படம்: கும்பக்கரை தங்கையா
இசை: இளையராஜா
******************************************
பெண்:
ஆ அ அ ஆ ஆ ஆ ஆ ஆ அ ஆ ஆ
ஓ ஓ ஓஓஓ ஓ ஓ ஓஓஓ
ஆ அ அ அ ஆ அ அ அ ஆ ஆ அ ஆ
பெண்:
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா
கன்னி பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
மாமன் முகத்தை பாத்துதான்
வந்து சேரச்சொல்ல மாட்டியா
ஆண்:
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா
கன்னி பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
******************************************
ஆண்:
முத்து மேனிதான் பட்டு ராணிதான்
முழுதும் வாழும் யோகம்தான்
தொட்டு பாக்கவும் கட்டி சேர்க்கவும்
தொடரும் எனது வேகம்தான்
பெண்:
நீயும் நானும்
பாலும் தேனும்
நீயும் நானும் பாலும் தேனும்
போல ஒண்ணா கூடணும்
ஆண்:
வானம் போல பூமி போல
சேர்ந்து ஒண்ணா வாழணும்
பெண்:
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா
ஆண்:
கன்னி பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
******************************************
பெண்:
இந்த பூமியும் அந்த வானமும்
இருக்கும் கோலம் மாறலாம்
இந்த ஆசையும் செஞ்ச பூசையும்
என்றும் மாற கூடுமோ
ஆண்:
காத்து வாழும்
காலம் யாவும்
காத்து வாழும் காலம் யாவும்
காதல் கீதம் வாழுமே
பெண்:
கனவு கூட கவிதையாகி
உனது புகழ பாடுமே
ஆண்:
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா
பெண்:
கன்னி பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
ஆண்:
மாமன் முகத்தை பாத்துதான்
பெண்:
மணமாலை வந்து போடவா
ஆண்:
தென்றல் காத்தே தென்றல் காத்தே
சேதி ஒண்ணு கேட்டியா
பெண்:
கன்னி பூவு கண்ணில் நூறு
கோலம் போட்டா பாத்தியா
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...