தமிழில் தேட.....

Tuesday, April 30, 2019

வனக்குயிலே - (ப்ரியங்கா)



படம்: ப்ரியங்கா
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே
கொடி மலரே மலர் விடும் இதழே
இதழ் தரும் மதுவே

வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே

மலரிலும் மலையிலும் நதியிலும் உன் உருவமே
தெரிவதென்ன அழகழகாய் தெரிவதென்ன

வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே

*********************************

கோரஸ்:
ஹோயல்லோ ஹோய ஹோய ஹோயல்லோ
ஹோயகோய ஹோயே
ஹோயகோய ஹோயே

ஆண்:

உன் ஞாபகம் நெஞ்சில் வந்தாடுதே
ஓயாமலே என்னைப் பந்தாடுதே
உன் பூ முகம் கண்ணில் நின்றாடுதே
நான் கொஞ்சவே என்னை மன்றாடுதே

படித்தால் இனித்திடும் புதினம்
உன்னை நான் மறப்பது கடினம்
அலையாய் தொடர்ந்திடும் நினைப்பு
வலைக்குள் தவித்திடும் தவிப்பு
துளிர்க்கும் ஆசை துளிர்த்தால் மேனி
சிலிர்க்கும் மிதக்கும் பறக்கும்

வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே

*********************************

பெண்:
ஆஹா ஓஹோ ஓஹோ ஹோ
ஓஹோ ஹோஹோஹோஹோ
ஓஹோ ஹோஹோஹோஹோ
ஆ ஹா ஆ ஹா

ஆண்:
செவ்வாழைகள் பந்தலாய் தோன்றுதே
கூந்தல் பனை தோரணம் ஆனதே
பூ மாலையாய் தோன்றும் பூஞ்சோலையே
எங்கெங்கும் கல்யாணக் கோலங்களே

மண நாள் நினைவுகள் மலரும்
மனதில் மலையென வளரும்
வருவேன் வருவேன் கிளியே
விழிக்குள் இருக்கும் விழியே
இணைந்தால் இருவர் இணைந்தால்
இன்ப வரவும் உறவும் சுகமே

வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே
மலரிலும் மலையிலும் நதியிலும் உன் உருவமே
தெரிவதென்ன அழகழகாய் தெரிவதென்ன

வன குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே

*********************************

இதயம் ஒரு கோவில் - (இதயகோவில்)



படம்: இதயகோவில்
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
ஆ ஆ ஆ ஆஆஆஆ ஆஅஆ ஆஅஆ
ஆஅ ஆஅ ஆஅஆ  ஆஅஆ ஆ ஆ

இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்

இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய்
நாளும் சூட்டுவேன்
இசையை மலராய்
நாளும் சூட்டுவேன்
இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்

*********************************

பெண்:
ல ல லா ல லா ல ல
லா லா ல லா ல
லா லா ல ல லா
லா லா ல ல லா
லா லா ல ல லா

ஆண்:
ஆத்ம ராகம் ஒன்றில்தான்
ஆடும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான்
நாதம் தாளம் ஆனதே

உயிரில் கலந்து பாடும் போது
எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி
எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி
எதுவும் புதிதில்லை
எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது

இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்

*********************************

பெண்:
லா லா ல ல லா
லா லா லா ல ல லா
லா லா ல ல லா
லா லா ல லா லா ல

ஆண்:
காமம் தேடும் உலகிலே
கீதம் என்னும் தீபத்தால்
ராம நாமம் மீதிலே
நாதத் தியாகராஜரும்

ஊனை உருக்கி உயிரில்
விளக்கை ஏறினாரம்மா
அவர் பாடலின் ஜீவன்
அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன்
எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்று
தான் எங்கே பிரிவது
இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்

*********************************

ஆண்:
நீயும் நானும் போவது
காதல் என்ற பாதையில்
சேரும் நேரம் வந்தது
மீதித் தூரம் பாதியில்

பாதை ஒன்று ஆனபோதும்
திசைகள் வேறம்மா
உனது பாதை வேறு
எனது பாதை வேறம்மா

மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன்
எனை ஆண்டாளே
வாழ்க நீயும் வளமுடன்
என்றும் வாழ்கவே

இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய்
நாளும் சூட்டுவேன்

*********************************

Monday, April 29, 2019

அட உச்சந்தல உச்சியில - (சின்னத்தம்பி )



