தமிழில் தேட.....

Monday, June 15, 2020

உன்னை நான் பார்க்கையில்- கண்ணுகொரு வண்ணக்கிளி பாடல் வரிகள்



படம்: கண்ணுகொரு வண்ணக்கிளி
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய்ப் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ரா..கம்
வார்த்தை தேடும் காதல் ரா..கம்
எங்கெங்குமே ஓ ஓ
போகின்றதே ஓ ஓ

பெண்:
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய்ப் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்

*********************************

ஆண்:
ஆவாரம்பூவுக்கு
மேலாடை ஏன் இங்கே

பெண்:
ஆடைக்கும் மேலாடை நீயுண்டு
வா இங்கே

ஆண்:
உன் கூந்தலில் பார்க்கிறேன்
தொங்கும் தோட்டங்கள்

பெண்:
பொன் மாலையில் மல்லிகைப் பூவைச்
சூட்டுங்கள்

ஆண்:
என் மார்பிலே ஆடும் பொன்னாரமே

பெண்:
செந்தூரமே உந்தன் கண்ணோரமே

ஆண்:
நீ கொஞ்சினால் அஞ்சுகம் கெஞ்சுமே

*********************************

ஆண்:
மை வைத்த கண்ணோரம்
பொய் வைக்கக் கூடாது

பெண்:
மாதங்கமோ தங்கம்
கை வைக்க கூடாது

ஆண்:
நீ பார்த்திடும் பார்வையில்
முள்ளும் பூப்பூக்கும்

பெண்:
நீ பேசிடும் சொல்லிலே
கல்லும் தேனூறும்

ஆண்:
பிருந்தாவனம் எங்கே போகின்றது

பெண்:
என் கண்ணனைத் தேடிப் போகின்றது
நீ கண்ணனா என்னுயிர் கள்வனா

ஆண்:
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய்ப் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்

பெண்:
எங்கெங்குமே  ஓ ஓ
போகின்றதே ஓ ஓ
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய்ப் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்
லாலலா லாலா லாலலா லாலா

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...