படம்: நாயகன்
இசை: இளையராஜா
******************************************
ஆண்:
அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருநாளாம்
எங்களுக்கும் காலம் அந்த தினம் பாடும் பெருநாளாம்
பெண்:
ஹோய் இடி கொட்டு மேளம் அது கொட்டும் நேரம்
எங்கள் தெரு எங்கும் தேரோடும்
குழு:
தேரோடும் திரு நாளாகும்
நாள் தோரும் இந்த ஊர்கோலம்
பெண்:
அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருநாளாம்
எங்களுக்கும் காலம் அந்த தினம் பாடும் பெருநாளாம்
******************************************
பெண்:
நீ நடக்கும் பாதை எங்கும் நஞ்சையானது
ஆண்:
நாம் நடக்கும் பாதை எங்கும் பஞ்சம் போனது
பெண்:
மாடங்கள் கலைகூடங்கள்
யார் செய்தார் அதை நாம் செய்தோம்
ஆண்:
நாடாளும் ஒரு ராஜாங்கம்
யார் தந்தார் அதை நாம் தந்தோம்
பெண்:
தேசம் என்னும் சோலையில் வேர்கள் நாங்களே
ஆண்:
தியாகம் என்னும் ஜோதியில் தீபம் நாங்களே
குழு:
தாம்தனத்தோம் தீம்தனத்தோம் ராகம் பாடுவோம்
பெண்:
அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருநாளாம்
எங்களுக்கும் காலம் அந்த தினம் பாடும் பெருநாளாம்
ஆண்:
ஹோய் இடி கொட்டு மேளம் அது கொட்டும் நேரம்
எங்கள் தெரு எங்கும் தேரோடும்
குழு:
தேரோடும் திரு நாளாகும்
நாள் தோரும் இந்த ஊர்கோலம்
******************************************
ஆண்:
பால் குடங்கள் தேன்குடங்கள் நூறு வந்தது
பெண்:
கை வணங்கும் தெய்வம் ஒன்று நேரில் வந்தது
ஆண்:
பூவாரம் இனி சூட்டுங்கள்
கற்பூரம் இனி ஏற்றுங்கள்
பெண்:
ஊரெல்லாம் களி ஆட்டங்கள்
என்னென்ன இனி காட்டுங்கள்
ஆண்:
வீடுதோரம் மங்களம் இன்று வந்தது
பெண்:
காணும் போது நெஞ்சினில் இன்பம் வந்தது
குழு:
தாம்தனத்தோம் தீம்தனத்தோம் ராகம் பாடுவோம்
ஆண்:
அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருநாளாம்
பெண்:
எங்களுக்கும் காலம் அந்த தினம் பாடும் பெருநாளாம்
ஆண்: ஹோய் இடி கொட்டு மேளம்
பெண்: அது கொட்டும் நேரம்
இருவரும்: எங்கள் தெரு எங்கும் தேரோடும்
குழு:
தேரோடும் திரு நாளாகும்
நாள் தோரும் இந்த ஊர்கோலம்
அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருநாளாம்
எங்களுக்கும் காலம் அந்த தினம் பாடும் பெருநாளாம்
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...