படம்: சின்னத்தம்பி
இசை: இளையராஜா

*********************************

ம்ம்மம்ஹூம்ம்ம்ம் ம்ம்ஹூம்ம்மம்ஹூம்

அட உச்சந்தல உச்சியில
உள்ளிருக்கும் புத்தியில பாட்டு
இது அப்பன் சொல்லி வந்ததில்ல
பாட்டன் சொல்லி தந்ததில்ல நேத்து
எப்படிதான் வந்ததுன்னு சொல்லுறவன் யாரு
இதில் தப்பிருந்தா
என்னுதில்ல சாமிகிட்ட கேளு
எப்படிதான் வந்ததுன்னு சொல்லுறவன் யாரு
இதில் தப்பிருந்தா
என்னுதில்ல சாமிகிட்ட கேளு
அட உச்சந்தல உச்சியில
உள்ளிருக்கும் புத்தியில பாட்டு ஹோ ஓ ஓ

*********************************

கண்மாயி நெறஞ்சாலும்
அதை பாடுவேன் - நெல்லு
கதிர் முத்தி வெளஞ்சாலும் அதை பாடுவேன்
புளியம்பூ பூத்தாலும் அதை பாடுவேன் - பச்ச
புல் மேலே பனி தூங்கும் அதை பாடுவேன்
செவ்வானத்த பார்த்தா
சின்ன சிட்டுகள பார்த்தா
செம்மறிய பார்த்தா சிறு
சித்தெறும்ப பார்த்தா
என்னை கேட்காமலே பொங்கிவரும்
கற்பனைதான் பூத்து வரும்
பாட்டு தமிழ் பாட்டு

அட உச்சந்தல உச்சியில
உள்ளிருக்கும் புத்தியில பாட்டு
இது அப்பன் சொல்லி வந்ததில்ல
பாட்டன் சொல்லி தந்ததில்ல நேத்து
எப்படிதான் வந்ததுன்னு சொல்லுறவன் யாரு
இதில் தப்பிருந்தா
என்னுதில்ல சாமிகிட்ட கேளு
அட உச்சந்தல உச்சியில
உள்ளிருக்கும் புத்தியில பாட்டு ஹோ ஓ ஓ

*********************************

தெம்மாங்கு கிளிகண்ணி தேன்
சிந்துதான் - இன்னும்
தாலாட்டு தனிப்பாட்டு எசப்பாட்டுதான்
என் பாட்டு இது போல பல மாதிரி - சொன்னா
எடுப்பேனே படிப்பேனே குயில் மாதிரி
தாயாலதான் வந்தேன்
இங்கு பாட்டாலதான் வளர்ந்தேன்
வேறாரையும் நம்பி இங்கு
வல்லே சின்ன தம்பி
இங்கு நான் இருக்கும் காலம் மட்டும்
கேட்டிருக்கும் திக்கு எட்டும்
பாட்டு எந்தன் பாட்டு

அட உச்சந்தல உச்சியில
உள்ளிருக்கும் புத்தியில பாட்டு
இது அப்பன் சொல்லி வந்ததில்ல
பாட்டன் சொல்லி தந்ததில்ல நேத்து
எப்படிதான் வந்ததுன்னு சொல்லுறவன் யாரு
இதில் தப்பிருந்தா
என்னுதில்ல சாமிகிட்ட கேளு
எப்படிதான் வந்ததுன்னு சொல்லுறவன் யாரு
இதில் தப்பிருந்தா
என்னுதில்ல சாமிகிட்ட கேளு
அட உச்சந்தல உச்சியில
உள்ளிருக்கும் புத்தியில பாட்டு ஹோ ஓ ஓ

*********************************

நிலவே நீ வரவேண்டும் - (என்னருகில் நீ இருந்தால்)



படம்: என்னருகில் நீ இருந்தால்
இசை: இளையராஜா

*********************************

நிலவே நீ வரவேண்டும் ஒ ஓ ஓ ஓ
தனியே உன் துணை வேண்டும் ஒ ஓ ஓ ஓ
வான் தேடுதே உன்னைத்தான் ஓடிவா
ஒ ஓ ஒ ஓ
நிலவே நீ வரவேண்டும் ஒ ஓ ஓ ஓ
தனியே உன் துணை வேண்டும் ஒ ஓ ஓ ஓ

