தமிழில் தேட.....

Thursday, June 18, 2020

பண்பாடும் தாமரையே- நீ தொடும்போது பாடல் வரிகள்



படம்: நீ தொடும்போது
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
பண்பாடும் தாமரையே வாவா
இசையில் விளையும் தேமாங்கனி
பொன்பார்வை பூவின் பனி
பண்பாடும் தாமரையே வாவா
இசையில் விளையும் தேமாங்கனி
பொன்பார்வை பூவின் பனி

*********************************

ஆண்:
மயக்கம் கொண்டிருக்கும்
உன் இசைக்கும் உனக்கும் வணக்கம்

பெண்:
எனக்கும் பொன்மயக்கம்
உன் இதயம் இசையின் இயக்கம்

ஆண்:
கண்ணிலே போவது மின்னல் தானோ
சொர்க்கத்தை காட்டிடும் ஜன்னல்தானோ

பெண்:
ஆ ஆ ஆ
ஆனந்தமே  வா வா
பூலோகமே உன்பாட்டில் தேனாகுமே

ஆண்:
பண்பாடும் தாமரையே வாவா
இசையில் விளையும் தேமாங்கனி
பொன்பார்வை பூவின் பனி

*********************************

பெண்:
இதற்கா சம்மதித்தேன் உன் மனதை
உயர்வாய் மதித்தேன்

ஆண்:
அதற்கா நான் கொடுத்தேன்
உன் இசைக்கே பிறவி எடுத்தேன்

பெண்:
பொங்கி தான் போனது கன்னித் தேனே
அன்பினால் நான் உன்னை மன்னித்தேனே

ஆண்:
ஆ ஆ ஆ
ஆனந்தமே வா வா

பெண்:
காமன் நிலா
கொண்டாடும் காதல் விழா

ஆண்:
பண்பாடும் தாமரையே வாவா
இசையில் விளையும் தேமாங்கனி
பொன்பார்வை பூவின் பனி

பெண்:
லா லா லா ஆஆஆ ஆ
லா ல லா லா லா
லா ல லா லா ல லா
லா லா ல லா.. ல லா லா ...லா ல ல லா

*********************************

Tuesday, June 16, 2020

துளித் துளி மழையாய் - கண்ணுகொரு வண்ணக்கிளி பாடல் வரிகள்


படம்: கண்ணுகொரு வண்ணக்கிளி
இசை: இளையராஜா

*********************************

குழு :
தகு தகு தகு தகுதகுகு
தகு தகு தகு தகுதகுதகு

பெண்:
துளித் துளி மழையாய்
துளிர் விடும் மனமே
காதோரம் வா தேவாரம் தா
நாளும் பண்பாடும் ராகங்கள் தா ஹா

ஆண்:
துளித் துளி மழையாய்
துளிர் விடும் மனமே

குழு :
தகுதகுத தகுதகுதகு
தகு தகு தகு தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு
தகு தகு தகு தகுதகுதகு

*********************************

பெண்:
தாவிடும் நீரோடையில்
கூடிடும் தேனோடையில்

குழு :
தகுதகுத தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு

பெண்:
தாவிடும் நீரோடையில்
கூடிடும் தேனோடையில்

ஆண்:
மனம் போலவே மழை தூவவே
தளிர் மீதிலே மலர் பூத்ததே
மனம் போலவே மழை தூவவே
தளிர் மீதிலே மலர் பூத்ததே

பெண்:
நெஞ்சில் என்னை சூடி
கொஞ்சிக் கொஞ்சிப் பாடி
சொந்தம் இன்று சுவையானது

குழு :
தகுதகுத தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு

ஆண்:
துளித் துளி மழையாய்
துளிர் விடும் மனமே
காதோரம் வா தேவாரம் தா
நாளும் பண்பாடும் ராகங்கள் தா ஹா

பெண்:
துளித் துளி மழையாய்
துளிர் விடும் மனமே

*********************************


குழு :
ஆ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆ ஆஆ ஆஆஆ ஆஆ
ஆ ஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆ

ஆண்:
மாலையும் செந்தூரமும்
சேர்ந்திடும் நாள் வந்ததே

குழு :
தகுதகுத தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு

ஆண்:
மாலையும் செந்தூரமும்
சேர்ந்திடும் நாள் வந்ததே

பெண்:
நான் தேடிய தேவாலயம்
பூந்தேரிலே தான் வந்ததே
நான் தேடிய தேவாலயம்
பூந்தேரிலே தான் வந்ததே

ஆண்:
என்னில் சரி பாதி
உன்னில் உள்ள சேதி
தேனாற்றில் நான் நீந்துவேன்

குழு :
தகுதகுத தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு
தகுதகுத தகுதகுதகு

