படம்: ஆத்மா
இசை: இளையராஜா
*********************************
ஆண்: கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக
பெண்: கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக
ஆண்: கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே
பெண்: கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக
ஆண்: கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக
*********************************
பெண்: கடற்கரை தனில் நீயும் நானும் உலவும்பொழுது
ஆண்: பறவையைப் போல் கானம் பாடி பறக்கும் மனது
பெண்: இங்கு பாய்வது புது வெள்ளமே இணை சேர்ந்தது இரு உள்ளமே
ஆண்: குளிர் வாடை தான் செந்தளிரிலே இந்த வாலிபம் தன் துணியிலே
பெண்: இளமேனி உன் வசமோ
ஆண்: கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக
பெண்: கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக
*********************************
பெண்: உனக்கென மணிவாசல் போலே மனதை திறந்தேன்
ஆண்: மனதுக்குள் ஒரு ஊஞ்சலாடி உலகை மறந்தேன்
பெண்: வளையோசைகள் உன் வரவைக் கண்டு இசைக் கூட்டிடும் தன் தலைவன் என்று
ஆண்: நெடுங்காலங்கள் நம் உறவைக்கண்டு நமை வாழ்த்திட நல் இதயம் உண்டு
பெண்: இன்ப ஊர்வலம் இதுவோ
ஆண்: கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக
பெண்: கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக
ஆண்: கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே
பெண்: கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக
ஆண்: கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக
**********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...