*********************************

ஓ ஒ
இதய தாகம் கூடுதே அமுத யமுனை நீயே
பருவ ராகம் பாடுதே வசந்த சுகமும் நீயே
நீயின்றி வாடுதே பூஞ்சோலை மலரே
துன்பங்கள் சேர்ந்ததே என் காதல் உறவே
இணைந்து இருந்த சோலைகள்
உலகை மறந்த கோலங்கள்
ஒ ஓ ஒ ஓ
நிலவே நீ வரவேண்டும் ஒ ஓ ஓ ஓ
தனியே உன் துணை வேண்டும் ஒ ஓ ஓ ஓ

*********************************

ஓ ஒ
பழக வந்த தேவதை உறவை மறந்த மாயம்
இதயம் வரைந்த வேதனை மனதில் விழுந்த காயம்
மாயங்கள் செய்வதேன் என் காதல் விருந்தே
காயங்கள் ஆனதேன் என் நோய்க்கு மருந்தே
கலைந்து பிரிந்த மேகங்கள்
இழந்த காதல் சோகங்கள்
ஒ ஓ ஒ ஓ

நிலவே நீ வரவேண்டும் ஒ ஓ ஓ ஓ
தனியே உன் துணை வேண்டும் ஒ ஓ ஓ ஓ
வான் தேடுதே உன்னைத்தான் ஓடிவா
ஒ ஓ ஒ ஓ

நிலவே நீ வரவேண்டும் ஒ ஓ ஓ ஓ
தனியே உன் துணை வேண்டும் ஒ ஓ ஓ ஓ

*********************************

Sunday, April 28, 2019

வெட்டி வேரு வாசம் - (முதல் மரியாதை)



படம்: முதல் மரியாதை
இசை: இளையராஜா

*********************************


பெண்: வெட்டி வேரு வாசம்
வெடலப் புள்ள நேசம்
வெட்டி வேரு வாசம்
வெடலப் புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு
பூமிக்கும் வாசம் உண்டு

ஆண்: வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே

பெண்: வெட்டி வேரு வாசம்
வெடலப் புள்ள நேசம்

*********************************


ஆண்: பச்சக் கிளியோ ஒட்டுக்கிருச்சு
இச்சக் கிளியோ ஒத்துக்கிருச்சு

பெண்: வச்ச நெருப்பு தொட்டுக்கிருச்சு
பச்ச மனசு பத்திக்கிருச்சு

ஆண்: கையைக் கட்டி நிக்கச் சொன்னா
காட்டு வெள்ளம் நிக்காது

பெண்: காதல் மட்டும் கூடாதுன்னா
பூமி இங்கு சுத்தாது

ஆண்: சாமி கிட்ட கேளு
யாரு போட்ட கோடு

பெண்: பஞ்சுக்குள்ள தீய வெச்சு
பொத்தி வச்சவுக யாரு

ஆண்: வெட்டி வேரு வாசம்
வெடலப் புள்ள நேசம்
வெட்டி வேரு வாசம்
வெடலப் புள்ள நேசம்

பெண்: பூவுக்கு வாசம் உண்டு
பூமிக்கும் வாசம் உண்டு

ஆண்: வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே

பெண்: வெட்டி வேரு வாசம்
வெடலப் புள்ள நேசம்

*********************************


பெண்: ஒன்னக் கண்டு நான்
சொக்கி நிக்கிறேன்
கண்ணுக்குள்ள நான்
கண்ணி வெக்கிறேன்

ஆண்: சொல்லாமத் தான்
தத்தளிக்கிறேன்
தாளாமத் தான்
தள்ளி நிக்கிறேன்

பெண்: பாசம் உள்ள தர்மம்
இதைப் பாவமின்னு சொல்லாது

ஆண்: குருவி கட்டும் கூட்டுக்குள்ள
குண்டு வைக்கக் கூடாது

பெண்: புத்தி கேட்ட தேசம்
பொடி வெச்சுப் பேசும்

ஆண்: சாதி மத பேதம் எல்லாம்
முன்னவங்க செஞ்ச மோசம்

பெண்: வெட்டி வேரு வாசம்
வெடலப் புள்ள நேசம்
வெட்டி வேரு வாசம்
வெடலப் புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு
பூமிக்கும் வாசம் உண்டு

ஆண்: வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே

பெண்: வெட்டி வேரு வாசம்

ஆண்: வெடலப் புள்ள நேசம்


*********************************

பூங்காற்று திரும்புமா - (முதல் மரியாதை)



படம்: முதல் மரியாதை
இசை: இளையராஜா

*********************************


ஆண்: பூங்காற்று திரும்புமா
எம் பாட்டை விரும்புமா
பாராட்ட மடியில் வச்சுத்
தாலாட்ட
எனக்கொரு தாய் மடி
கிடைக்குமா
பூங்காற்று திரும்புமா
எம் பாட்டை விரும்புமா