பெண்:
துளித் துளி மழையாய்
துளிர் விடும் மனமே

ஆண்:
காதோரம் வா தேவாரம் தா

பெண்:
நாளும் பண்பாடும்
ராகங்கள் தா ஹா

ஆண்:
துளித் துளி மழையாய்
துளிர் விடும் மனமே

குழு :
தகுதகுத தகுதகுத
தகுதகுத தகுதகுத
தகுதகுத தகுதகுத

*********************************

Monday, June 15, 2020

உன்னை நான் பார்க்கையில்- கண்ணுகொரு வண்ணக்கிளி பாடல் வரிகள்



படம்: கண்ணுகொரு வண்ணக்கிளி
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய்ப் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ரா..கம்
வார்த்தை தேடும் காதல் ரா..கம்
எங்கெங்குமே ஓ ஓ
போகின்றதே ஓ ஓ

பெண்:
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய்ப் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்

*********************************

ஆண்:
ஆவாரம்பூவுக்கு
மேலாடை ஏன் இங்கே

பெண்:
ஆடைக்கும் மேலாடை நீயுண்டு
வா இங்கே

ஆண்:
உன் கூந்தலில் பார்க்கிறேன்
தொங்கும் தோட்டங்கள்

பெண்:
பொன் மாலையில் மல்லிகைப் பூவைச்
சூட்டுங்கள்

ஆண்:
என் மார்பிலே ஆடும் பொன்னாரமே

பெண்:
செந்தூரமே உந்தன் கண்ணோரமே

ஆண்:
நீ கொஞ்சினால் அஞ்சுகம் கெஞ்சுமே

*********************************

ஆண்:
மை வைத்த கண்ணோரம்
பொய் வைக்கக் கூடாது

பெண்:
மாதங்கமோ தங்கம்
கை வைக்க கூடாது

ஆண்:
நீ பார்த்திடும் பார்வையில்
முள்ளும் பூப்பூக்கும்

பெண்:
நீ பேசிடும் சொல்லிலே
கல்லும் தேனூறும்

ஆண்:
பிருந்தாவனம் எங்கே போகின்றது

பெண்:
என் கண்ணனைத் தேடிப் போகின்றது
நீ கண்ணனா என்னுயிர் கள்வனா

ஆண்:
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய்ப் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்

பெண்:
எங்கெங்குமே  ஓ ஓ
போகின்றதே ஓ ஓ
உன்னை நான் பார்க்கையில்
ஊமையாய்ப் போகிறேன்
வார்த்தை தேடும் காதல் ராகம்
லாலலா லாலா லாலலா லாலா

*********************************

மா தவம் ஏன் மாதவனே- ராஜரிஷி பாடல் வரிகள்



படம்: ராஜரிஷி
இசை: இளையராஜா

*********************************

பெண்:
ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆஆஆஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆஆஆ ஆஆஆ
ஆஆஆஆ

மா தவம் ஏன் மாதவனே
மா தவம் ஏன் மாதவனே
மா துறவை நீ அறிந்தாய்
மாதுறவை ஏன் மறந்தாய்
தவமும் தனமும் சுகமும் என் வசம்

மா தவம் ஏன் மாதவனே
மா தவம் ஏன் மாதவனே

*********************************

பெண்:
செவ்விதழோ இது தேன் கனிக் கோவை
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆஆஆஆஆ ஆஆஆஆ

செவ்விதழோ இது தேன் கனிக் கோவை
தேவா உன் பானமுதம்
தேவா உன் பானமுதம்
சேயிழை நூலிடை மின்னல் தோரணம்
காமனின் கோயிலில் நானே கோபுரம்
தேனூறும் ஆகாய கங்கை
சலசல சலவென வருகிறதே
வழிகிறதே ஆஆ ஆ  ஆஆ ஆ
மடியினில் நீராடு

மா தவம் ஏன் மாதவனே
மா தவம் ஏன் மாதவனே

*********************************

பெண்:
தாரகைகள் ஒரு ஆயிரம் கோடி
ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆ ஆஆ

தாரகைகள் ஒரு ஆயிரம் கோடி
நான் அங்கே தங்கையினால்
ம்ஹும் ஹும் ஹும் ம்ஹும் ஹும்
ஞானியின் ஐம்புலன் என்னில் சங்கமம்
தியாகமும் யோகமும் என்ன நாடகம்

ஆண்:
ஆ ஆஆஆஆ
ஆ ஆஆஆஆ ஆ


பெண்:
பிரம்மாவின் கை வண்ணம் நானே
இளமையில் ஒருமையில் தனிமையிலே
தவிக்கிறதே ஒரு முறை பாராயோ

