தமிழில் தேட.....

Tuesday, September 17, 2019

தென்றல் காத்தே - கும்பக்கரை தங்கையா பாடல் வரிகள்



படம்: கும்பக்கரை தங்கையா
இசை: இளையராஜா

******************************************

பெண்:
ஆ அ அ ஆ ஆ ஆ ஆ ஆ அ ஆ ஆ
ஓ ஓ ஓஓஓ ஓ ஓ ஓஓஓ
ஆ அ அ அ ஆ அ அ அ ஆ ஆ அ ஆ


பெண்:
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா
கன்னி பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
மாமன் முகத்தை பாத்துதான்
வந்து சேரச்சொல்ல மாட்டியா

ஆண்:
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா
கன்னி பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா

******************************************

ஆண்:
முத்து மேனிதான் பட்டு ராணிதான்
முழுதும் வாழும் யோகம்தான்
தொட்டு பாக்கவும் கட்டி சேர்க்கவும்
தொடரும் எனது வேகம்தான்

பெண்:
நீயும் நானும்
பாலும் தேனும்
நீயும் நானும் பாலும் தேனும்
போல ஒண்ணா கூடணும்

ஆண்:
வானம் போல பூமி போல
சேர்ந்து ஒண்ணா வாழணும்

பெண்:
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா

ஆண்:
கன்னி பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா

******************************************

பெண்:
இந்த பூமியும் அந்த வானமும்
இருக்கும் கோலம் மாறலாம்
இந்த ஆசையும் செஞ்ச பூசையும்
என்றும் மாற கூடுமோ

ஆண்:
காத்து வாழும்
காலம் யாவும்
காத்து வாழும் காலம் யாவும்
காதல் கீதம் வாழுமே

பெண்:
கனவு கூட கவிதையாகி
உனது புகழ பாடுமே

ஆண்:
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா

பெண்:
கன்னி பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா

ஆண்:
மாமன் முகத்தை பாத்துதான்

பெண்:
மணமாலை வந்து போடவா

ஆண்:
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா

பெண்:
கன்னி பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா

******************************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...