பெண்: ராசாவே வருத்தமா

ராசாவே வருத்தமா
ஆகாயம் சுருங்குமா
ஏங்காதே
அதை உலகம் தாங்காதே
அடுக்குமா
சூரியன் கருக்குமா

*********************************


ஆண்: என்ன சொல்லுவேன்
என் உள்ளம் தாங்கலே
மெத்தை வாங்கினேன்
தூக்கத்தை வாங்கலே


பெண்: இந்த வேதனை
யாருக்குத்தான் இல்லே
உன்ன மீறவே
ஊருக்குள் ஆளில்லே

ஆண்: ஏதோ எம் பாட்டுக்கு
நான் பாட்டுப் பாடி
சொல்லாத சோகத்தைச்
சொன்னேனடி

பெண்: சுகராகம் சோகம் தானே

பெண்: சுகராகம் சோகம் தானே

ஆண்: யாரது போறது

பெண்: குயில் பாடலாம்
தன் முகம் காட்டுமா

ஆண்: பூங்காற்று திரும்புமா
எம் பாட்டை விரும்புமா
பாராட்ட மடியில் வச்சுத்
தாலாட்ட
எனக்கொரு தாய் மடி
கிடைக்குமா

*********************************

ஆண்: உள்ளே அழுகிறேன்
வெளியில் சிரிக்கிறேன்
நல்ல வேஷம் தான்
வெளுத்து வாங்கறேன்

பெண்: உங்க வேஷம்தான்
கொஞ்சம் மாறணும்
எங்க சாமிக்கு
மகுடம் ஏறணும்

ஆண்: மானே என் நெஞ்சுக்கு
பால் வார்த்த தேனே
முன்னே என் பார்வைக்கு
வா வா பெண்ணே

பெண்: எசப் பாட்டு
படிச்சேன் நானே

எசப் பாட்டு படிச்சேன் நானே

ஆண்: பூங்குயில் யாரது

பெண்: கொஞ்சம் பாருங்க
பெண் குயில் நானுங்க

ஆண்: அடி நீ தானா
அந்தக் குயில்
யார் வீட்டு சொந்தக்குயில்
ஆத்தாடி
மனசுக்குள்ளே காத்தாடி
பறந்ததே
உலகமேமறந்ததே

பெண்: நாந்தானே அந்தக் குயில்
தானாக வந்த குயில்
ஆத்தாடி மனசுக்குள்ளே
காத்தாடி பறந்ததா
உலகம் தான் மறந்ததா

*********************************

Friday, April 26, 2019

அழகில் அழகு தேவதை - (ராஜபார்வை)



படம்: ராஜபார்வை
இசை: இளையராஜா

*********************************

ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஓஓஓஓஓஓஓ
த த ரரர
தா த த ரி ரா

அழகில் அழகு தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
அழகில் அழகு தேவதை

*********************************

கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் இரண்டும்
கேள்வி ஆனது
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மன கண்கள் சொல்லும்
பொன்னோவியம்
அழகில்
அழகு தேவதை

*********************************

சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசையாவும்
முல்லை போன்றன
மூங்கிலே தோள்களோ
தேன்குழல் விரல்களோ

ஒரு அங்கம் கைகள்
அறியாதது
அழகில் அழகு
தேவதை

*********************************

பூ உலாவும் கொடியை போல
இடையை காண்கிறேன்
போக போக வாழை போல
அழகை காண்கிறேன்

மாவிலை பாதமோ
மங்கை நீ வேதமோ
இந்த மண்ணில் இது போல்
பெண்ணில்லயே

அழகில் அழகு தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்

அழகில் அழகு தேவதை

*********************************

இளஞ்சோலை பூத்ததா - (உனக்காகவே வாழ்கிறேன்)



படம்: உனக்காகவே வாழ்கிறேன்
இசை: இளையராஜா

*********************************


இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ண கோலம்
இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ண கோலம்
ஒரு பூந்தென்றல் தாலாட்ட
சில மேகங்கள் நீரூற்ற
இளஞ்சோலை பூத்ததா