மா தவம் ஏன் மாதவனே
மா தவம் ஏன் மாதவனே

அந்தி மா கலையில் இந்த மேகலைகள்
அசையும் அசைவிலே இசைவிலே
இடை ஒடிய ஒடிய
நடைகள் பயிலும் மயில் இது தானே

ஆண்:
தத்த ஜம்த தக தகிட ஜம்த தக
தகதீம்த தகதீம்த தக தாம் தக
தகிட திகிட தோம்கிட நம்கிட தகதிமி
தரிகிட தாம் தரிகிட தாம் தரிகிட தாம்

பெண்:
தீயிலே மரகதம் இதழில் சோமபானம்

ஆண்:
தகிட தாம் தகிட தாம் தகிட தாம்
தத் தரிகிட தாம் தரிகிட தாம்
கிடதக தரிகிட தாம்

பெண்: நித்தம் பரிமாற வரவா தலைவா

ஆண்: ரிம்ம ரிமபாப்ப மபநிநி பமபா

பெண்: ரிம்ம ரிமபாப்ப மபநிநி பமபா

ஆண்: தாம்த தக தாம்த தக தீம்தக தா

பெண்:
இளைய தேகம் இரவு நேரம்
விரக தாபம் எரியுதே

ஆண்:
தகிட ஜம்த திகிட ஜம்த
தொம்கிட ஜம்த நம்கிட ஜம்

பெண்:
முகிலிலான குழலும்
உந்தன் உறவு தேடி அலையுதே

ஆண்:
தகிட ஜம்த திகிட ஜம்த
தொம்கிடதக ஜம்த நம்கிடதக ஜம்

பெண்:
தவம் அது கலைவது தெரிகிறது
அருள் கொடு மா தேவா

ஆண்: அருகினில் மாதே வா

பெண்:
மா தவம் ஏன் மாதவனே
மா தவம் ஏன் மாதவனே
மா துறவை நீ அறிந்தாய்
மாதுறவை ஏன் மறந்தாய்
தவமும் தனமும் சுகமும் என் வசம்

மா தவம் ஏன் மாதவனே
மா தவம் ஏன் மாதவனே

*********************************

Tuesday, June 9, 2020

அழகிய கலை நிலவே (கருணைக் கடலே) - ராஜரிஷி பாடல் வரிகள்


படம்: ராஜரிஷி
இசை: இளையராஜா

*********************************

ஆண் குழு: கருணைக் கடலே
பெண் குழு: வாழ்க வாழ்க
ஆண் குழு: காக்கும் நிழலே
பெண் குழு: வாழ்க வாழ்க
ஆண் குழு: அறத்தின் வடிவே
பெண் குழு: வாழ்க வாழ்க
ஆண் குழு: அரசர்க்கரசே
பெண் குழு: வாழ்க வாழ்க
ஆண் குழு: வாழ்க வாழ்க
பெண் குழு: வாழ்க வாழ்க
குழு: வாழ்க வாழ்க

பெண்:
அழகிய கலை நிலவே என்றும் வாழ்க வாழ்கவே
அருள் மழை தரும் முகிலே என்றும் வாழ்க வாழ்கவே
இமய மலை போல் புகழில் உயர்ந்தாய்
உனது கொடையால் மனதில் நிறைந்தாய்
நலம் பெறவே
ஆஆஆஆ ஆஆஆஆ

அழகிய கலை நிலவே என்றும் வாழ்க வாழ்கவே
அருள் மழை தரும் முகிலே என்றும் வாழ்க வாழ்கவே

பெண் குழு:
கொற்றம் வாழ்க கொடியும் வாழ்க
குணங்கள் வாழ்க வாழ்க வாழ்க
கொற்றம் வாழ்க கொடியும் வாழ்க
குணங்கள் வாழ்க வாழ்க வாழ்க

*********************************

பெண்:
முரசு கொட்டி வருகிற பகைவரின்
செருக்கினை தகர்த்திடும் புஜபலம் உடையவனே
பனி மலையில் உறைகிற பிறை மதி
சிவனது திருவடி தினம் தினம் தொழுபவனே
ஏழைகளின் இதயம் குளிரவே
ஆளுகின்ற தருமத்தின் துணைவா
காசினிக்கு ஒளியை கொடுக்கவே
கண் விழித்து எழுந்திடும் தலைவா
ராஜதிலகா
ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ

பெண் குழு:
கொற்றம் வாழ்க கொடியும் வாழ்க
குணங்கள் வாழ்க வாழ்க வாழ்க
கொற்றம் வாழ்க கொடியும் வாழ்க
குணங்கள் வாழ்க வாழ்க வாழ்க

