தமிழில் தேட.....

Sunday, June 23, 2019

காதல் கவிதைகள் - கோபுர வாசலிலே பாடல் வரிகள்



படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
காதல் கவிதைகள் படித்திடும்
நேரம் இதழோரம்
இனி காமன்
கலைகளில் பிறந்திடும் ராகம்
புது மோகம்
இதயம் இடம் மாறும்
இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும்
அழகில் கலந்தாட

இருவரும்: இதம் தரும் காதல்

பெண்: கவிதைகள் படித்திடும் நேரம்
இதழோரம்
இனி காமன்
கலைகளில் பிறந்திடும் ராகம்
புது மோகம்
இதயம் இடம் மாறும்
இளமை பரிமாறும்
அமுதும் வழிந்தோடும்
அழகில் கலந்தாட

இருவரும்: இதம் தரும் காதல்

ஆண்: கவிதைகள் படித்திடும் நேரம்
இதழோரம்

******************************************

ஆண்: கைவீசிடும் தென்றல்
கண் மூடிடும் மின்னல்
இது கனியோ கவியோ
அமுதோ சிலையழகோ

பெண்: பண் பாடிடும் சந்தம்
உன் நாவினில் சிந்தும்
அது மழையோ புனலோ
நதியோ கலையழகோ

ஆண்: மேகமொன்று நேரில் இங்கு
வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்ட பூமி நெஞ்சில்
சேர்த்துக் கொண்டதடி

பெண்: இது தொடரும் வளரும் மலரும்
இனிக் கனவும் நினைவும் உனையே

ஆண்: தொடர்ந்திடும்
காதல் கவிதைகள் படித்திடும் நேரம்
இதழோரம்

பெண்: இனி காமன்
கலைகளில் பிறந்திடும் ராகம்
புது மோகம்

ஆண்: இதயம் இடம் மாறும்
இளமை பரிமாறும்

பெண்: அமுதும் வழிந்தோடும்
அழகில் கலந்தாட

ஆண்: இதம் தரும் காதல் கவிதைகள்
படித்திடும் நேரம்

பெண்: இதழோரம்
இனி காமன்
கலைகளில் பிறந்திடும் ராகம்

ஆண்: புது மோகம்

******************************************

பெண்: பூ மாலைகள் கொஞ்சும்
பாமாலைகள் கெஞ்சும்
உனை மனதால் நினைத்தால்
அணைத்தால் அது இனிமை

ஆண்: தோள் சேர்ந்திடும் கங்கை
செவ்வாழையின் தங்கை
எனை ஒருநாள் பலநாள்
தொடர்ந்தால் அது புதுமை

பெண்: கோவிலுக்குள்
ஏற்றி வைத்த தீபமல்லவா
காதலுக்குக்
காத்திருந்து காட்சி தந்ததோ

ஆண்: இனி வருவாய் தருவாய் மலர்வாய்
எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய்

பெண்: தினம்தினம்
காதல் கவிதைகள் படித்திடும் நேரம்
இதழோரம்

ஆண்: இனி காமன்
கலைகளில் பிறந்திடும் ராகம்
புது மோகம்

பெண்: இதயம் இடம் மாறும்

ஆண்: ம்

பெண்: இளமை பரிமாறும்

ஆண்: அமுதும் வழிந்தோடும்

பெண்: ம்

ஆண்: அழகில் கலந்தாட

பெண்: இதம் தரும்
காதல் கவிதைகள் படித்திடும் நேரம்

ஆண்: இதழோரம்
இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம்

பெண்: புது மோகம்

******************************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...