*********************************

எந்தச் சொந்தங்கள் யாரோடு என்று
காலம் தான் சொல்லுமாஆஆ
பூக்கள் சொல்லாமல் பூத்தூவும் மேகம்
சேதி தான் சொல்லுமா
சோலை எங்கும் சுகந்தம்
மீண்டும் இங்கே வசந்தம்
நெஞ்சம் ஏந்தான் மயங்கும்
கண்கள் சொன்னால் விளங்கும்
ஒரு மௌனம் தீர்ந்தது
சுதியோடு சேர்ந்தது
ஒரு தாளம் ராகம் சொல்ல
சந்தம் பொங்கும் மெல்ல
மாயமல்ல மந்திரம் அல்ல

இளஞ்சோலை பூத்ததா
இளஞ்சோலை பூத்ததா

*********************************

ஊமையாய் போன சங்கீதம் ஒன்று
இன்று தான் பேசுதோ
மேடை இல்லாமல் ஆடாத கால்கள்
இன்று தான் ஆடுதோ
கண்ணில் என்ன கனவோ
நெஞ்சில் என்ன நினைவோ
நம்மை யார்தான் கேட்பது
விதிதானே சேர்ப்பாது
இந்த பாசம் பாவம் இல்லை
நேசம் மோசம் இல்லை
கங்கை என்றும் காய்வதுமில்லை

இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ண கோலம்
ஒரு பூந்தென்றல் தாலாட்ட
சில மேகங்கள் நீரூற்ற
இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ண கோலம்

*********************************

Thursday, April 25, 2019

கல்யாண தேன் நிலா - (மௌனம் சம்மதம்)



படம்: மௌனம் சம்மதம்
இசை: இளையராஜா

*********************************


ஆண்: கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால்நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா ஆஆஆஆஆஆ
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால்நிலா

*********************************


ஆண்: தென்பாண்டி கூடலா
தேவாரப் பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா

பெண்: என் அன்பு காதலா
என்னாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலா
நீ தீண்டும் கையிலா

ஆண்: பார்போமே ஆவலா
வா வா நிலா ஆஆஆஆஆஆ

பெண்: கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால்நிலா

ஆண்: நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

*********************************


பெண்: உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதி கூண்டிலா

ஆண்: சங்கீதம் பாட்டிலா
நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா

பெண்: தேனூரும் வேர்ப் பலா
உன் சொல்லிலா ஆஆஆஆஆஆ

ஆண்: கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால்நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

பெண்: தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா ஆஆஆஆஆஆ

ஆண்: கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால்நிலா


*********************************

நான் ஏரிக்கரை மேலிருந்து - (சின்ன தாயி)



படம்: சின்ன தாயி
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டுத் திசை பார்த்திருந்து
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கி போன பின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
தென்காத்து ஓடி வந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகளை
உள்ளார பூட்டி வச்சே ஒத்தையிலே
வாடுறேனே இக்கரையிலே..

பெண்:
நான் மாமரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பார்த்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன்
காணலே
அட சாயங்காலம் ஆன பின்னும்
சந்தை மூடி போன பின்னும்
வீடு போயி சேர்ந்திடத்தான்
தோணலே

பெண்:
நான் மாமரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பார்த்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன்
காணலே
அட சாயங்காலம் ஆன பின்னும்
சந்தை மூடி போன பின்னும்
வீடு போயி சேர்ந்திடத்தான்
தோணலே
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
தென்காத்து ஓடி வந்து
தூதாக போக வேணும் அக்கரையிலே
நான் உண்டான ஆசைகளை
உள்ளார பூட்டிவச்சு
திண்டாடி நிக்கிறேனே
இக்கரையிலே.
ஆண்:
நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டுத் திசை பார்த்திருந்து
ஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலே
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கி போன பின்னும்
சோறு தண்ணி வேணுமுன்னு தோணலே

*********************************

ஆண்:
தூரக் கிழக்கு கரை ஓரந்தான்
தாழப் பறந்து வரும் மேகந்தான்
உன்கிட்ட சேராதோ
என் பாட்ட கூறாதோ
ஒண்ணாக நாம் கூடும்
சந்தர்ப்பம் வாராதோ

பெண்:
உன் கூட நானும் சேர
ஒத்த காலில் நின்னேனே
செந்நாரை கூட்டத் தோடு
சேதி ஒண்ணு சொன்னேனே

ஆண்:
கண்ணாலம் காட்சி எப்போது
எந்நாளும் என் நேசம் தப்பாது

பெண்:
நான் மா மரத்தின் கீழிருந்து
முன்னும் பின்னும் பார்த்திருந்து
மாமனுக்கு காத்திருந்தேன் காணலே