*********************************

பெண்:
சதுர் மறைகள் புகழ்ந்திடும் வகையினில்
பெரியவர் வழியினில் கடமைகள் புரிவபனே
தினமும் உன்னை திருமகள் கலைமகள்
இருவரும் வலம் வரும் பெருமைகள் உடையவனே
காவியங்கள் புகழும் முதல்வனே
கண்ணியங்கள் தழைத்திட வருக
ஞானியர்கள் வணங்கும் அறிஞனே
புண்ணியங்கள் பொலிந்திட வருக
வீர வடிவே

நிஸஸ நீப பநிநி பாம மப கமப
கமப கம பநி பஸநிப கமப கமப ஸகமப
தரிகிட தரிகிட தரிகிட தாம்
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
தரிகிடத தீம்த தரிகிடத தீம்த
தரிகிடத தீம்த தரிகிடத தீம்த

அழகிய கலை நிலவே என்றும் வாழ்க வாழ்கவே
அருள் மழை தரும் முகிலே என்றும் வாழ்க வாழ்கவே
இமய மலை போல் புகழில் உயர்ந்தாய்
உனது கொடையால் மனதில் நிறைந்தாய்
நலம் பெறவே
ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ

அழகிய கலை நிலவே என்றும் வாழ்க வாழ்கவே
அருள் மழை தரும் முகிலே என்றும் வாழ்க வாழ்கவே

பெண் குழு:
கொற்றம் வாழ்க கொடியும் வாழ்க
குணங்கள் வாழ்க வாழ்க வாழ்க
கொற்றம் வாழ்க கொடியும் வாழ்க
குணங்கள் வாழ்க வாழ்க வாழ்க

*********************************

Monday, June 8, 2020

ஆடையில் ஆடும் பொன் மணிகள் - ராஜரிஷி பாடல் வரிகள்



படம்: ராஜரிஷி
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய

பெண்:
ஆடையில் ஆடும் பொன் மணிகள்
ஆசையில் ஆடும் கிங்கிணிகள்
கை வளை ஆட மை விழி ஆட
காதல் நெஞ்சம் ஆடுமே
மஞ்சம் தேடுமே

ஆடையில் ஆடும் பொன் மணிகள்
ஆசையில் ஆடும் கிங்கிணிகள்

*********************************

பெண்:
குக்கு குகு கூ கூ கூ என்று குயில் கூவாதோ
சொர்க சுக லோகத்தில் ராகம் வருமே
தத்த தத தா தா தா நித்தம் உனை நீ தா தா
தத்தை இவள் பாதங்கள் தாளம் இடுமே

உந்தன் அருகே வந்து தழுவும் இன்ப நிலையம்
எந்தன் இடை தான் சொர்கபுரியே என்று புரியும்
பட்டுத் துகில் இது கலைந்தாடி வர
ஆசை சிறகினை விரிக்கின்றதே
தொட்டுத் தழுவிடும் சுகம் கோடி பெற
தோகை இள மனம் துடிக்கின்றதே
இவள் ஒரு சிறு கிளி ஒரு கொடி இரு கனி
குலுங்கிட நடமிடும் அபினய அழகு

ஆடையில் ஆடும் பொன் மணிகள்
ஆசையில் ஆடும் கிங்கிணிகள்
கை வளை ஆட மை விழி ஆட
காதல் நெஞ்சம் ஆடுமே மஞ்சம் தேடுமே

ஆடையில் ஆடும் பொன் மணிகள்

*********************************

ஆண்:
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய

பெண்:
என் உடல் இது பொன் நிற அரவிந்தம்
ஏங்கிடும் இடை தாங்கிட வரலாம்  (ஆண் : ஓம் நமசிவாய)

எங்கிலும் இதில் சிந்திடும் மகரந்தம்
நித்தமும் அதில் முத்திரை இடலாம் (ஆண் : ஓம் நமசிவாய)

அஞ்சன நிறம் கொஞ்சிடும் இரு கண்கள்
ஆயிரம் கலை கூறிட வருமே (ஆண் : ஓம் நமசிவாய)

அந்தியில் வரும் இந்திர தனுசின்று
பார்த்தவர் விழி பூத்திட வருமே (ஆண் : ஓம் நமசிவாய)

