: நநநந நநநந
நநநந நநநந நநநந
ஆண்:
பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூச்சூட வா
பெண்:
கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம்
ஆண்:
கண்ணில் வரும் பெண்ணின்
முகம் பிருந்தாவனம்
பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூச்சூட வா
******************************************
ஆண்:
தூங்காத கண்களால் நீங்காமல் காண்கிறேன்
நீதானே என் காலைகளின் சூர்யோதயம்
பெண்:
தாங்காமல் பெண் உனை
தாலாட்டு கேட்கிறேன்
நீயில்லையேல் பாவை மனம் பாலை வனம்
ஆண்:
ஹே ப்ரம்ம தேவா தர வேண்டும்
நூறாண்டுகள்
பெண்:
நான் காதல் செய்ய
போதாது நூறாண்டுகள்
ஆண்:
கண்ணே உன் வாசகம் என் ஜீவ யாசகம்
பெண்:
கண்ணா என் மன்னா நீ
கோடி பேரில் மானுடன்
ஆண்:
பூந்தென்றலே நீ பாடி வா
பெண்:
பொன் மேடையில் பூச்சூட வா
பெண்:
ல ல ல ல ல ல ல ல
ல ல ல ல ல ல ல ல
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஹ ஹ ஹ ம்
******************************************
பெண்:
ஏன் இந்த பெண் மனம் ஏகாந்தமானது
நீ பாடினால் பூவானது தேனானது
ஆண்:
நீ வந்து காவியம் நிஜமாகிப் போனது
வார்த்தைகளில் இல்லாதது நாம் கண்டது
பெண்:
பூலோக சொர்க்கம் கண்
முன்னே நான் காண்கிறேன்
ஆண்:
நீ தேவ வர்க்கம் உன்
நெஞ்சில் நான் வாழ்கிறேன்
பெண்:
காலங்கள் மாறினும்
தேகங்கள் போயினும்
ஆண்:
காதல் அழியாது
அது நாளும் வாழும் உன் வசம்
பெண்:
பூந்தென்றலே நீ பாடி வா
ஆண்:
பொன் மேடையில் பூச்சூட வா
பெண்:
கண்ணன் மனம் மங்கை தொழும்
தேவாலயம்
ஆண்:
கண்ணில் வரும் பெண்ணின் முகம்
பிருந்தாவனம்
பெண்:
பூந்தென்றலே நீ பாடி வா
ஆண்:
பொன் மேடையில் பூச்சூட வா
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...