தமிழில் தேட.....

Thursday, April 30, 2020

காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும்- இதயத்தை திருடாதே பாடல் வரிகள்


படம் : இதயத்தை திருடாதே
இசை : இளையராஜா

*********************************

குழு : ஆஆஆ ஆஆஆ

பெண் :
ஓஓ ஓஓஓஓ
ஓஓஓஓ ஓஓஓஓ
காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும்
கன்னிப் பூவும் நான்தானோ
கிட்ட வந்து கொஞ்ச சொல்லும்
சின்னப்பொண்ணும் நான்தானோ
நிழலாய் தான் ஓட
நானோ உன் கூட

பெண்:  என் ஊர் என்ன
குழு:  என்ன
பெண்: என் பேர் என்ன
குழு: என்ன
பெண்: நான் தான் யாரு
குழு : யாரு
பெண் : என் வழி யாரு
குழு : ஹேஹேஹே

பெண் : ஓஓ ஓஓஓஓ
ஓஓஓஓ ஓஓஓஓ

*********************************

பெண் :
எந்நாளும் ஆசைகள் என்னை விடுமோ
நீ தழுவ நான் வரவோ
இந்நாளில் சூடாகும் என் மனமும்
கண் விழிமேல் நீ இல்லையோ

மோகினி பிசாசு என் இனம்தான்
சாத்தானின் பேய் கூட என் நிழல்தான்
மோகினி பிசாசு என் இனம்தான்
சாத்தானின் பேய் கூட என் நிழல்தான்
பருவத் துணை மயக்கி உன்னை
பாய் போட நீ வாடா

காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும்
கன்னிப் பூவும் நான்தானோ

*********************************

குழு :
பூத பிரேத பிசாசு
வேதாள பேயின் ஜம்பம்
ஜடம்பாம்பாம்

ஆண் :
காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும்
கன்னிப் பூவும் நீதானோ
கிட்டவந்து கொஞ்ச சொல்லும்
சின்னப் பொண்ணும் நீதானோ
நிழலாய்த் தான் ஓட
நானோ உன் கூட

ஏன் சபலம் வருதா
நீயும் காட்டுக்கு புதிதா
நீ மயங்கும பொழுதா
நானும் புடிச்சுக்க தோதா

குழு :
ஹா ஹா ஹா ஹா ஆஹா
ஓஓ ஓஓ ஓ

ஆண் :
ராத்திரி நேர பூஜைகள் எல்லாம்
இப்போ இனிமேல்தான்
அருகினில் வருவேன்டி
ஆசையில் தொடுவேன்டி

குண்டலி ஏற சொக்குற பூஜை
இப்போ இனிமேல்தான்
சட்டுன்னு போடத்தான்
சுள்ளுன்னு ஏறாதா

நில்லடி மானே போக்கிரி பெண்ணே
பெண் பேய் உன்னைப் பார்த்தா
நாளொரு மோகம் ஏறிடும் கண்ணே
அதுதான் அடங்காதா
நில்லடி மானே போக்கிரி பெண்ணே
பெண் பேய் உன்னைப் பார்த்தா
நாளொரு மோகம் ஏறிடும் கண்ணே
அதுதான் அடங்காதா

அடி ஆத்தி பட் பட் பட் பட்
விலகாதே ஜட் பட் ஜட் பட்
போ பெண்ணே மயக்கங்கள்
எதுக்கு நான் கூட

காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும்
கன்னிப்பூவும் நீதானோ (ஆஹா)
கிட்ட வந்து கொஞ்ச சொல்லும்
சின்னப் பொண்ணும் நீதானோ
நிழலாய்த்தான் ஓட ட ட ட
நானோ உன் கூட

ஏன் சபலம் வருதா
நீயும் பாட்டுக்கு புதிதா
நீ மயங்கும் பொழுதா
நானும் புடிச்சுக்க தோதா

குழு :
ஆஆஆஆஆ
ஓஓ ஓஹோ

ஆண் :
காட்டுக்குள்ளே பாட்டு சொல்லும்
கன்னிப்பூவும் நீதானோ
கிட்ட வந்து கொஞ்ச சொல்லும்
சின்னப் பொண்ணும் நீதானோ

