படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா
******************************************
ஆண்:
காதல் கவிதைகள் படித்திடும்
நேரம் இதழோரம்
இனி காமன்
கலைகளில் பிறந்திடும் ராகம்
புது மோகம்
இதயம் இடம் மாறும்
இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும்
அழகில் கலந்தாட
இருவரும்: இதம் தரும் காதல்
பெண்: கவிதைகள் படித்திடும் நேரம்
இதழோரம்
இனி காமன்
கலைகளில் பிறந்திடும் ராகம்
புது மோகம்
இதயம் இடம் மாறும்
இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும்
அழகில் கலந்தாட
இருவரும்: இதம் தரும் காதல்
ஆண்: கவிதைகள் படித்திடும் நேரம்
இதழோரம்
******************************************
ஆண்: கைவீசிடும் தென்றல்
கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ
அமுதோ சிலையழகோ
பெண்: பண் பாடிடும் சந்தம்
உன் நாவினில் சிந்தும்
அது மழையோ புனலோ
நதியோ கலையழகோ
ஆண்: மேகமொன்று நேரில் இங்கு
வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்ட பூமி நெஞ்சில்
சேர்த்துக் கொண்டதடி
பெண்: இது தொடரும் வளரும் மலரும்
இனிக் கனவும் நினைவும் உனையே
ஆண்: தொடர்ந்திடும்
காதல் கவிதைகள் படித்திடும் நேரம்
இதழோரம்
பெண்: இனி காமன்
கலைகளில் பிறந்திடும் ராகம்
புது மோகம்
ஆண்: இதயம் இடம் மாறும்
இளமை பரிமாறும்
பெண்: அமுதும் வழிந்தோடும்
அழகில் கலந்தாட
ஆண்: இதம் தரும் காதல் கவிதைகள்
படித்திடும் நேரம்
பெண்: இதழோரம்
இனி காமன்
கலைகளில் பிறந்திடும் ராகம்
ஆண்: புது மோகம்
******************************************
பெண்: பூ மாலைகள் கொஞ்சும்
பாமாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால்
அணைத்தால் அது இனிமை
ஆண்: தோள் சேர்ந்திடும் கங்கை
செவ்வாழையின் தங்கை
எனை ஒருநாள் பலநாள்
தொடர்ந்தால் அது புதுமை
பெண்: கோவிலுக்குள்
ஏற்றி வைத்த தீபமல்லவா
காதலுக்குக்
காத்திருந்து காட்சி தந்ததோ
ஆண்: இனி வருவாய் தருவாய் மலர்வாய்
எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய்
பெண்: தினம்தினம்
காதல் கவிதைகள் படித்திடும் நேரம்
இதழோரம்
ஆண்: இனி காமன்
கலைகளில் பிறந்திடும் ராகம்
புது மோகம்
பெண்: இதயம் இடம் மாறும்
ஆண்: ம்
பெண்: இளமை பரிமாறும்
ஆண்: அமுதும் வழிந்தோடும்
பெண்: ம்
ஆண்: அழகில் கலந்தாட
பெண்: இதம் தரும்
காதல் கவிதைகள் படித்திடும் நேரம்
ஆண்: இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்
பெண்: புது மோகம்
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...