தமிழில் தேட.....

Wednesday, September 11, 2019

பூந்தென்றலே நீ பாடி வா - மனசுக்குள் மத்தாப்பு பாடல் வரிகள்



படம்: மனசுக்குள் மத்தாப்பு
இசை: S A  ராஜ்குமார்

******************************************

ஆண்:
ம்ம்ம்
ம்ம்ம்
நன்ன நான நந நநநந நநநந

இரு: நநநந நநநந
நநநந நநநந நநநந

ஆண்:
பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூச்சூட வா

பெண்:
கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம்

ஆண்:
கண்ணில் வரும் பெண்ணின்
முகம் பிருந்தாவனம்
பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூச்சூட வா

******************************************

ஆண்:
தூங்காத கண்களால் நீங்காமல் காண்கிறேன்
நீதானே என் காலைகளின் சூர்யோதயம்

பெண்:
தாங்காமல் பெண் உனை
தாலாட்டு கேட்கிறேன்
நீயில்லையேல் பாவை மனம் பாலை வனம்

ஆண்:
ஹே ப்ரம்ம தேவா தர வேண்டும்
நூறாண்டுகள்

பெண்:
நான் காதல் செய்ய
போதாது நூறாண்டுகள்

ஆண்:
கண்ணே உன் வாசகம் என் ஜீவ யாசகம்

பெண்:
கண்ணா என் மன்னா நீ
கோடி பேரில் மானுடன்

ஆண்:
பூந்தென்றலே நீ பாடி வா

பெண்:
பொன் மேடையில் பூச்சூட வா

பெண்:
ல ல ல ல ல ல ல ல
ல ல ல ல ல ல ல ல
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஹ ஹ ஹ ம்

******************************************

பெண்:
ஏன் இந்த பெண் மனம் ஏகாந்தமானது
நீ பாடினால் பூவானது தேனானது

ஆண்:
நீ வந்து காவியம் நிஜமாகிப் போனது
வார்த்தைகளில் இல்லாதது நாம் கண்டது

பெண்:
பூலோக சொர்க்கம் கண்
முன்னே நான் காண்கிறேன்
ஆண்:
நீ தேவ வர்க்கம் உன்
நெஞ்சில் நான் வாழ்கிறேன்

பெண்:
காலங்கள் மாறினும்
தேகங்கள் போயினும்

ஆண்:
காதல் அழியாது
அது நாளும் வாழும் உன் வசம்

பெண்:
பூந்தென்றலே நீ பாடி வா

ஆண்:
பொன் மேடையில் பூச்சூட வா

பெண்:
கண்ணன் மனம் மங்கை தொழும்
தேவாலயம்

ஆண்:
கண்ணில் வரும் பெண்ணின் முகம்
பிருந்தாவனம்

பெண்:
பூந்தென்றலே நீ பாடி வா

ஆண்:
பொன் மேடையில் பூச்சூட வா

******************************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...