தமிழில் தேட.....

Showing posts with label பகவதிபுரம் ரயில்வேகேட். Show all posts
Showing posts with label பகவதிபுரம் ரயில்வேகேட். Show all posts

Wednesday, May 13, 2020

செவ்வரளி தோட்டத்தில - பகவதிபுரம் ரயில்வேகேட் பாடல் வரிகள்



படம்: பகவதிபுரம் ரயில்வேகேட்
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
தானானே ஏஏ ஏஏஏஏஏ
தானானா ஆஆஆஆ ஆஆஆஆ
தானானா ஆஆஆஆ

பெண்:
செவ்வரளி தோட்டத்தில உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு

அக்கம் பக்கம் யாருமில்லே ஆளுங்க அரவமில்ல
சுத்தும் முத்தும் பாக்கயிலே
துடிப்பும் அடங்குதில்ல

செவ்வரளி தோட்டத்தில உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு

*********************************

ஆண்:
கொட்டுகிற அருவியிலே குளிக்கிற குருவிகளே
பட்டுடம்பு நனையையிலே பசிக்குது மனசினிலே
பொன்னுடம்ப பாக்கயிலே போதையும் தீரவில்ல
அன்னமே

பெண்:
வெக்கமது உங்களுக்கில்ல
வெக்கம் மறந்தா பொம்பள இல்ல
ஆசைய சொல்ல நெனச்சேன்
சொல்லாமத்தான் விட்டேனே

ஆண்:
செவ்வரளி தோட்டத்தில உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு

*********************************


ஆண்:
ஆ ஆஆஆ ஆஆஆ

ஐலேசா ஐலேசா ஹோய் ஹா  ஹோய் ஹா
ஐலேசா ஐலேசா ஹோய் ஹா  ஹோய் ஹா

ஆடும் அலை ஓயாதம்மா ஆசை அது தேயாதம்மா
வாடப்பட்டு நின்னாளம்மா வாசம் பட்ட பூவாட்டம்
மனசுல கொண்டாட்டம்
மலருற செண்டாட்டம்
ஆடும் அலை ஓயாதம்மா
ஆசை அது தேயாதம்மா

*********************************

பெண்:
ஒண்ணுக்கொண்ணு ஒறவிருந்தா நெஞ்சுக்கொரு சொகமிருக்கும்
சொந்தத்திலே பலமிருந்தா சொர்க்கத்திலும் இடமிருக்கும்
உன்னைவிட யாருமில்லே ஒட்டுறவு தேவையில்லே
என்னய்யா

ஆண்:
என்னமோ சொல்ல நெனச்சேன்
என்ன தொட்டதும் சொல்ல மறந்தேன்
என்ன என்ன எண்ணமிருக்கோ
எல்லாத்திலும் நீதானே

பெண்:
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு (ஆண்: ஆ )
தேடிக்கிட்டு பாடுதய்யா இந்த மனசு

ஆண்:
அக்கம் பக்கம் யாருமில்லே
ஆளுங்க அரவமில்ல
சுத்தும் முத்தும் பாக்கயிலே
துடிப்பும் அடங்குதில்ல
செவ்வரளி தோட்டத்திலே உன்ன நெனச்சு
தேடிக்கிட்டு பாடுதம்மா இந்த மனசு

*********************************

Monday, May 11, 2020

ஆசை நெஞ்சில்- பகவதிபுரம் ரயில்வேகேட் பாடல் வரிகள்



படம்: பகவதிபுரம் ரயில்வேகேட்
இசை: இளையராஜா

*********************************

ஆசை நெஞ்சில்‌
இனி தீபம்‌ இல்லை
பூசையில்லை
இங்கே  தேவி இல்லை

ஆகாது பெண்ணின்‌ உள்ளம்‌
ஆழம்‌ காண யாரால்‌ ஆகும்‌
ஆகாது பெண்ணின்‌ உள்ளம்‌
ஆழம்‌ காண யாரால்‌ ஆகும்‌
ஆற்றங்கரை கனவு கண்ணில்‌
ஆராரோரோ ஆயிரம்தானோ

ஆசை நெஞ்சில்‌
இனி தீபம்‌ இல்லை
பூசையில்லை
இங்கே  தேவி இல்லை

*********************************


நீ சூடும்‌ பூவும்‌ பொட்டும்‌
காதல்‌ செய்த பாவம்‌
நான்‌ பாடும்‌ பாடல்‌ கேட்டு
யாருக்கென்ன லாபம்‌

