படம்: தலை வாசல்
இசை: பாலபாரதி
******************************************
ஆண்:
உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
பெண்:
பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசிப் போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா
ஆண்:
உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
******************************************
ஆண்:
தலைவி உந்தன் கண் பார்க்கும் பொழுதே
தலைப்புச் செய்தி தந்தாயே
தலைப்புச் செய்தி புரியாமல் தவித்தேன்
தலைப்பைக் கையில் தந்தாயே
பெண்:
உறங்கும் போதும் உந்தன் பேரைச்
சொல்லிப் பார்க்கிறேன்
உன்னைக் கண்டு பேசும் போதோ
உச்சி வேர்க்கிறேன்
ஆண்:
இந்த சுந்தர வார்த்தைகள் தந்தது யாரடி
(சிரிப்பு) உன்னைக் கேட்கிறேன்
பெண்:
உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
ஆண்:
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
******************************************
பெண்:
உன்னை எண்ணி என் மேனி மெலிய
உருகி உருகி நூலானேன்
உன்னைக் கண்டு ஓர் வார்த்தை மொழிய
உடைந்து உடைந்து தூளானேன்
ஆண்:
பார்க்க வந்த சேதி மட்டும்
சொன்ன முல்லையே
பருவம் வந்த தேதி மட்டும்
சொல்ல வில்லையே
பெண்:
நீ பார்வையில் காதலன்
பழக்கத்தில் கோவலன்
சொல்ல வில்லையே
(ஆண்: சிரிப்பு)
ஆண்:
உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
பெண்:
பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசிப் போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா
ஆண்:
உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு
ம்ஹூம் (சிரிப்பு)
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன
(பெண்: சிரிப்பு)
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...