தமிழில் தேட.....

Tuesday, June 18, 2019

வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா - தாலாட்டுப்பாடவா பாடல் வரிகள்



படம்: தாலாட்டுப்பாடவா
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்ணுமணிக்கு இந்தக்
காளையப் புடிக்கலையா

பெண் குழு:  ஆ ஆ ஆ ஆ

ஆண்:
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்ணுமணிக்கு இந்தக்
காளையப் புடிக்கலையா
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்ணுமணிக்கு இந்தக்
காளையப் புடிக்கலையா
தென்றலே கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஏ தென்றலே கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்ணுமணிக்கு இந்தக்
காளையப் புடிக்கலையா

******************************************

பெண்:
உன்னை விட சொந்தம் எது
அன்பை விட சொர்க்கம் எது
உன்னை விட்டு நெஞ்சம் இது
எங்கே வாழப் போகின்றது

ஆண்:
கண்ணைத் தொட்டு வாழும் இமை
என்றும் தனியாகாதம்மா
உன்னையன்றி என் ஜீவன்தான்
இங்கே இனி வாழாதம்மா

பெண்:
உன்னோடு இல்லாத என்
வாழ்வு எப்போதும் ஏது ஏது

ஆண்:
ஒன்றான பின்னாலும் கண்மூட
நேரங்கள் ஏது ஏது

பெண்:
இது வானம் என வாழும் இனி மாறாது

ஆண்:
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்ணுமணிக்கு இந்தக்
காளையப் புடிக்கலையா
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா
என் கண்ணுமணிக்கு இந்தக்
காளையப் புடிக்கலையா

******************************************

ஆண்:
சிந்தும் மழைச் சாரல் விழ
அங்கம் அதில் மோகம் எழ
சொந்தம் ஒரு போர்வை தர
சொர்க்கம் அது நேரில் வர

பெண்:
கன்னம் மது தேனைத் தர
கண்ணன் அதை நேரில் பெற
கன்னிக் குயில் தோளில் வர
இன்பம் சுகம் இங்கே வர

ஆண்:
எந்நாளும் இல்லாத எண்ணங்கள்
முன்னோட ஏக்கம் கூட

பெண்:
என்னுள்ளம் காணாத வண்ணங்கள்
வந்தாட தூக்கம் ஓட

ஆண்:
அலை போல மனம் ஓட புதுப் பண் பாட

பெண்:
வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா
இந்தக் கண்ணுமணிதான் இளங்காளைய மறந்திடுமா
வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா
இந்தக் கண்ணுமணிதான் இளங்காளைய மறந்திடுமா
தென்றலே கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஏ தென்றலே கொஞ்சம் நீ கேளு
இந்த சேதிய அங்கு நீ கூறு
ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது
வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா
இந்தக் கண்ணுமணிதான் இளங்காளைய மறந்திடுமா

******************************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...