*********************************

Wednesday, April 29, 2020

ஓ ப்ரியா ப்ரியா - இதயத்தை திருடாதே பாடல் வரிகள்

படம் : இதயத்தை திருடாதே
இசை : இளையராஜா

*********************************

ஆண்:
ஆஆஆ ஆ
ஆஆஆ ஆ
ஆஆஆ ஆ
ஆஆஆ ஆ
ம்ம்ம் ம்ம்ம்

ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஏழை காதல் வாழுமோ
இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நான் ஓர் ஓரம்
கானல் நீரால் தாகம் தீராது


பெண்:
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
இணைந்திடாது போவதோ
வானம் பூமி ஆவதோ
காலம் சிறிது காதல் மனது
தேவன் நீதான் போனால் விடாது

ஆண்:
தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வு பொய்யடி

*********************************

குழு :
ஆஆஆ ஆ
ஆஆஆ ஆ
ஆஆஆ ஆ
ஆஆஆ ஆ
ஆஆஆ ஆ

பெண்:
அன்பு கொண்ட கண்களும்
ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணையிட்டு மாறுமோ
பெண்மை தாங்குமோ

ஆண்:
ராஜ மங்கை கண்களே
என்றும் என்னை மொய்ப்பதோ
வாடும் ஏழை இங்கு ஓர்
பாவி அல்லவோ

பெண்:
எதனாலும் ஒரு நாளும்
மறையாது பிரேமையும்

ஆண்:
எரித்தாலும் மரித்தாலும்
விலகாத பாசமோ

பெண்:
கன்னி மானும் உன்னுடன்
கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே
குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ
ஆ நீ வா வா


ஆண்:
ஓ ப்ரியா ப்ரியா
என் ப்ரியா ப்ரியா

பெண்:
ஓ ப்ரியா ப்ரியா
உன் ப்ரியா ப்ரியா

*********************************

குழு :
ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

பெண்:
காளிதாசன் ஏடுகள்
கண்ணன் ராசலீலைகள்
பருவமோகம் தந்தது
பாவம் அல்லவே

ஆண்:
ஷாஜகானின் காதலி
தாஜ்மஹல் பூங்கிளி
பாசம் வைத்த பாவம்தான்
சாவும் வந்தது

பெண்:
இறந்தாலே இறவாது
விளைகின்ற பிரேமையே

ஆண்:
அடி நீயே பலியாக
வருகின்ற பெண்மையே

பெண்:
விழியில் பூக்கும் நேசமாய்
புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே
இங்கு வெற்றி கொள்ளுமே
இளங்கன்னி உன்னுடன் கூட வா வா

ஆண்:
ஓ ப்ரியா ப்ரியா
என் ப்ரியா ப்ரியா

பெண்:
ஓ ப்ரியா ப்ரியா
உன் ப்ரியா ப்ரியா

ஆண்:
ஏக்கம் என்ன பைங்கிளி
என்னை வந்து சேரடி

பெண்:
நெஞ்சிரண்டு நாளும் பாட
காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மங்களம்
பிரேமை நாடகம் பெண்மை ஆடிடும்

*********************************

காவியம் பாடவா தென்றலே- இதயத்தை திருடாதே பாடல் வரிகள்



படம் : இதயத்தை திருடாதே
இசை : இளையராஜா

*********************************

காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ
பாடும் நீலப் பூங்குயில்
மௌனமான வேளையில்
காவியம் பாடவா தென்றலே
காவியம் பாடவா தென்றலே

*********************************

விளைந்ததோர் வசந்தமே
புதுச்சுடர் பொழிந்திட
மனத்திலோர் நிராசையே
இருட்டிலே மயங்கிட
வாழ்கின்ற நாட்களே
சோகங்கள் என்பதை
கண்ணீரில் தீட்டினேன்
கேளுங்கள் என்கதை
கலைந்து போகும் கானல் நீரிது

காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ

*********************************

புலர்ந்ததோ பொழுதிதுவோ
புள்ளினத்தின் மகோத்ஸவம்
இவை மொழி இசைத்ததும்
சுரங்களின் மனோகரம்
புதுப் பிரபஞ்சமே
மலர்ந்த நேரமே
அம்மாடி சொர்கம்தான்
முன்னாடி வந்ததோ
கசந்து போன காட்சி இல்லையே

காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேளை
இனிதான பொழுது எனதாகுமோ
புரியாத புதிர்தான் எதிர்காலமோ
பாடும் நீலப் பூங்குயில்
மௌனமான வேளையில்
காவியம் பாடவா தென்றலே
காவியம் பாடவா தென்றலே

