படம்: மீண்டும் கோகிலா
இசை: இளையராஜா
******************************************
பெண்:
ம்ம்….ம்ம்...ம்ம்..ம்ம்
ம்ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்.
பெண்:
சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி
சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி
******************************************
பெண்:
மோகனப் புன்னகையில் ஓர்நாள்
மூன்று தமிழ் படித்தேன்
மோகனப் புன்னகையில் ஓர்நாள்
மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர்
தத்துவம் சொல்லி வைத்தான்.
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர்
ஊமையைப் போலிருந்தேன்...
ஊமையைப் போலிருந்தேன்
ம்..ம்…ம்…
ஆண்:
ஆ….ஆ…...
கள்ளத்தனம் என்னடி
எனக்கோர் காவியம் சொல்லு என்றான்
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி
ஆண்: சபாஷ்
ஆண்: பலே
******************************************
ஆண்:
வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்.
வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்.
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா
பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது
கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே
மோதும் விரகத்திலே
செல்லம்மா ......ம்ம்...
பெண்:
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
பின்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...