படம்: நாயகன்
இசை: இளையராஜா
******************************************
ஆண்:
நீ ஒரு காதல் சங்கீதம்
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
பெண்:
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்
******************************************
பெண்:
வானம்பாடி பறவைகள் ரெண்டு
ஊர்வலம் எங்கோ போகிறது
ஆண்:
காதல் காதல் எனுமொரு கீதம்
பாடிடும் ஓசை கேட்கிறது
பெண்:
இசை மழை எங்கும்
இசை மழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது
ஆண்:
கடலலை யாவும் இசை மகள் மீட்டும்
அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்
பெண்:
நீ ஒரு காதல் சங்கீதம்
ஆண்:
நீ ஒரு காதல் சங்கீதம்
பெண்:
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
ஆண்:
நீ ஒரு காதல் சங்கீதம்
******************************************
ஆண்:
பூவை சூட்டும் கூந்தலில் எந்தன்
ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்
பெண்:
தேனை ஊற்றும் நிலவினில் கூட
தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்
ஆண்:
கடற்கரைக் காற்றே
கடற்கரைக் காற்றே வழியை விடு
தேவதை வந்தாள் என்னோடு
பெண்:
மணல்வெளி யாவும் இருவரின் பாதம்
நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே
ஆண்:
நீ ஒரு காதல் சங்கீதம்
பெண்:
நீ ஒரு காதல் சங்கீதம்
ஆண்:
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
பெண்:
நீ ஒரு காதல் சங்கீதம்
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...