படம்: நான் அடிமை இல்லை
இசை: விஜய் ஆனந்த்
******************************************
ஆண்: ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது
பெண்: இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
ஆண்: பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
பெண்: காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது
ஆண்: ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது
******************************************
ஆண்: ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
உனைச் சேருவேன் ஹோ...
பெண்: வேறாரும் நெருங்காமல்
மன வாசல் தனை மூடுவேன்
ஆண்: உருவானது நல்ல சிவரஞ்சனி
பெண்: உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி
ஆண்: ராகங்களின் ஆலாபனை
பெண்: மோகங்களின் ஆராதனை
ஆண்: உடலும் மனமும்
தழுவும் பொழுதில் உருகும்
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது
******************************************
பெண்: காவேரி கடல் சேர
அணை தாண்டி வரவில்லையா
ஆண்: ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையா
பெண்: வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்
ஆண்: வளையோசை தான் நல்ல மணிமந்திரம்
பெண்: நான் தானையா நீலாம்பரி
ஆண்: தாலாட்டவா ..ஹ ..ஹ ..நடு ராத்திரி
பெண்: ஸ்ருதியும் லயமும்
சுகமாய் இணையும் தருணம்
ஒரு ஜீவன் தான்
(overlap) ஆண்: ம்ம்ம்ம்
பெண்: உன் பாடல் தான்
(overlap) ஆண்: ஆ....
ஓயாமல் இசைக்கின்றது
ஆண்: இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பெண்: பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
ஆண்: காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...