தமிழில் தேட.....

Tuesday, March 5, 2019

பொன் மானே கோபம் ஏனோ - (ஒரு கைதியின் டைரி)

படம்: ஒரு கைதியின் டைரி
இசை: இளையராஜா

*********************************

ஆண்: பொன் மானே கோபம் ஏனோ
பொன் மானே கோபம் ஏனோ
காதல் பால் குடம் கள்ளாய்ப் போனது
ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது
பொன் மானே கோபம் ஏனோ
பொன் மானே கோபம் ஏனோ

*********************************

ஆண்: காவல் காப்பவன்
கைதியாய் நிற்கிறேன் வா

பெண்: ஊடல் என்பது காதலின் கௌரவம் போ

ஆண்: ரெண்டு கண்களும் ஒன்று
ஒன்றின் மேல் கோபம் கொள்வதா
லால்ல லால்லலா லால்ல
லால்லலா லால்ல லால்லலா

பெண்: ஆண்கள் எல்லாம் பொய்யின் வம்சம்

ஆண்: ஊடல் கூட அன்பின் அம்சம்

பெண்: நாணம் வந்தால் ஊடல் போகும் ஓஹோ

ஆண்: பொன் மானே கோபம் ஏனோ
பொன் மானே கோபம் ஏனோ

*********************************

பெண்: எந்தன் கண்களில்
உன்னையே பார்க்கிறேன் வா

ஆண்: ரெண்டு பௌர்ணமி கண்களில்
பார்க்கிறேன் வா

பெண்: உன்னைப் பார்த்ததும் எந்தன்
பெண்மைதான் கண் திறந்ததே
லால்ல லால்லலா லால்ல
லால்லலா லால்ல லால்லலா

ஆண்: கண்ணே மேலும் காதல் பேசு

பெண்: நேரம் பார்த்து நீயும் பேசு

ஆண்: பார்வை பூவை நெஞ்சில் வீசு ஓஹோ

ஆண்: பொன் மானே

பெண்: ம்ஹும்

ஆண்: கோபம்

பெண்: ம்ஹும்

ஆண்: எங்கே

பெண்: ம்ஹும் ம்ஹும் ம்ஹும்

ஆண்: பொன் மானே

பெண்: ம்ஹும்

ஆண்: கோபம்

பெண்: ம்ஹும்

ஆண்: எங்கே

பெண்: ம்ஹும் ம்ஹும் ம்ஹும்
பூக்கள் மோதினால் காயம் நேருமா
தென்றல் கிள்ளினால் ரோஜா தாங்குமா

ஆண்&பெண்: லா லால்லா லால்லா லால்லா
லா லால்லா லால்லா லால்லா

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...