மறை பயிலும் தவ முனியே
கலை பயில்வோம் வா
மது ரசமா இதழ் ரசமா நவ ரசமா வா

மாமுனி என வாழுவதா ஞானம் (ஆண் : ஓம் நமசிவாய)
காமனின் கலை தேறுவதே ஞானம் (ஆண் : ஓம் நமசிவாய)
நான்மறைகளை ஓதுவதா இன்பம் (ஆண் : ஓம் நமசிவாய)
நான்மறைவினில் கூடுவதே இன்பம் (ஆண் : ஓம் நமசிவாய)

மங்கையும் ஒரு கங்கையும் தலை மீதினில் (overlap ஆண் : ஓம் நமசிவாய)
கொண்டவன் சுகம் கண்டவன் சிவனே
முதலிது முடிவிது இதிலெது வருவது வா
இகம் இது பரம் இது அது தரும் சுகம் இது வா
தவம் இது வரம் இது அறிவிது அருளிது வா வா

*********************************

மான் கண்டேன் மான் கண்டேன் - ராஜரிஷி பாடல் வரிகள்



படம்: ராஜரிஷி
இசை: இளையராஜா

*********************************

குழு:
ஆஆஆ
ஆஆஆஆஆ ஆ
ஆஆஆ
ஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ
ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ

ஆண்:
மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்

பெண் :
நான் கண்டேன் நான் கண்டேன்
நான் உன்னைத் தான் கண்டேன்
நான் என்னை காணேன்

ஆண்:
புள்ளி மானா மானிட மானே

பெண் :
பள்ளி மானாய் வந்தவள் நானே

ஆண்:
மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்

*********************************

ஆண்:
ஆடை கட்டும் ரோஜாவே
கண்ணில் அம்பு வீசாதே
கூந்தல் என்ன நாக சர்ப்பமோ

பெண் :
என்னை ஆளும் ராஜாவே
உன்னில் என்னை மூடாதே
அங்கம் உந்தன் தங்க வாகனம்

ஆண்:
கூந்தலில் நீ பாய் விரி

பெண் :
கூடலில் நீ ஆதரி

ஆண்:
காய்ச்சாத பால் உண்ணும் பெண் அன்னம்
காமத்து பால் உண்ண ஏங்கும்

பெண் :
கையோடு நீ எந்தன் மெய் சேர்க்க
காற்றுக்கும் உள்மூச்சு வாங்கும்

ஆண்:
ஆஆஆஆஆஆஆஆ.

பெண் :
ஆஆஆஆஆஆ

ஆண்:
மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்

பெண் :
நான் கண்டேன் நான் கண்டேன்
நான் உன்னைத் தான் கண்டேன்
நான் என்னை காணேன்

ஆண்:
புள்ளி மானா மானிட மானே

பெண் :
பள்ளி மானாய் வந்தவள் நானே

ஆண்:
மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்
ஆ ஆஆஆஆஆ
ஆ ஆஆஆஆ
ஆ ஆஆஆ ஆஆஆஆஆஆ
ஆ ஆஆஆ ஆஆஆஆஆஆஆ

*********************************

குழு:
லா லீ லா லீ லா
லா லீ லா லீ லா
லா லீ லா லீ
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

ஆண்:
தேனிலூரும் தீவுக்குள்
நாகலிங்க பூவுக்குள்
மோக வண்டு பாட வந்தது

பெண் :
தான தந்த சந்தத்தில்
காதல் தந்த சொந்தத்தில்
மோகமென்னும் ராகம் வந்தது

ஆண்:
பூமியில் ஓர் வானவில்

பெண் :
ஆடிடும் உன் தோள்களில்

ஆண்:
வானுக்கும் பூமிக்கும் ஓர் பாதை
பெண்ணென்று நான் இன்று பார்த்தேன்

பெண் :
கந்தர்வலோகத்தை நான் காணும்
நாள் இந்த நாள் என்று பார்த்தேன்

ஆண்:
ஆஆஆஆஆஆஆ

பெண் :
ஆஆஆஆஆஆ.

ஆண்:
மான் கண்டேன் மான் கண்டேன்
மானேதான் நான் கண்டேன்
நான் பெண்ணைக் காணேன்

பெண் :
நான் கண்டேன் நான் கண்டேன்
நான் உன்னைத் தான் கண்டேன்
நான் என்னை காணேன்

ஆண்:
புள்ளி மானா மானிட மானே

பெண் :
பள்ளி மானாய் வந்தவள் நானே

இருவரும்:
லாலாலா லாலாலா
லாலாலா லாலாலா
லாலாலா லாலா

*********************************

Sunday, June 7, 2020

கனவு ஒன்று தோன்றுதே‌ - ஒரு ஓடை நதியாகிறது பாடல் வரிகள்



படம்: ஒரு ஓடை நதியாகிறது
இசை: இளையராஜா

*********************************

கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல

விழி ஓரங்கள்‌ மிக சூடாக
எதிர்பாராமல்‌ சில நாளாக
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல

