தமிழில் தேட.....

Saturday, November 9, 2019

ஓம் நமஹா - இதயத்தை திருடாதே பாடல் வரிகள்



படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்
ஓம் நமஹா உருகும் உயிருக்கு
ஓம் நமஹா உயிரின் உணர்வுக்கு ஓம்

பெண்:
ஓம் நமஹா உணர்வின் உறவுக்கு
ஓம் நமஹா உறவின் உதவிக்கு ஓம்

ஆண்:
வான் வழங்கும் அமுத கலசம்
வாய்வழியே ததும்பி ததும்பி வழியிதோ ஓ

பெண்:
தேன் பொங்கும் தெய்வ வடிவம் தோள்
தழுவி தலைவன் மடியில் விழுந்ததோ

******************************************

ஆண்: மூங்கிலில் காற்று நுழைந்து மோகனம் பாடுதா

பெண்: நால்வகை நாணம் மறந்து நாடகம் ஆடுதா

ஆண்: ஆயிரம் சூரியன் நாடியில் ஏறுதா

பெண்: ஆதியும் அந்தமும் வேர்வைகள் ஊறுதா

ஆண்:
நூலாடை விலகி விலகி நீரோடை
பெருகி வடியும் வேளை

பெண்:
முத்தங்கள் வைத்ததும் மூன்று
உலகை மறந்த நெஞ்சுக்கு ஓம்

******************************************

பெண்:
செவ்விதழ் சேரும்போது
ஜீவன்கள் சிலிர்த்தது

ஆண்:
ஒவ்வொரு ஆசையாக
உள்ளத்தில் துளிர்த்தது

பெண்: மெல்லிய மேனியும் சில்லென ஆனது

ஆண்: வெட்கமும் சீக்கிரம் விடை பெற்றுப் போனது

பெண்:
ஏடென்று இடையும் இருக்க
நூலொன்று இதயம் எழுதாதோ

ஆண்:
இளமையின் இலக்கணம் எடுத்து
சொல்லிய இளைய கன்னிக்கு ஓம்

பெண்:
ஓம் நமஹா உருகும் உயிருக்கு
ஓம் நமஹா உயிரின் உணர்வுக்கு ஓம்

ஆண்:
ஓம் நமஹா உணர்வின் உறவுக்கு
ஓம் நமஹா உறவின் உதவிக்கு ஓம்

பெண்:
வான் வழங்கும் அமுத கலசம்
வாய்வழியே ததும்பி ததும்பி வழியிதோ ஓ

ஆண்:
தேன் பொங்கும் தெய்வ வடிவம் தோள்
தழுவி தலைவன் மடியில் விழுந்ததோ

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...