தமிழில் தேட.....

Friday, September 13, 2019

மெதுவா மெதுவா - அண்ணா நகர் முதல் தெரு பாடல் வரிகள்



படம்: அண்ணா நகர் முதல் தெரு
இசை: சந்திரபோஸ்

******************************************

பெண்:
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த
மின்னல் கீற்று...
ஆஆ ஆஆஆஆ ஆஆ

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு

******************************************

ஆண்:
உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே
நான் வாங்கும் மூச்செல்லாம்
என்றும் நீதானே
ஆத்தோரம் கொஞ்சிடும் தென்னஞ்சிட்டுத்தான்
அங்கே வா பேசலாம் அச்சம் விட்டுத்தான்

பெண்:
இளஞ்சிட்டு உனை விட்டு
இனி எங்கும் போகாது
இரு உள்ளம் புது வெள்ளம்
அணை போட்டால் தாங்காது

ஆண்:
ஆஆ ஆஆஆஆ ஆஆ
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த
மின்னல் கீற்று

பெண்:
ஆஆ ஆஆஆஆ ஆஆ
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு

******************************************

ஆண்: இராத்தூக்கம் ஏதம்மா கண்ணே உன்னாலே
பெண்: ராசாவே நானுந்தான் கண்கள் மூடல்லே

ஆண்: ஹா அன்பே உன் ஞாபகம் வாழும் என்னோடு
பெண்: ஒன்றல்ல ஆயிரம் ஜென்மம் உன்னோடு

ஆண்:
ஒரு சொந்தம் ஒரு பந்தம்
இரு ஜீவன் ஒன்றாகும்

பெண்:
இளங் கன்னி உனை எண்ணி
உயிர் காதல் பண் பாடும்

ஆண்:
ஆஆ ஆஆஆஆ ஆஆ
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு

பெண்: மலரும் மலரும் புது தாளம் போட்டு
ஆண்: புதுசா புதுசா அதை காதில் கேட்டு
பெண்: புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று

இருவரும்:
ஆஆ ஆஆஆஆ ஆஆ
ஆஹா ஆ ஹா ஆ ஆ ஆ ஆஹா
ஆஹா ஆ ஹா ஆ ஆ ஆ ஆஹா
******************************************

1 comment:

  1. கண்கள் 'மூடல்லே' என்று மலையாள வார்த்தை வந்தது சரியல்ல.

    ReplyDelete

உங்கள் கருத்து...