*************************

பூமகள்‌ மேலாடை
நெளியுமோ
நகர்ந்திடுமோ நழுவிடுமோ
ஓ ஓஓஓ ஓஓ
காமனே வாராதே
காமனே வாராதே
மனமே பகையா மலரும்‌ சுமையா
ஆஆஆஆஆ
உறக்கம்‌ கலைக்க உறுதி குலைக்க

கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல

விழி ஓரங்கள்‌ மிக சூடாக
எதிர்பாராமல்‌ சில நாளாக
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல

************************************

பார்வைகள்‌ பார்த்தானே
ஏஏஏஏ ஏஏ
இருதயம்‌...
இடம்‌ பெயர்ந்து கிறங்கஇடுதே
கேள்விகள்‌ கேட்டானே
கேள்விகள்‌ கேட்டானே
புனிதம்‌ இனிமேல்‌ புதிதாய்‌ கெடுமோ ஓஓஓஓ
சிறையை உடைக்க பறவை நினைக்க

கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல

விழி ஓரங்கள்‌ மிக சூடாக
எதிர்பாராமல்‌ சில நாளாக
கனவு ஒன்று தோன்றுதே
இதை யாரோடு சொல்ல
லலல லா ல லா ல லா
லா லா லா லா லா லா
லலல லா ல லா ல லா
லா லா லா லா லா லா

************************************

Saturday, June 6, 2020

ஒரு காத்துக்‌ கருப்பக்‌ கண்டா - வெற்றிப்படிகள் பாடல் வரிகள்



படம்: வெற்றிப்படிகள்
இசை: இளையராஜா

*********************************

பெண்:
ஒரு காத்துக்‌ கருப்பக்‌ கண்டா
பயமும்‌ உனக்கிருக்குது தரனன்னா
உடல்‌ வேர்த்து விறுவிறுத்து
வெளுத்து மொகம்‌ கறுக்குது தரனன்னா

அட போயா பொட்ட எதுக்கு பேன்டு சட்ட
அட வீணா ஏன்யா ஆணா பொறந்துட்ட ஹோய்

ஒரு காத்துக்‌ கருப்பக்‌ கண்டா
பயமும்‌ உனக்கிருக்குது தரனன்னா
உடல்‌ வேர்த்து விறுவிறுத்து
வெளுத்து மொகம்‌ கறுக்குது தரனன்னா

*********************************

பெண்:
அட எங்க வீட்டுப்‌ பிள்ளையிலே
பாட்டெடுப்பார்‌ சாட்டையிலே
எம்‌ ஜி ஆரப்‌பாத்தியா
கட்டபொம்மன்‌ வேஷத்திலே
கர்ஜிப்பாரு சிங்கம்போலே
நடிகர்‌ திலகம்‌ பாத்தியா

அட பாயும்‌ புலியாக வந்து
பாஞ்சு பாஞ்சு சண்ட போடும்‌
ரஜினிகாந்தப்‌ பாத்தியா
வில்லன்கள பெண்டெடுக்கும்
நாயகனா வந்து நிக்கும்‌
கமல ஹாஸன்‌ பாத்தியா

பொங்கி எழு நீதான்‌ ஹீரோக்களப்‌ போல
இல்லா விட்ட நீதான்‌ கட்டிக்கயா சேல
அதுக்கும்‌ இதுக்கும்‌ தெனம்‌
அச்சப்பட்டு அச்சப்பட்டு
எதுக்கு பொழப்பு சொல்லு
வெக்கங்கெட்டு வெக்கங்கெட்டு ஹே ஹே

ஒரு காத்துக்‌ கருப்பக்‌ கண்டா
பயமும்‌ உனக்கிருக்குது தரனன்னா
உடல்‌ வேர்த்து விறுவிறுத்து
வெளுத்து மொகம்‌ கறுக்குது தரனன்னா

அட போயா பொட்ட எதுக்கு பேன்டு சட்ட
அட வீணா ஏன்யா ஆணா பொறந்துட்ட ஹோய்

ஒரு காத்துக்‌ கருப்பக்‌ கண்டா
பயமும்‌ உனக்கிருக்குது தரனன்னா
உடல்‌ வேர்த்து விறுவிறுத்து
வெளுத்து மொகம்‌ கறுக்குது தரனன்னா

*********************************

ஆண்:
ஆதி பத்துப்‌ பேரை ஓத்தையிலே
சுத்துகிற வித்தை எல்லாம்‌
என்னால்‌ காட்டக்‌ கூடுமா
பல்லொடஞ்சு சில்லொடஞ்சு
கை ஒடஞ்சு  கால்‌ ஒடஞ்சு
முன்னால்‌ நிற்க வேணுமா

