தமிழில் தேட.....

Sunday, February 24, 2019

நீலக்குயிலே உன்னோடு நான் - (மகுடி)

படம்: மகுடி
இசை: இளையராஜா

*********************************

பெண்: க ப க ரி சா        ரி ச    ச த சா
ஆண்: க ப க ரி சா        ரி ச     ச த சா

பெண்: ச ரி க ப க ரி   க ப க ரி   ச ரி சா
ஆண்: ச ரி க ப க ரி   க ப க ரி   ச ரி சா

பெண்: க ப த ப    க ப க ரி   ச ரி   க ப கா
ஆண்: க ப த ப    க ப கரி    ச ரி    க ப கா

பெண்: த ப த ப த ப
ஆண்: க ப த ப த ப
பெண்: த ப த ப த ப
ஆண்: க ப த ப க ப

ஆண் & பெண்: சா ..ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

*********************************

பெண்: நீலக்குயிலே உன்னோடு
நான் பண் பாடுவேன்
நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே
உள்ளம்   ம் பாமாலை பாடுதே

ஆண்: நீலக்குயிலே உன்னோடு
நான் பண் பாடுவேன்
நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோசமும் ஒன்றானதே
உள்ளம்   ம் பாமாலை பாடுதே

பெண்: நீலக்குயிலே உன்னோடு
நான் பண் பாடுவேன்

ஆண்: நாதப்புனலில்
அன்றாடம் நான் நீராடுவேன்

பெண்: அதிகாலை நான் பாடும் பூபாலமே
ஆனந்த வாழ்த்துக்கள் காதில் சொல்லு

ஆண்: நாள்தோறும் நான் பாடும் தேவாரமே
நீங்காமல் நீ வந்து நெஞ்சை அல்லு

பெண்: ஆகாயம் பூமி ஆனந்த காட்சி

ஆண்: சந்தோசம் பொங்க சங்கீதம் சாட்சி

பெண்: திசைகளில் எழும் புது
இசை அமுதே     வா    வா 

ஆண்: நீலக்குயிலே உன்னோடு
நான் பண் பாடுவேன்

பெண்: நாதப்புனலில்
அன்றாடம் நான் நீராடுவேன்

ஆண்: இந்நாளிலே சங்கீதமும்
சந்தோசமும் ஒன்றானதே

பெண்: உள்ளம் பாமாலை பாடுதே

ஆண்: நீலக்குயிலே உன்னோடு
நான் பண் பாடுவேன்

பெண்: நாதப்புனலில்
அன்றாடம் நான் நீராடுவேன்

*********************************

பெண்: நீர் கொண்டு போகின்ற கார்மேகமே
தூறல்கள் நீ போட தாகம் தீரும்

ஆண்: நதி பாயும் அலையோசை சுதியாகவே
நாணல்கள் கரையோரம் ராகம் பாடும்

பெண்:மலர்க்கூட்டம் ஆடும் மலைச்சாரல் ஓரம்

ஆண்: பணிவாடைக் காற்று பல்லாங்கு பாடும்

பெண்: செவிகளில் விழும்
சுர லய சுகமே வா     வா

பெண்: நீலக்குயிலே உன்னோடு
நான் பண் பாடுவேன்

ஆண் : நாதப்புனலில்
அன்றாடம் நான் நீராடுவேன்

பெண்: இந்நாளிலே சங்கீதமும்
சந்தோசமும் ஒன்றானதே

ஆண்: உள்ளம் பாமாலை பாடுதே

பெண்: நீலக்குயிலே உன்னோடு
நான் பண் பாடுவேன்

ஆண் : நாதப்புனலில்
அன்றாடம் நான் நீராடுவேன்

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...