தமிழில் தேட.....

Tuesday, September 24, 2019

புன்னை வனத்து குயிலே - முத்துகாளை



படம்: முத்துகாளை
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு

பெண்:
முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உறவாடு

ஆண்:
வேங்குழலின் ஓசை எழ

பெண்:
பாய் விரிக்கும் ஆசை எழ

ஆண்:
மார்மீதும் தோள்மீதும்
சாய்ந்திருக்க

பெண்:
ஓ பாலாரும் தேனாரும்
பாய்ந்திருக்க

ஆண்:
புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு

******************************************

ஆண்:
மைப்பூசும் கண்ணொடும் பேசும்
நேரம் இன்று
அதை பொய் பேச வைக்கதே இங்கு
நாணம் என்று

பெண்:
அம்மாடி ஆகாதா வேகம்
நெஞ்சில் கொண்டு
என்னை அள்ளாதே ஆவரம் பூவும்
நானும் ஒன்று

ஆண்:
கண் வைத்த பின்னாலே
கை வைக்கக் கூடாதா

பெண்:
கை வைத்தால் அங்கங்கே
மின்சாரம் ஓடாதா

ஆண்:
என்னென்ன ஆனால் என்ன
ஆவல் கொண்ட போது

பெண்:
என்றாலும் எல்லைக்குள்ளே
நின்றால் தானே மாது

ஆண்:
மார்மீதும் தோள்மீதும்
சாய்ந்திருக்க

பெண்:
ஒ பாலாரும் தேனாரும்
பாய்ந்திருக்க

ஆண்:
புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு

பெண்:
முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உறவாடு

******************************************

பெண்:
என் மீது தூரல்கள் போட
மேகம் வர
அட அப்போது ராசாவே உந்தன்
மோகம் வர

ஆண்:
முப்பலுக் கப்பாலும் போகும்
எண்ணங்களே
ஒரு முத்தாரம் வைத்தாலும் போதும்
கன்னத்திலே

பெண்:
நீ ஒன்று வைத்தாலே
நான் ஒன்று வைப்பேனே

ஆண்:
நெஞ்சத்தை நெஞ்சோடு
நான் வைத்து தைப்பேனே

பெண்:
மிச்சத்தை மீதம் தன்னை
மாலை இட்டு பார்ப்போம்

ஆண்:
இன்பத்தை நானும் நீயும்
அள்ளி அள்ளி சேர்ப்போம்

பெண்:
மார்மீதும் தோள்மீதும்
சாய்ந்திருக்க

ஆண்:
ஒ ஒ ஒ பாலாரும் தேனாரும்
பாய்ந்திருக்க

பெண்:
முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உரவாடு

ஆண்:
வேங்குழலின் ஓசை எழ

பெ:
பாய் விரிக்கும் ஆசை எழ

ஆண்:
மார்மீதும் தோள்மீதும்
சாய்ந்திருக்க

பெண்:
ஒ பாலாரும் தேனாரும்
பாய்ந்திருக்க

ஆண்:
புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு

பெண்:
முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உறவாடு

******************************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...