படம்: புன்னகை மன்னன்
இசை: இளையராஜா
******************************************
வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்
தேகம் என்னவாகும் இன்பமாக நோகும்
மழைத்துளி தெறித்தது எனக்குள்ளே குளித்தது
நினைத்தது பலித்தது
குடைக்கம்பி துளிர்த்தது
வானம் முத்துக்கள் சிந்தி
வாழ்கவென்றது
காதல் வென்றது
மேகம்வந்தது
பூக்கள் சிந்துது
ஆளுமில்லை சேர்த்தெடுக்க
நூலுமில்லை கோர்த்தெடுக்க
வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்
தேகம் என்னவாகும் இன்பமாக நோகும்
******************************************
வானிலே வானிலே நீரின் தோரணங்களோ... ஹோய்
என் மனம் பொங்குதே என்ன காரணங்களோ
அவன் விழி அசைத்ததில் இவள் மனம் அசைந்ததோ
தளிர்கரம் பிடிக்கையில்
மலர்க்கொடி சிலிர்த்ததோ
சாலை எங்கும் இங்கே சங்கீத மேடையானதோ
வாடை பாடுதோ தூரல் போடுதோ தோகை ஆடுதோ
பூமியெங்கும் கவியரங்கம்
சாரல் பாடும் ஜலதரங்கம்
******************************************
வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்
தேகம் என்னவாகும் இன்பமாக நோகும்
மழைத்துளி தெறித்தது எனக்குள்ளே குளித்தது
நினைத்தது பலித்தது
குடைக்கம்பி துளிர்த்தது
வானம் முத்துக்கள் சிந்தி
வாழ்கவென்றது
காதல் வென்றது
மேகம் வந்தது பூக்கள் சிந்துது
ஆளுமில்லை சேர்த்தெடுக்க
நூலுமில்லை கோர்த்தெடுக்க
வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்
தேகம் என்னவாகும் இன்பமாக நோகும்
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...