தமிழில் தேட.....

Saturday, March 16, 2019

ஆகாய வெண்ணிலாவே - (அரங்கேற்றவேளை)

படம்: அரங்கேற்றவேளை
இசை: இளையராஜா

*********************************

ஆண்: ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ...

பெண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ..

ஆண்: ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

ஆண்: மலர் சூடும் கூந்தலே
மழைக் காலமேகமாய் கூட

பெண்: உறவாடும் விழிகளே
இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

*********************************

ஆண்: தேவார சந்தம் கொண்டு
தினம் பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக்கொண்டு
தலை வாசல் வந்ததின்று

பெண்: தென்பாண்டி மன்னன் என்று
திரு மேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை
படியேறி வந்ததின்று..

ஆண்: இளநீரும் பாலும் தேனும்
இதழோரம் வாங்க வேண்டும்

பெண்: கொடுத்தாலும் காதல் தாபம்
குறையாமல் ஏங்க வேண்டும்

ஆண்: கடல் போன்ற ஆசையில்
மடல் வாழை மேனி தான் ஆட

பெண்: நடு ஜாம வேளையில்
நெடு நேரம் நெஞ்சமே கூட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

ஆண்: மலர் சூடும் கூந்தலே
மழைக் காலமேகமாய்க் கூட

பெண்: உறவாடும் விழிகளே
இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

*********************************

பெண்: தேவாதி தேவர் கூட்டம்
துதி பாடும் தெய்வ ரூபம்
பாதாதி கேசமெங்கும் ஒளி
வீசும் கோவில் தீபம்

ஆண்: வாடாத பாரிஜாதம்
நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி
பேச்சில் கேட்கக் கூடும்

பெண்: அடியாளின் ஜீவன்
மேவி அதிகாரம் செய்வதென்ன

ஆண்: அலங்கார தேவ தேவி
அவதாரம் செய்ததென்ன

பெண்: இசை வீணை வாடுதோ
இதமான கைகளை மீட்ட

ஆண்: சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

பெண்: ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

ஆண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

பெண்: மலர் சூடும் கூந்தலே
மழைக் காலமேகமாய் கூட

ஆண்: உறவாடும் விழிகளே
இரு வெள்ளி மீன்களாய் ஆட

பெண்: ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

ஆண்: அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...