*********************************

Monday, April 27, 2020

ஓ பாப்பா லாலி- இதயத்தை திருடாதே பாடல் வரிகள்



படம் : இதயத்தை திருடாதே
இசை : இளையராஜா

*********************************

ஓ பாப்பா லாலி கண்மணி லாலி
பொன்மணி லாலி பாடினேன் கேளடி

ஓ பாப்பா லாலி கண்மணி லாலி
பொன்மணி லாலி பாடினேன் கேளடி

ஓ பாப்பா லாலி

*********************************

நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட
காதலன் குழந்தைதான் காதலி
ஏன் செவ்விழி கலங்குது பூந்தென்றலில்
கொதித்ததா குளிர்ந்ததா கூறடி

தலை சாய்த்திட மடிபாய் மேல்
திருமேனிக்கு சுகமோ
எந்த நாளிலும் வாடாத
இளந்தாமரை முகமோ

இதைக் காப்பது என்றும் பார்ப்பது
இந்த தாய் மனமே

ஓ பாப்பா லாலி கண்மணி லாலி
பொன்மணி லாலி பாடினேன் கேளடி
ஓ பாப்பா லாலி

*********************************

ஓ மேகமே ஓரமாய் நீ ஒதுங்கிடு
இரைச்சலோ இடிகளோ வேண்டுமோ

ஓ குயிலியே பாடிவா என் பாடலை
நல்லிசை இதயத்தின் நாதமோ

எழும் சந்தமும் இனிதாக
அதன் ஓசைகள் சுகமோ
இந்த நாளொரு அலைபாய
வரும் ஆசைகள் கனவோ

எந்த ஆசையும் நிறைவேறிட
நல்ல நாள் வருமே

ஓ பாப்பா லாலி கண்மணி லாலி
பொன்மணி லாலி பாடினேன் கேளடி
ஓ பாப்பா லாலி கண்மணி லாலி
பொன்மணி லாலி பாடினேன்

*********************************

Saturday, April 25, 2020

நம்ம ஊரு சிங்காரி- நினைத்தாலே இனிக்கும் பாடல் வரிகள்



படம் : நினைத்தாலே இனிக்கும்
இசை : இளையராஜா

*********************************

நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்

ஹா ஹா
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹாங்
மன்மதன் வந்தானா
நம்ம சங்கதி சொன்னானா
மன்மதன் வந்தானா
நம்ம சங்கதி சொன்னானா
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
ஹே ஹே ஹே ஹே ஹே ஹேய்

*********************************

பாலாடை போலாடும் பாப்பா
எப்பொதும் நான் சொன்னா கேப்பா
ராஜாவை பார்க்காமல் ரோஜா
ஏமாந்து போனாளோ லேசா
நான் நாள வச்சு தேதி வச்சு
ஊரு விட்டு ஊரு வந்து
நீயின்றி போவேனோ சம்போ
நான் மூணு மெத்தை வீடுகட்டி
மாடி மேல ஒன்ன வெச்சு
பார்க்காமல் போவேனோ சம்போ
மன்மதன் வந்தானா
நம்ம சங்கதி சொன்னானா
மன்மதன் வந்தானா
நம்ம சங்கதி சொன்னானா
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பபபபபப பபப்பா பாபபபப

*********************************

அன்பான உன் பேச்சு ராகம்
நடை போட்டு நீ வந்தா தாளம்
சுகமான உன் மேனி பாடல்
இதிலென்ன இனிமேலும் ஊடல்
அந்த தேவதைக்கு நீயும் சொந்தம்
தேவனுக்கு நானும் சொந்தம்
பூலோகம் தாங்காது வாம்மா
நம்ம காதலுக்கு ஈடு சொல்ல
காவியத்தில் யாருமில்லை
நானொன்று நீயொன்றுதாம்மா
மன்மதன் வந்தானா ஹா
நம்ம சங்கதி சொன்னானா
மன்மதன் வந்தானா
நம்ம சங்கதி சொன்னானா
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
ராப்பா பாப்பா பாப்பா ரபபாப்பா

*********************************

இளமை என்னும் பூங்காற்று- பகலில் ஒரு இரவு பாடல் வரிகள்



படம் : பகலில் ஒரு இரவு
இசை : இளையராஜா

*********************************

இளமை என்னும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்

இளமை என்னும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை
ஒரே ராகம்

*********************************

தன்னை மறந்து
மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு
மண்ணில் அணையா

இளமை என்னும் பூங்காற்று


*********************************

அங்கம் முழுதும்
பொங்கும் இளமை
இதம் பதமாய் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தாள் மறந்தாள்
கேள்வி எழும் முன் விழுந்தாள்
எந்த உடலோ
எந்த உறவோ

