படம்: தென்றலே என்னை தொடு
இசை: இளையராஜா
******************************************
ஆண் : புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பார்தது
தூது வந்ததோ
சேதி சொன்னதோ
தூது வந்ததோ சேதி சொன்னதோ
நாணம் கொண்டதோ ஏன்
பெண் : புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பார்தது
******************************************
பெண் : ஜவ்வாது பெண்ணானது
இரண்டு செம்மீன்கள் கண்ணானது
ஆண் : பன்னீரில் ஒண்ணானது
பாச பந்தங்கள் உண்டானது
பெண் : என்ன சொல்லவோ
மயக்கம் அல்லவோ
ஆண் : கன்னி அல்லவோ
கலக்கம் அல்லவோ
ெண் : என்ன சொல்லவோ
மயக்கம் அல்லவோ
ஆண் : கன்னி அல்லவோ
கலக்கம் அல்லவோ
பெண் : தள்ளாடும் தேகங்களே
கோவில் தெப்பங்கள் போலாடுமோ
ஆண் : சத்தமின்றியே முத்தமிட்டதும்
கும்மாளம் தான் வா
பெண் : புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பார்தது
தூது வந்ததோ சேதி சொன்னதோ
தூது வந்ததோ சேதி சொன்னதோ
காதல் கொண்டதோ சொல்
ஆண் : புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பார்தது
******************************************
ஆண் : கல்யாணம் ஆகாமலே
ஆசை வெள்ளோட்டம் பார்கின்றது
பெண் : கூடாது கூடாதென
நாணம் காதோடு சொல்கின்றது
ஆண் : என்னை உன்னிடம்
இழுப்பதென்னவோ
பெண் : உள்ளமட்டிலும்
எடுப்பதென்னவோ
ஆண் : என்னை உன்னிடம்
இழுப்பதென்னவோ
பெண் : உள்ளமட்டிலும்
எடுப்பதென்னவோ
ஆண் : தண்டோடு பூவாடுது
வண்டு தாகங்கள் கொண்டாடுது
பெண் : உன்னை கண்டதும்
என்னை கண்டதும்
உண்டாகுமோ தேன்
ஆண் : புதிய பூவிது பூத்தது
பெண் : இளைய வண்டு தான் பார்தது
ஆண் : தூது வந்ததோ
பெண் : சேதி சொன்னதோ
ஆண் : தூது வந்ததோ
பெண் : சேதி சொன்னதோ
ஆண் : நாணம் கொண்டதோ ஏன்
பெண் : புதிய பூவிது பூத்தது
ஆண் : இளைய வண்டு தான் பார்தது
******************************************
இந்தப் பாடலுக்கான இசையமைப்பே ஒரு தனி ரகம்! இப்போது கேட்டாலும் அன்று கேட்டது போல் புத்தம் புதிதாக உள்ளது!
ReplyDelete