படம்: செந்தமிழ்ப்பாட்டு
இசை: இளையராஜா & எம் எஸ் விஸ்வநாதன்
******************************************
ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
பெண் : பாதையில் ஏதொரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல் கனி
ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
******************************************
ஆண் : மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ
தேகம் எங்கெங்கும்
மின்னல்கள் பாய்ந்ததோ
ஆண் : மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ
தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ
பெண் : தேவனின் கைவிரல் பாவை மேல் பட்டது
ஆண் : தேவியின் கண்விழி
பானம் தான் விட்டது
பெண் : புதுவித அனுபவம்
ஆண் : ஆ..ஆஹ ஹா
பெண் : முதல் முதல் அறிமுகம்
ஆண் : ஓ..ஓஹொ ஹோ..
பெண் : புது வித அனுபவம்
முதல் முதல் அறிமுகம்
தேனும் பாலும் தொட தொட ஊறுது
ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
பெண் : பாதையில் ஏதொரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல் கனி
ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
******************************************
பெண் : தூக்கம் கண்விட்டு
சென்றதே ராத்திரி
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி
பெண் : தூக்கம் கண்விட்டு
சென்றதே ராத்திரி
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி
ஆண் : ஏக்கமா கண்மணி காய்ந்ததோ செவ்விழி
பெண் : காதலா என் மனம் சேர்ந்ததே உன் வழி
ஆண் : ரகசியம் புரிந்தது
பெண் : ஆ..ஆஹ ஹா
ஆண் : அதிசயம் தெரிந்தது
பெண் : ஓ..ஓஹொ ஹோ..
ஆண் : ரகசியம் புரிந்தது
அதிசயம் தெரிந்தது
காற்றும் பூவும் கலந்துறவாடுது
காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
பெண் : பாதையில் ஏதொரு காவல் இனி
தோள்களில் சாய்ந்தது காதல் கனி
ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...