படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா
******************************************
ஆண்:
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்
ஓம் நமஹா உருகும் உயிருக்கு
ஓம் நமஹா உயிரின் உணர்வுக்கு ஓம்
பெண்:
ஓம் நமஹா உணர்வின் உறவுக்கு
ஓம் நமஹா உறவின் உதவிக்கு ஓம்
ஆண்:
வான் வழங்கும் அமுத கலசம்
வாய்வழியே ததும்பி ததும்பி வழியிதோ ஓ
பெண்:
தேன் பொங்கும் தெய்வ வடிவம் தோள்
தழுவி தலைவன் மடியில் விழுந்ததோ
******************************************
ஆண்: மூங்கிலில் காற்று நுழைந்து மோகனம் பாடுதா
பெண்: நால்வகை நாணம் மறந்து நாடகம் ஆடுதா
ஆண்: ஆயிரம் சூரியன் நாடியில் ஏறுதா
பெண்: ஆதியும் அந்தமும் வேர்வைகள் ஊறுதா
ஆண்:
நூலாடை விலகி விலகி நீரோடை
பெருகி வடியும் வேளை
பெண்:
முத்தங்கள் வைத்ததும் மூன்று
உலகை மறந்த நெஞ்சுக்கு ஓம்
******************************************
பெண்:
செவ்விதழ் சேரும்போது
ஜீவன்கள் சிலிர்த்தது
ஆண்:
ஒவ்வொரு ஆசையாக
உள்ளத்தில் துளிர்த்தது
பெண்: மெல்லிய மேனியும் சில்லென ஆனது
ஆண்: வெட்கமும் சீக்கிரம் விடை பெற்றுப் போனது
பெண்:
ஏடென்று இடையும் இருக்க
நூலொன்று இதயம் எழுதாதோ
ஆண்:
இளமையின் இலக்கணம் எடுத்து
சொல்லிய இளைய கன்னிக்கு ஓம்
பெண்:
ஓம் நமஹா உருகும் உயிருக்கு
ஓம் நமஹா உயிரின் உணர்வுக்கு ஓம்
ஆண்:
ஓம் நமஹா உணர்வின் உறவுக்கு
ஓம் நமஹா உறவின் உதவிக்கு ஓம்
பெண்:
வான் வழங்கும் அமுத கலசம்
வாய்வழியே ததும்பி ததும்பி வழியிதோ ஓ
ஆண்:
தேன் பொங்கும் தெய்வ வடிவம் தோள்
தழுவி தலைவன் மடியில் விழுந்ததோ
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...