படம்: தூறல் நின்னு போச்சு
இசை: இளையராஜா
*********************************
பெண் : தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ
பெண் : தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ
மலர்மாலை தலையணையாய்
சுகமே பொதுவாய்
ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி
தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ
*********************************
ஆண் : காவல் நூறு மீறி காதல் செய்யும் தேவி
உன்சேலையில் பூவேலைகள்
உன்மேனியில் பூஞ்சோலைகள்
பெண் : அந்தி பூவிரியும் அதன் ரகசியம்
சந்தித்தால் தெரியும்
இவளின் கனவு தணியும் வரையில்
விடியாது திருமகள் இரவுகள்
ஆண் : தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ
*********************************
பெண் : ஆடும் பொம்மை மீது ஜாடை சொன்ன மாது
ஆண் : ல ல ல ல லால்ல லால்ல லால்லா லால்லா
பெண் : கண்ணோடு தான் போராடினாள்
வேர்வைகளில் நீராடினாள்
ஆண் : ரா ரா ரர ரா ரா… ரா ர ரா ர ரா ரா
ஆண் : அன்பே ஆடை கொடு எனை
அனுதினம் அள்ளிச் சூடி விடு
பெண் : இதழில் இதழால் கடிதம் எழுது
ஒரு பேதை உறங்கிட மடி கொடு
ஆண் : தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ
பெண் : மலர்மாலை தலையணையாய்
சுகமே பொதுவாய்
ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி
இருவரும்: தங்கச் சங்கிலி
மின்னும் பைங்கிளி
தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்
தோளில் துஞ்சியதோ
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...