கண்ணால்‌ ஜாடை முன்னாலேயே
சொன்னால்‌ கூட போதாதோ
ஆஅஆ

நீ சூடும்‌ பூவும்‌ பொட்டும்‌
காதல்‌ செய்த பாவம்‌
நான்‌ பாடும்‌ பாடல்‌ கேட்டு
யாருக்கென்ன லாபம்‌
கண்ணால்‌ ஜாடை முன்னாலேயே
சொன்னால்‌ கூட போதாதோ

நீயாக தேடி வந்து
தீயாக நெஞ்சில்‌ நின்று
பொன்னா என்றா என்னை
சுட்டுப்‌ பார்த்தாய்‌
ஆஅஆ

ஆசை நெஞ்சில்‌
இனி தீபம்‌ இல்லை
பூசையில்லை
இங்கே  தேவி இல்லை

*********************************

கல்யாண கோலம்‌ கண்டேன்‌
காலில்‌ மெட்டி தாளம்‌
நல்வாழ்த்து பாட வந்தேன்‌
கண்ணில்‌ என்ன ஈரம்‌

ஏதோ ஏழு ஜென்மம்‌ உண்டாம்‌
நாமும்‌ ஒன்று சேர்வோமே
ஆஆஆஆ

கல்யாண கோலம்‌ கண்டேன்‌
காலில்‌ மெட்டி தாளம்‌
நல்வாழ்த்து பாட வந்தேன்‌
கண்ணில்‌ என்ன ஈரம்‌

ஏதோ ஏழு ஜென்மம்‌ உண்டாம்‌
நாமும்‌ ஒன்று சேர்வோமே

நீ பார்த்த பார்வை நெஞ்சில்‌
பால்‌ வார்க்கும்போதும்‌ மிஞ்சும்‌
வாழ்நாள்‌ என்றும்‌
நீதான்‌ என்றே வாழ்வேன்‌ நான்‌

ஆசை நெஞ்சில்‌
இனி தீபம்‌ இல்லை
பூசையில்லை
இங்கே  தேவி இல்லை

ஆகாது பெண்ணின்‌ உள்ளம்‌
ஆழம்‌ காண யாரால்‌ ஆகும்‌
ஆகாது பெண்ணின்‌ உள்ளம்‌
ஆழம்‌ காண யாரால்‌ ஆகும்‌
ஆற்றங்கரை கனவு கண்ணில்‌
ஆராரோரோ ஆயிரம்தானோ

ஆசை நெஞ்சில்‌
இனி தீபம்‌ இல்லை
பூசையில்லை
இங்கே  தேவி இல்லை

*********************************

Sunday, May 10, 2020

தென்றல்‌ காற்றும்‌ அன்பு பாட்டும்‌ - பகவதிபுரம் ரயில்வேகேட் பாடல் வரிகள்


படம்: பகவதிபுரம் ரயில்வேகேட்
இசை: இளையராஜா

*********************************

ம்ம்‌ ம்‌ ம்‌ ம்ம்‌
ம்ம்ம்‌ ம்‌ ம்‌ ம்ம்ம்‌

தென்றல்‌ காற்றும்‌ அன்பு பாட்டும்‌
மங்கை வாழ்வில்‌ ஏது
கண்கள்‌ ஓரம்‌ பொங்கும்‌ ஈரம்‌
நாளும்‌ காணும்‌ மாது
சுடு நெருப்பின்‌ மீது
மலர்‌ விழுந்தது
இனி வசந்தம்‌ ஏது மனம்‌ தவிக்குது
தென்றல்‌ காற்றும்‌ அன்பு பாட்டும்‌
மங்கை வாழ்வில்‌ ஏது

*********************************

பூவை எந்தன்‌ உள்ளம்‌
தேவன்‌ வாழும்‌ இல்லம்‌
பூவை எந்தன்‌ உள்ளம்‌
காற்றிலே மேகம்‌ போல்‌
எந்தன் ஆசை தேய்ந்ததே