ஆதி அச்சப்படும் சங்கதிக்கு
அச்சப்‌ பட வேணுமுன்னு
சொன்னான்‌ அந்த வள்ளுவன்‌
என்னப்‌ போல வள்ளுவனும்‌
வம்பு தும்ப வெச்சுக்காம
மண்ணில்‌ வாழ்ந்த நல்லவன்‌

இந்த உயிர்‌ போனா இன்னும்‌ ஒண்ணு ஏது (பெண் : ஹா ஹா )
ஆசை இதன்‌ மேலே வெக்காதவன்‌ யாரு (பெண்: ம்ம்)
நடந்தக்‌ கொலையக்‌ கண்ணில்‌
கண்டு புட்டேன்‌ கண்டு பட்டேன்‌
வரட்டு இழுப்பில்‌ வந்து
சிக்கிக்கிட்டேன் சிக்கிக்கிட்டேன் ஆஹா

ஒரு காத்துக்‌ கருப்பக்‌ கண்டா
பயமும்‌ எனக்கிருக்குது தரனன்னா
உடல்‌ வேர்த்து விறுவிறுத்து
வெளுத்து மொகம்‌ கறுக்குது தரனன்னா


அடி வீரம்‌ வீரம்‌ எனக்கு ரொம்ப ரொம்ப தூரம்‌
அடி ஜான்சி ராணி நீ தான்‌ உதவணும்‌
ஹோ ஹோ ஹோ‌ ஹோய்‌

ஒரு காத்துக்‌ கருப்பக்‌ கண்டா
பயமும்‌ எனக்கிருக்குது தரனன்னா
உடல்‌ வேர்த்து விறுவிறுத்து
வெளுத்து மொகம்‌ கறுக்குது தரனன்னா

*********************************

Wednesday, June 3, 2020

என்‌ தேகம்‌ அமுதம்‌ - ஒரு ஓடை நதியாகிறது பாடல் வரிகள்



படம்: ஒரு ஓடை நதியாகிறது
இசை: இளையராஜா

*********************************

என்‌ தேகம்‌ அமுதம்‌
என்‌ தேகம்‌ அமுதம்‌
மார்கழி ராத்திரி பிரிவது பாவம்‌
மார்கழி ராத்திரி பிரிவது பாவம்‌

என்‌ தேகம்‌ அமுதம்‌

*********************************

முல்லை மலர்‌ வாசம்‌ வீசவில்லையா
பெண்‌ மனசின்‌ ஆசை பேசவில்லையா
பூத்திருப்பவள்‌ தாரமல்லவா
காத்திருப்பதே பாரமல்லவா

துள்ளி எழும்‌ பிள்ளை பிஞ்சு
சத்தம்‌ இன்றி முத்தம் கொஞ்சு
விளக்கை அணைத்து விடு

என்‌ தேகம்‌ அமுதம்‌
மார்கழி மார்கழி மார்கழி
ராத்திரி பிரிவது பாவம்‌
என்‌ தேகம்‌ அமுதம்‌
ஆ ஆ ஆ

*********************************

வாவாவா வாவாவா ஆ
ஆஹாஹா ஆஹா ஹா ஆ
ஆ ஹா ஹா

வீணைகளின்‌ மெளனம்‌ ஓட வேண்டுமே
ஆளுக்கொரு ராகம்‌ பாட வேண்டுமே
கூந்தல்‌ இருக்கு போர்வை எதுக்கு
காலை வரைக்கும்‌ காமன்‌ வழக்கு
நெஞ்சம்‌ எங்கும்‌ மின்னல்‌ அலை
பஞ்சமில்லை பன்னீர்‌ மழை
எனக்கு பொறுக்கவில்லை

என்‌ தேகம்‌ அமுதம்‌
மார்கழி மார்கழி மார்கழி
ராத்திரி பிரிவது பாவம்‌
என்‌ தேகம்‌ அமுதம்‌
ம்‌ம்‌ ம்‌ம்‌ ஆ ஆ




Tuesday, June 2, 2020

ஒரு மூடன் கதை சொன்னால்- நெஞ்சில் ஆடும் பூவொன்று பாடல் வரிகள்



படம் : நெஞ்சில் ஆடும் பூவொன்று
இசை : இளையராஜா

*********************************

ஒரு மூடன் கதை சொன்னால்
என் கதை அதுதான்
இது காதல் தெய்வீகம்
அட போடா
ஒரு மூடன் கதை சொன்னால்
என் கதை அதுதான்

