தமிழில் தேட.....

Monday, April 22, 2019

தேவமல்லிகை பூவே - (நடிகன்)



படம்: நடிகன்
இசை: இளையராஜா

*********************************

ஆண் : தேவமல்லிகை பூவே
பூவே தேனில் ஊறிடும் தீவே

பெண்: பூவில் ஆடிடும் காற்றே
காற்றே சிந்து செந்தமிழ் பாட்டே

ஆண் : நீ காதல் சித்திரமா
என் கண்ணில் சொப்பனமா

பெண்: இது மோக மந்திரமா
எனை ஏய்க்கும் தந்திரமா

ஆண் : அடி மானே மானே ஆசை
தேனே வா என் விழிகளின் வழியே

பெண்: பூவில் ஆடிடும் காற்றே
காற்றே சிந்து செந்தமிழ் பாட்டே

ஆண் : தேவமல்லிகை பூவே
பூவே தேனில் ஊறிடும் தீவே

*********************************

ஆண்: தென்றல் ஒரு புறம் மின்னல் ஒரு புறம்
பெண்ணில் தெரிகிறதே

பெண்: திங்கள் ஒருபுறம் வெய்யில் ஒருபுறம்
கண்ணில் வருகிறதே

ஆண் : அள்ளும் ஒருபுறம் துள்ளும் ஒருபுறம்
இன்பம் வழிகிறதே

பெண்:  அச்சம் ஒருபுறம் வெட்கம் ஒருபுறம்
நெஞ்சில் எழுகிறதே

ஆண்:  ஆடை கட்டி ஆட வந்த வானவில்லே
ஆசையென்னும் மாலை கட்டி வாடி இங்கே

பெண்:  காதல் என்னும்
நாடகத்தின் மேடை இங்கே
காண வந்த இன்பம் என்னும் காட்சி எங்கே

ஆண்:  இனி நானும் நீயும்
நாளும் கூட
அடி மானே மானே ஆசை தேனே வா
என் விழிகளின் வழியே

பெண்:  பூவில் ஆடிடும் காற்றே காற்றே
சிந்து செந்தமிழ் பாட்டே

ஆண்:  தேவமல்லிகை பூவே பூவே
தேனில் ஊறிடும் தீவே

பெண்: இது மோக மந்திரமா
எனை ஏய்க்கும் தந்திரமா

ஆண் : நீ காதல் சித்திரமா
என் கண்ணில் சொப்பனமா

பெண்:  என் மானின் மானின் ஆசை
தேனே வா என் விழிகளின் வழியே

ஆண் : தேவமல்லிகை பூவே
பூவே தேனில் ஊறிடும் தீவே

பெண்: பூவில் ஆடிடும் காற்றே
காற்றே சிந்து செந்தமிழ் பாட்டே

*********************************

பெண்:  அள்ளிக்கொடு கதை
சொல்லிக்கொடு என அன்னக்கிளி வருமே

ஆண் : அந்திக்கலை அது
சிந்தைக்கினியது ஆசைப்படி வருமே

பெண்:  எட்டிப்பிடி எனை
கட்டிப்பிடி என
அஞ்சும் இடைவருமே

ஆண்:  எங்கும் பிடி சுகம்
பொங்கும் வடியென
கொஞ்சும் கிளி வருமே

பெண்: காமன் அம்பை
கண்ணிரண்டில் பூட்டுகின்றாய்
காதல் என்னும் தீயை நெஞ்சில்
மூட்டுகின்றாய்

ஆண் : வாடை தன்னில்
நீயும் என்னை வாட்டுகின்றாய்
வாலிபத்தின் ஆசைதன்னை மீட்டுகின்றாய்

பெண்: என் ராஜா சூடும் ரோஜா பூவோ
என் மானின் மானின் ஆசை தேனே
வா என் விழிகளின் வழியே

ஆண் : தேவமல்லிகை பூவே
பூவே தேனில் ஊறிடும் தீவே

பெண்: பூவில் ஆடிடும் காற்றே
காற்றே சிந்து செந்தமிழ் பாட்டே

ஆண்:  நீ காதல் சித்திரமா
என் கண்ணில் சொப்பனமா

பெண்:  இது மோக மந்திரமா
எனை ஏய்க்கும் தந்திரமா

ஆண் : அடி மானே மானே ஆசை
தேனே வா என் விழிகளின் வழியே

பெண்: பூவில் ஆடிடும் காற்றே
காற்றே சிந்து செந்தமிழ் பாட்டே

ஆண் : தேவமல்லிகை பூவே
பூவே தேனில் ஊறிடும் தீவே

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...