வாராயோ கேளாயோ
எழில்‌ முழுமதி தேய்கிறதே

தென்றல்‌ காற்றும்‌ அன்பு பாட்டும்‌
மங்கை வாழ்வில்‌ ஏது
கண்கள்‌ ஓரம்‌ பொங்கும்‌ ஈரம்‌
நாளும்‌ காணும்‌ மாது
சுடு நெருப்பின்‌ மீது
மலர்‌ விழுந்தது

*********************************

வெள்ளி வண்ண ஆடை
நெஞ்சில்‌ கொண்ட பாவை
வெள்ளி வண்ண ஆடை
நெஞ்சில்‌ கொண்ட பாவை

மின்னலை தேடியே
தாழம்பூவும்‌ ஏங்குதே

பாராயோ கேளாயோ
இரு மனம்‌ அலை மோதிடுதே

தென்றல்‌ காற்றும்‌ அன்பு பாட்டும்‌
மங்கை வாழ்வில்‌ ஏது
சுடு நெருப்பின்‌ மீது
மலர்‌ விழுந்தது
இனி வசந்தம்‌ ஏது மனம்‌ தவிக்குது
தென்றல்‌ காற்றும்‌ அன்பு பாட்டும்‌
மங்கை வாழ்வில்‌ ஏது
ம்ம்‌ ம்‌ ம்‌ ம்ம்‌
ம்ம்ம்‌ ம்‌ ம்‌ ம்ம்ம்‌

*********************************

Saturday, May 9, 2020

காலை நேர காற்றே - பகவதிபுரம் ரயில்வேகேட் பாடல் வரிகள்



படம்: பகவதிபுரம் ரயில்வேகேட்
இசை: இளையராஜா

*********************************

பெண்:
காலை நேர காற்றே வாழ்த்திச் செல்லு
மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு

காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி
தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்
காலை நேர காற்றே வாழ்த்திச் செல்லு
மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு

*********************************

ஆண்:
நடந்தால் காவேரி நீ
ஈஈஈஈ
நகைத்தால் ஸ்ரீதேவி தான்

பெண்:
மொழியே தேவாரமோ
ஓஓஓஓ
விழி மேல் பாமாலையோ

ஆண்:
கனவாய் நீயானால்
இமையால் நான் பூட்டுவேன்

பெண்:
மனமே நீயாள
மணித்தேர் நானோட்டுவேன்

ஆண்:
கன்னி தேரில் சாமரம் வீசும்
பின்னல் மீதும் பூவின வாசம்

பெண்:
பொதிகை தமிழில் கவிதை பொழியும்
பாரதி தோழனோ


ஆண்:  காலை நேர காற்றே வாழ்த்திச் செல்லு
பெண்: வாழ்த்திச் செல்லு
ஆண்:  மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு

பெண்:
பார்த்துச் சொல்லு
காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி
தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்

ஆண்:  காலை நேர காற்றே வாழ்த்திச் செல்லு
பெண்: வாழ்த்திச் செல்லு
ஆண்: மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு
பெண்: பார்த்துச் சொல்லு

*********************************

பெண்:
மடித்தேர் ராஜாங்கமே
ஏஏஏஏஏஏ
கிடைத்தால் மாமாங்கமே

ஆண்:
மலைத்தேன் மேலோங்கவே
ஏஏஏஏஏஏ
இளைத்தேன் நான் ஏங்கியே

பெண்:
கனி வாய் தேனாற்றில்
ஒரு நாள் நீராட்டுவாய்

ஆண்:
இதழாம் தீரத்தில்
மறுநாள் பாராட்டுவேன்

பெண்:
அந்தி வானில் குங்கும சேலை
தங்க மேக சங்கம மாலை

ஆண்:
நயன மலரின் சயன அறையில்
நாயன ஓசையோ

பெண்: காலை நேர காற்றே வாழ்த்திச் செல்லு
ஆண்: வாழ்த்திச் செல்லு
பெண்: மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு

ஆண்:
பார்த்துச் சொல்லு
காதல் தீபம் கண்ணில் ஏற்றி ஏற்றி
தாகம் தீரும் நேரம் சேவல் கூவும்

பெண்: காலை நேர காற்றே வாழ்த்திச் செல்லு
ஆண்: வாழ்த்திச் செல்லு
பெண்: மாலை சூடும் நாளை பார்த்துச் சொல்லு
ஆண்: பார்த்துச் சொல்லு

*********************************