இளமை என்னும் பூங்காற்று

*********************************

மங்கை இனமும்
மன்னன் இனமும்
குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் கலைந்த கனியே
கொஞ்சிச் சுவைத்த கிளியே
இந்த நிலைதான்
என்ன விதியோ

இளமை என்னும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை
ஒரே ராகம்

ஒரே வீணை
ஒரே ராகம்
ஒரே வீணை
ஒரே ராகம்

*********************************

Friday, April 24, 2020

இள நெஞ்சே வா - வண்ண வண்ண பூக்கள் பாடல் வரிகள்



படம் : வண்ண வண்ண பூக்கள்
இசை : இளையராஜா

*********************************

இள நெஞ்சே வா
நீ இங்கே வா
இள நெஞ்சே வா  தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கேப் பார்
மஞ்சள் வான்முகில்
கையால் நாம் தொடலாம்
கண்ணோடு ஒரு சந்தோஷம்
என்னோடு ஒரு சங்கீதம்
இந்நேரம்

இள நெஞ்சே வா
தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கேப் பார்
மஞ்சள் வான்முகில்
கையால் நாம் தொடலாம்

*********************************

பச்சைப்புல் மெத்தை விரிக்கும்
அங்கே இளம் தத்தைகள்
தத்தி குதிக்கும்
பட்டு பூ மொட்டு விரிக்கும்
செந்தேன் பெற
பொன்வண்டு வட்டம் அடிக்கும்
சுற்றிலும் மூங்கில் காடுகள்
தென்றலும் தூங்கும் வீடுகள்
உச்சியின் மேலே பார்க்கிறேன்
பட்சிகள் வாழும் கூடுகள்
மண்ணின் ஆடைப்போலே
வெள்ளம் ஓடுதே
அங்கே நாரை கூட்டம்
செம்மீன் தேடுதே
இந்நேரம்

இள நெஞ்சே வா
தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கேப் பார்
மஞ்சள் வான்முகில்
கையால் நாம் தொடலாம்

கண்ணோடு ஒரு சந்தோஷம்
என்னோடு ஒரு சங்கீதம்
இந்நேரம்
இள நெஞ்சே வா
தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கேப் பார்
மஞ்சள் வான்முகில்
கையால் நாம் தொடலாம்

*********************************

அற்புதம் என்ன உரைப்பேன்
இங்கே வர எப்பவும் என்னை மறப்பேன்
கற்பனை கொட்டி குவிப்பேன்
இங்கே அந்த கம்பனை வம்புக்கிழுப்பேன்
வர்ணித்து பாடும் கவிஞன் நான்
வண்ணங்கள் தீட்டும் கலைஞன் நான்
சிந்தனைத் தேரில் ஏறியே
சுற்றிட ஏங்கும் இளைஞன் நான்
கண்ணில் காணும் யாவும்
என்னை தூண்டுதே
எந்தன் கைகள் நீண்டு
விண்ணை தீண்டுதே
இந்நேரம்

இள நெஞ்சே வா
தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கேப் பார்
மஞ்சள் வான்முகில்
கையால் நாம் தொடலாம்
கண்ணோடு ஒரு சந்தோஷம்
என்னோடு ஒரு சங்கீதம்
இந்நேரம்
இள நெஞ்சே வா
தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கேப் பார்
மஞ்சள் வான்முகில்
கையால் நாம் தொடலாம்

*********************************

Thursday, April 23, 2020

கல்யாண மாலை - புது புது அர்த்தங்கள் பாடல் வரிகள்



படம் : புது புது அர்த்தங்கள்
இசை : இளையராஜா

*********************************

ஆண்:
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் ￰துணையாகும் சம்சார சங்கீதமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்

*********************************

ஆண்:
வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
சுருதியோடு லயம் போலவே இணையாகும்
துணையாகும் சம்சார சங்கீதமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்

*********************************

குழு:

ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்

ஆண்:
கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலை மயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்
மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
சுருதியோடு லயம் போலவே இணையாகும்
துணையாகும் சம்சார சங்கீதமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்மம்ம்ம்ம் ம்ம்மம்ம்ம்ம்

*********************************

பாடவா உன் பாடலை- நான் பாடும் பாடல் பாடல் வரிகள்


படம் : நான் பாடும் பாடல்
இசை : இளையராஜா

*********************************

ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ
ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ
ஆஆஆ ஆஆஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை
என் வாழ்விலே ஒர் பொன் வேளை ஹோ
என் வாழ்விலே ஒர் பொன் வேளை ஹோ
பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை

