படம்: எங்க ஊரு பாட்டுக்காரன்
இசை: இளையராஜா
******************************************
பெண்:
பட்டுப் பட்டு பூச்சி போல
எத்தனையோ வண்ணம் மின்னும்
நட்டு வச்சு நான் பறிக்க
நான் வளர்த்த நந்தவனம்
கட்டி வைக்கும் என் மனச
வாசம் வரும் மல்லிகையும்
தொட்டுத் தொட்டு நான் கறக்க
துடிக்குதந்த செண்பகமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
******************************************
பெண்:
உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
ஒம்மேலே ஆசைப்பட்டு
பாத்து காத்து நின்னேனே
உன் பாதம் போகும் பாதை
நானும் போக வந்தேனே
ஒம்மேலே ஆசைப்பட்டு
பாத்து காத்து நின்னேனே
ஒம் முகம் பார்த்து
நிம்மதி ஆச்சு
எம் மனம் தானா
பாடிடலாச்சு
என்னோட பாட்டு சத்தம்
தேடும் ஒன்னை பின்னாலே
எப்போதும் உன்னை தொட்டு
பாடப்போறேன் தன்னாலே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே
செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
******************************************
பெண்:
மூணாம்பிறையைப் போல
காணும் நெத்தி பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும்
இந்தப் பாட்டோட
மூணாம்பிறையைப் போல
காணும் நெத்தி பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும்
இந்தப் பாட்டோட
கருத்தது மேகம்
தலை முடி தானோ
இழுத்தது என்ன
பூவிழி தானோ
எள்ளுபூ நாசி பத்தி
பேசிப் பேசி தீராது
ஆண்: ஒம் பாட்டுக்காரன் பாட்டு
ஒன்னை விட்டுப் போகாது
ஆண்: செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
ஆண்: தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே
ஆண்: செண்பகமே செண்பகமே
தென்பொதிகை சந்தனமே
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...