படம்: நாடோடித் தென்றல்
இசை: இளையராஜா
*********************************
ஆண்:
மணியே மணிக்குயிலே மாலையிளங்கதிரழகே
கொடியே கொடிமலரே கொடியிடையின் மணியழகே
(சிரிப்பு)
ஆண்:
மணியே மணிக்குயிலே மாலையிளங்கதிரழகே
கொடியே கொடிமலரே கொடியிடையின் நடையழகே
தொட்ட இடம் பூமணக்கும் துளிர்க்கரமோ தொட இனிக்கும்
பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி
பெண்:
ஓ ஓ ஓ ஓ ஓ
மணியே மணிக்குயிலே மாலையிளங்கதிரழகே
ஆண்:
கொடியே கொடிமலரே கொடியிடையின் நடையழகே
*********************************
ஆண்:
பொன்னில் வடித்த சிலையே பிரம்மன் படைத்தான் உனையே
வண்ணமயில் போல வந்த பாவையே
பெண்:
எண்ண இனிக்கும் நிலையே இன்பம் கொடுக்கும் கலையே
உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே யே யே யே
ஆண்:
கண்ணிமையில் தூண்டிலிட்டு காதல்தனை தூண்டிவிட்டு
எண்ணி எண்ணி ஏங்கவைக்கும் ஏந்திழையே
பெண்:
பெண்ணிவளை ஆதரித்து பேசித்தொட்டுக் காதலித்து
இன்பம்கொண்ட காரணத்தால் தூங்கலையே
ஆண்:
சொல்லிச் சொல்லி ஆசை வைத்தேன் துடியிடையில் பாசம் வைத்தேன்
பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி
பெண்:
ஓ ஓ ஓ ஓ ஓ
மணியே மணிக்குயிலே மாலையிளங்கதிரழகே
ஆண்:
கொடியே கொடிமலரே கொடியிடையின் நடையழகே
பெண்:
தொட்ட இடம் பூமணக்கும் துளிர்க்கரமோ தொட இனிக்கும்
ஆண்:
பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி
*********************************
பெண்:
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பெண்:
கண்ணிமைகளை வருத்தி கனவுகளைத் துரத்தி
மென்மனதினால் முடித்த மூக்குத்தி
ஆண்:
என்னுயிரிலே ஒருத்தி கண்டபடி எனைத் துரத்தி
அம்மனவள் வாங்கிக்கொண்ட மூக்குத்தி
பெண்:
கோடிமணி ஓசை நெஞ்சில் கூடிவந்துதான் ஒலிக்க
ஓடிவந்து கேட்கவரும் தேவதைகள்
ஆண்:
சூடமலர் மாலை கொண்டு தூபமிட்டு தூண்டிவிட்டு
கூடவிட்டு வாழ்த்தவரும் வானவர்கள்
பெண்:
அந்தி வரும் நேரமம்மா ஆசைவிளக்கேற்றுதம்மா
ஆண்:
பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி
பெண்:
ஓ ஓ ஓ ஓ ஓ
மணியே மணிக்குயிலே மாலையிளங்கதிரழகே
மணியே மணிக்குயிலே மாலையிளங்கதிரழகே
தொட்ட இடம் பூமணக்கும் துளிர்க்கரமோ தொட இனிக்கும்
ஆண்:
பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி
பெண்:
ஓ ஓ ஓ ஓ ஓ
நானன நான நான நா
ஓ ஓ ஓ ஓ ஓ
நானன நான நான நா
*********************************
இசை: இளையராஜா
*********************************
ஆண்:
மணியே மணிக்குயிலே மாலையிளங்கதிரழகே
கொடியே கொடிமலரே கொடியிடையின் மணியழகே
(சிரிப்பு)
ஆண்:
மணியே மணிக்குயிலே மாலையிளங்கதிரழகே
கொடியே கொடிமலரே கொடியிடையின் நடையழகே
தொட்ட இடம் பூமணக்கும் துளிர்க்கரமோ தொட இனிக்கும்
பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி
பெண்:
ஓ ஓ ஓ ஓ ஓ
மணியே மணிக்குயிலே மாலையிளங்கதிரழகே
ஆண்:
கொடியே கொடிமலரே கொடியிடையின் நடையழகே
*********************************
ஆண்:
பொன்னில் வடித்த சிலையே பிரம்மன் படைத்தான் உனையே
வண்ணமயில் போல வந்த பாவையே
பெண்:
எண்ண இனிக்கும் நிலையே இன்பம் கொடுக்கும் கலையே
உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே யே யே யே
ஆண்:
கண்ணிமையில் தூண்டிலிட்டு காதல்தனை தூண்டிவிட்டு
எண்ணி எண்ணி ஏங்கவைக்கும் ஏந்திழையே
பெண்:
பெண்ணிவளை ஆதரித்து பேசித்தொட்டுக் காதலித்து
இன்பம்கொண்ட காரணத்தால் தூங்கலையே
ஆண்:
சொல்லிச் சொல்லி ஆசை வைத்தேன் துடியிடையில் பாசம் வைத்தேன்
பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி
பெண்:
ஓ ஓ ஓ ஓ ஓ
மணியே மணிக்குயிலே மாலையிளங்கதிரழகே
ஆண்:
கொடியே கொடிமலரே கொடியிடையின் நடையழகே
பெண்:
தொட்ட இடம் பூமணக்கும் துளிர்க்கரமோ தொட இனிக்கும்
ஆண்:
பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி
*********************************
பெண்:
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பெண்:
கண்ணிமைகளை வருத்தி கனவுகளைத் துரத்தி
மென்மனதினால் முடித்த மூக்குத்தி
ஆண்:
என்னுயிரிலே ஒருத்தி கண்டபடி எனைத் துரத்தி
அம்மனவள் வாங்கிக்கொண்ட மூக்குத்தி
பெண்:
கோடிமணி ஓசை நெஞ்சில் கூடிவந்துதான் ஒலிக்க
ஓடிவந்து கேட்கவரும் தேவதைகள்
ஆண்:
சூடமலர் மாலை கொண்டு தூபமிட்டு தூண்டிவிட்டு
கூடவிட்டு வாழ்த்தவரும் வானவர்கள்
பெண்:
அந்தி வரும் நேரமம்மா ஆசைவிளக்கேற்றுதம்மா
ஆண்:
பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி
பெண்:
ஓ ஓ ஓ ஓ ஓ
மணியே மணிக்குயிலே மாலையிளங்கதிரழகே
மணியே மணிக்குயிலே மாலையிளங்கதிரழகே
தொட்ட இடம் பூமணக்கும் துளிர்க்கரமோ தொட இனிக்கும்
ஆண்:
பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி
பெண்:
ஓ ஓ ஓ ஓ ஓ
நானன நான நான நா
ஓ ஓ ஓ ஓ ஓ
நானன நான நான நா
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...