*********************************

வாடை பூங்காற்று என்னை தீண்டும்
வாழ்க்கை யாவும் நீ வேண்டும்
வாடை பூங்காற்று என்னை தீண்டும்
வாழ்க்கை யாவும் நீ வேண்டும்
கடலோடு அலை போல உறவாட வேண்டும்
இலை மோதும் மலர் போல எனை மூட வேண்டும்
என் தேகம் எங்கும் உன் கானம் தங்கும்
நீ வந்து கேளாமல் ஏங்கும் தமிழ் சங்கம்
பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை

*********************************

உன்னை காணாமல் கண்கள் பொங்கும்
அதுவே நெஞ்சின் ஆதங்கம்
உன்னை காணாமல் கண்கள் பொங்கும்
அதுவே நெஞ்சின் ஆதங்கம்
உனக்காக என் பாடல் அரங்கேறும் வேளை
நீ கேட்க வழி இல்லை இது என்ன லீலை
பூ மேகம் இங்கே ஆகாயம் எங்கே
நீ சென்ற வழி பார்த்து
வாடும் உன் பூ இங்கே
பாடவா உன் பாடலை
என் வாழ்விலே ஒர் பொன் வேளை ஹோ
என் வாழ்விலே ஒர் பொன் வேளை ஹோ
பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை

*********************************

Monday, April 13, 2020

புத்தம் புது பூ பூத்ததோ- தளபதி பாடல் வரிகள்


படம் : தளபதி
இசை : இளையராஜா

*********************************

ஆண்:
ஆ  ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ
ஆ ஆஆஆ ஆஆஆ ஆ
புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே

புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே

வாய் பேசும் வார்த்தையெல்லாம்
கண் பேசும் அல்லவோ
கண் பேசும் வார்த்தையைத்தான்
கண்ணீரும் சொன்னதோ

புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே

*********************************

ஆண் :
பால் நிலா தேய்கின்றதென்று
பகலிரவும் என் நெஞ்சம்
பழி விழுமோ என்றஞ்சும்

பெண் :
ஆதவன் நீ தந்ததன்றோ
நிலவு மகள் என் வண்ணம்
நினைவுகளில் உன் எண்ணம்

ஆண் :
கருணைக் கொண்டு நீ தான்
காயம் தன்னை ஆற்ற

பெண் :
பார்வைக் கொண்டு நீ தான்
பாச தீபம் ஏற்ற

ஆண் :
உயிரென நான் கலந்தேன்

பெண் :
புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே

*********************************

பெண் :
வாழ்வெனும் கோலங்கள் இன்று
வரைந்தது உன் பொன்னுள்ளம்
நெகிழ்ந்தது என் பெண் உள்ளம்

ஆண் :
கீழ்த்திசை பூபாளம் என்று
எழுந்தது பார் நம் கானம்
விடிந்தது நம் செவ்வானம்

பெண் :
கூந்தல் மீது பூவாய்
நானும் உன்னை சூட

ஆண் :
தோகை உன்னை நான்தான்
தோளில் இன்று வாங்க

பெண் : உனக்கென நான் பிறந்தேன்

ஆண் :
புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே

பெண் :
புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே

ஆண் :
வாய் பேசும் வார்த்தையெல்லாம்
கண் பேசும் அல்லவோ

பெண் :
கண் பேசும் வார்த்தையைத்தான்
கண்ணீரும் சொன்னதோ
புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே

ஆண் :
புத்தம் புது பூ பூத்ததோ
எண்ணங்களில் தேன் வார்த்ததோ
மொட்டவிழ நாள் ஆனதோ
சொல்லடி என் செல்லக்கிளியே

*********************************

Wednesday, April 8, 2020

உன்னால் முடியும் தம்பி- உன்னால் முடியும் தம்பி பாடல் வரிகள்



படம் : உன்னால் முடியும் தம்பி
இசை : இளையராஜா

*********************************

உன்னால் முடியும் தம்பி தம்பி
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

உன்னால் முடியும் தம்பி தம்பி
அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

தோளை உயர்த்து
தூங்கி விழும் நாட்டை எழுப்பு
உன் தோளை உயர்த்து
தூங்கி விழும் நாட்டை எழுப்பு
எதையும் முடிக்கும்
இதயம் உன்னில் கண்டேன்