*********************************

கல்லரையிலே இருக்கின்ற பல சமாதிகள்
காதலிலே தோல்வியுற்றவைதான் போலிருக்கிறது

பெண்ணைப் படைக்காதே
பிரம்மனே
பாவம் ஆண்களே
பரிதாபம் நாங்களே

பெண்ணைப் படைக்காதே
பிரம்மனே
பாவம் ஆண்களே
பரிதாபம் நாங்களே

ஆலகாலமா விழியா
சொல்லடா
காதல் காவியம் வேஷமே ஓ

ஒரு மூடன் கதை சொன்னால்
என் கதை அதுதான்

*********************************

பிரீத்தி உன்னைநினைக்க விரும்புகிறேன்
நீ விடவில்லை
உன்னை மறக்க விரும்புகிறேன்
அதுவும் முடியவில்லை

கல்லை உடைத்தாலும்
நீர் வரும்
பாலைவனங்களோ
அழகான பெண்களே

கல்லை உடைத்தாலும்
நீர் வரும்
பாலைவனங்களோ
அழகான பெண்களே

எந்த மடையனோ சொன்னான்
சொர்க்கமாம்
பெண்கள் உலகமே நரகமே ஓ

ஒரு மூடன் கதை சொன்னால்
என் கதை அதுதான்
இது காதல் தெய்வீகம்
அட போடா
ஒரு மூடன் கதை சொன்னால்
என் கதை அதுதான்

*********************************

மருத மஞ்சக் கெழங்கு - நெஞ்சில் ஆடும் பூவொன்று பாடல் வரிகள்



படம்: நெஞ்சில் ஆடும் பூவொன்று
இசை: இளையராஜா

*********************************

பெண்:
தானா னானா னானா னானா னா
தானா னானா னானா னா
னானானா னானானா னானானா ஹா

பெண்:
மருத மஞ்சக் கெழங்கு
எம் மேல தான் வாசம்
உம் மேல தான் நேசம்
மச்சான் உன்ன நெஞ்சோட தான்
வெச்சாள் இந்த பச்சக் கிளி

மருத மஞ்சக் கெழங்கு
எம் மேல தான் வாசம்
உம் மேல தான் நேசம்
மச்சான் உன்ன நெஞ்சோட தான்
வெச்சாள் இந்த பச்சக் கிளி
மருத மஞ்சக் கெழங்கு

ஆண்:
ஏஏ ஏஏஏஏ ஏஏஏஏ
தானானா னானானா னானா னானா
தானானா னானா தானா னானா னானா

*********************************

ஆண்:
கிளிக்கொரு இணை உண்டு சத்தம் கொடுக்க
அதுக்கொரு இதழ் உண்டு முத்தம் கொடுக்க

கிளிக்கொரு இணை உண்டு சத்தம் கொடுக்க
அதுக்கொரு இதழ் உண்டு முத்தம் கொடுக்க
மூடாதே முந்தானைய போட்டு ஹோய்
முத்தாடும் வித்தைகள காட்டு

பெண்:
முடியாதையா இப்ப படியாதையா
ஒரு பூ மால நீ போட காலம் நேரம் பாரு

ஆண்:
மருத மஞ்சக் கெழங்கு
உம் மேல தான் வாசம்
எம் மேல தான் நேசம்
மச்சான் என்ன நெஞ்சோட தான்
வெச்சாள் இந்த பச்சக் கிளி
மருத மஞ்சக் கெழங்கு

*********************************

பெண்:
தழுவுற ஆசை தான் முன்னால் நடக்க
தடுக்குற நாணம் தான் பின்னால் இழுக்க

தழுவுற ஆசை தான் முன்னால் நடக்க
தடுக்குற நாணம் தான் பின்னால் இழுக்க
தானாக தள்ளாடுது தேகம்
தாளத்த விட்டோடுமா ராகம்

ஆண்:
விலகாததே விட்டுப் பிரியாததே
இது நேற்றல்ல இன்றல்ல நாளும் வாழும் சொந்தம்

பெண்:
மருத மஞ்சக் கெழங்கு
எம் மேல தான் வாசம்
உம் மேல தான் நேசம்
மச்சான் உன்ன நெஞ்சோட தான்
வெச்சாள் இந்த பச்சக் கிளி

ஆண்:
மருத மஞ்சக் கெழங்கு
உம் மேல தான் வாசம்
எம் மேல தான் நேசம்
மச்சான் என்ன நெஞ்சோட தான்
வெச்சாள் இந்த பச்சக் கிளி

இருவர்: மருத மஞ்சக் கெழங்கு