படம்: துடிக்கும் கரங்கள்
இசை: எஸ் பி பாலசுப்ரமணியம்
******************************************
பெண் :
அடடா இதுதான் சுகமோ
மலர்களின் இதழ் வழி பனிமழை
விழும் சுகமோ
இனிமேல்
தினமும் விழாக்கோலமே
ஆண் :
அடடா இதுதான் சுகமோ
மலர்களின் இதழ் வழி பனிமழை
விழும் சுகமோ
இனிமேல்
தினமும் விழாக்கோலமே
******************************************
பெண் : விழிகளும் விழிகளும்
தழுவிடும் பொழுதினில்
ஏதோ ஏதோ லீலைகள்
ஆண் : விரல்களும் விரல்களும்
உரசிடும் பொழுதினில்
காதல் தீயின் ஜூவாலைகள்
பெண் :
கன்னங்களில் தாமரை
தாது தூவும்
சின்னங்களில் தேன்மழை சாரல் வீசும்
ஆண் : கருங்கூந்தலின்
ஊஞ்சலில் பூக்கள் ஆ டும்
பெண் : அடடா
ஆண் : ஆஹா ஹ ஹா
பெண் : இதுதான்
ஆண் : ஓஹோ ஹோ ஹோ
பெண் : சுகமோ
ஆண் – ஹ மலர்களின் இதழ் வழி பனிமழை
விழும் சுகமோ
பெண் : இனிமேல்
இருவரும் - தினமும் விழாக்கோலமே
******************************************
ஆண் :
ஒரு கொடி இடையினில் இருகுடை
பிடித்தது ஏனோ ஏனோ கண்மணி
பெண் :
தழுவிடும் இருவரின்
நிலவொளி சுடவரும்
நேரம் இதோ பௌர்ணமி
ஆண் :
நீலோர்பலம் கண்ணிலே ஜாடை காட்டும்
நான் தொட்டதும் குங்குமம்
சாயம் தீட்டும்
பெண் : உடல் வீணையின்
தந்திகள் என்னை மீட்டும்
ஆண் : அடடா
பெண் : ஆஹா ஹ ஹா
ஆண் : இதுதான்
பெண் : ஓஹோ… ஹோ ஹோ
ஆண் : சுகமோ
பெண் : மலர்களின் இதழ் வழி பனிமழை
விழும் சுகமோ
ஆண் : இனிமேல்
இருவரும் - தினமும் விழாக்கோலமே
லலாலலலா ஆ
லலாலலலா ஆ
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...