உன்னால் முடியும் தம்பி தம்பி
அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

நாளைய நாட்டின் தலைவனும் நீயே
நம்பிகை கொண்டு வருவாயே
உனக்கென்ன ஒரு சரித்திரமே
எழுதும் காலம் உண்டு

உன்னால் முடியும்
அட உன்னால் முடியும்
ஆஹா உன்னால் முடியும் தம்பி தம்பி
அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

*********************************

ஆகாய கங்கை
காய்ந்தாலும் காயும்
சாராய கங்கை காயாதடா
ஆள்வோர்கள் போடும்
சட்டங்கள் யாவும்
காசுள்ள பக்கம் பாயாதடா
குடிச்சவன் போதையில் நிப்பான்
குடும்பத்தை வீதியில் வைப்பான்
தடுப்பது யாரென்று என்று கொஞ்சம்
 நீ கேளடா
கள்ளு கடை காசிலே தான்டா
கட்சி கோடி ஏறுது போடா
கள்ளு கடை காசிலே தான்டா
கட்சி கோடி ஏறுது போடா
மண்ணோடு போகாமல்
நம் நாடு திருந்த செய்யணும்

உன்னால் முடியும்
அட உன்னால் முடியும்

ஆஹா உன்னால் முடியும் தம்பி தம்பி
அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

*********************************

கல்லூரி பள்ளி இல்லாத ஊரை
கையோடு இன்றே தீ மூட்டுவோம்
கல்லாத பேர்கள் இல்லாத நாடு
நம் நாடு என்றே நாம் மாற்றுவோம்
இருக்கிற கோவிலை எல்லாம்
படிக்கிற பள்ளிகள் செய்வோம்
அறிவென்னும் கோபுரம்
அங்கே நாம் காணுவோம்
வானம் உங்கள் கைகளில் உண்டு
ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
வானம் உங்கள் கைகளில் உண்டு
ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
நான் என்று எண்ணாமல்
நாம் என்று உறவு கொள்ளனும்


க ச ம
த ம த
நி த நி
ம ம ம ம
க ச
ம ம ம ம
த ம த த த த
நி த நி நி நி நி
ச க ச நி ச நி
த நி த ம த ம
நி ச நி த ச நி
த நி த ம ச க

உன்னால் முடியும்
அட உன்னால் முடியும்
ஆஹா உன்னால் முடியும் தம்பி தம்பி
அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

தோளை உயர்த்து
தூங்கி விழும் நாட்டை எழுப்பு
உன் தோளை உயர்த்து
தூங்கி விழும் நாட்டை எழுப்பு
ஏதையும் முடிக்கும் இதயம்
உன்னில் கண்டேன்

உன்னால் முடியும் தம்பி தம்பி
அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி

*********************************


Friday, April 3, 2020

பூபாளம் இசைக்கும் - தூறல் நின்னு போச்சு பாடல் வரிகள்


படம்: தூறல் நின்னு போச்சு
இசை: இளையராஜா

******************************************

குழு:
ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆ
தந்த நத்தனா
தந்த நத்தனா
தந்த நத்தனா
தந்த நத்தனா

ஆண் :
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே

பெண் :
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

******************************************

ஆண் :
மாலை அந்திமாலை
இந்த வேளை மோகமே
மாலை அந்திமாலை
இந்த வேளை மோகமே

பெண் :
நாயகன் ஜாடை நூதனமே
நாணமே பெண்ணின் சீதனமே

ஆண் :
மேகமழை நீராட
தோகை மயில் வாராதோ

பெண் :
தித்திக்கும் இதழ் முத்தங்கள்
அது ந ந ந ந ந ந ந

ஆண் :
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

******************************************

குழு:
தந்த நத்த நத்த நத்த நத்தனா
தந்த நத்தனா
தந்த நத்தனா
தந்த நத்த தந்த நத்தனா

பெண் :
பூவை எந்தன் சேவை
உந்தன் தேவை அல்லவோ
பூவை எந்தன் சேவை
உந்தன் தேவை அல்லவோ

ஆண் :
மன்மதன் கோயில் தோரணமே
மார்கழி திங்கள் பூமுகமே

பெண் :
நாளும் இனி சங்கீதம்
பாடும் இவள் பூந்தேகம்

ஆண் :
அம்மம்மா அந்த சொர்க்கத்தில்
சுகம் நநநநநநந

பெண் :
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே

ஆண் :
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

******************************************