ஆண்:
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கி போன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணலே

*********************************

பெண்:
மாமன் நெனப்பில்
சின்னத் தாயிதான்
மாசக் கணக்கில்
கொண்ட நோயிதான்
மச்சான் கை பட்டாக்கா
மூச்சூடும் தீராதோ
அக்காளின் பொண்ணுக்கோர்
பொற்காலம் வாராதோ

ஆண்:
கையேந்தும் ஆட்டு குட்டி
கன்னிப் பொண்ணா மாறதோ
மையேந்தும் கண்ணை காட்டி
மையல் தீரபேசாதோ

பெண்:
உன்னாலே தூக்கம் போயாச்சி
உள்ளார ஏதேதோ ஆயாச்சு

ஆண்:
நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டு திசைபார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே
மணி ஏழு எட்டு ஆன பின்னும்
ஊரடங்கிபோன பின்னும்
சோறு தண்ணி வேணுமின்னு தோணலே

பெண்:
என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
தென்காத்து ஓடிவந்து
தூதாக போக வேணும்
அக்கரையிலே
நான் உண்டான ஆசைகளை
உள்ளார பூட்டிவச்சு
திண்டாடி நிக்கிறேனே
இக்கரையிலே

ஆண்:
நான் ஏரிக்கரை மேலிருந்து
எட்டு திசைபார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணலே

பெண்:
அட சாயங்காலம் ஆன பின்னும்
சந்தை மூடிபோன பின்னும்
வீடு போய் சேர்ந்திடத்தான தோணலே

*********************************

Wednesday, April 24, 2019

வள்ளி வரப் போறா- (வள்ளி)



படம்: வள்ளி
இசை: இளையராஜா

*********************************

ஆண் 1 : சந்தனம் ஜவ்வாது பன்னீர
நீ எடுத்துச் சேத்துக்கோ

ஆண் 2 : எதுக்கு டா

ஆண் 1 : மல்லியப் பூ முல்லப் பூவு
அல்லிப் பூவு மால கட்டிக் கோத்துக்கோ

ஆண் 2 : என்னடா சொல்றே

ஆண் 1 : அது ஏன் தான் தெரியுமா
நான் சொன்னா புரியுமா ஹேஹே ஹே

கோரஸ் :  வள்ளி வரப் போறா
துள்ளி வரப் போறா ஹே
வள்ளி வரப் போறா வெள்ளி மணித் தேரா

ஆண் 1 : சந்தனம் ஜவ்வாது பன்னீர
நீ எடுத்துச் சேத்துக்கோ
மல்லியப் பூ முல்லப் பூவு
அல்லிப் பூவு மால கட்டிக் கோத்துக்கோ

*********************************

ஆண் 1 : அட அந்நாளிலே வெளையாடையிலே
அர ட்ராயரும் பாவாட போட்டு

ஆண் 2 : நல்ல அப்பா அம்மா என ஆத்தோரமா
அள்ளி விட்டீகளே எசப் பாட்டு

ஆண் 1 : ஹேய் சின்னச் சின்ன செப்பு வெச்சு
பொய்யா ஒரு பொங்கச் சோறு

ஆண் 2 : தின்னதெல்லாம் நெஞ்சுக்குள்ளே
வச்சிருப்பா கேட்டுப் பாரு

ஆண் 1 : பட்டணத்தில் பாடம் படிச்சு

ஆண் 2 : முடிச்சவ

ஆண் 1 : பத்து மணி வண்டி புடிச்சு

ஆண் 2 : விடிஞ்சதும்

ஆண் 1 : பட்டிக்காட்டு மண்ண மிதிக்க

ஆண் 2 : வருகுறா

ஆண் 1 : கட்டிக் காக்க மாமன் இருக்கே

ஆண் 2 : புரிஞ்சுக்கோ

ஆண் 1 : எதுக்கு தெரியுமா
நான் சொன்னா புரியுமா ஹ ஹே ஹே ஹே

கோரஸ் :  வள்ளி வரப் போறா
துள்ளி வரப் போறா ஹே
வள்ளி வரப் போறா வெள்ளி மணித் தேரா

ஆண் 1 : சந்தனம் ஜவ்வாது பன்னீர
நீ எடுத்துச் சேத்துக்கோ

ஆண் 2 : மல்லியப் பூ முல்லப் பூவு
அல்லிப் பூவு மால கட்டிக் கோத்துக்கோ ஹாய்

*********************************

ஆண் 1 : பசும் பொன்னு என மொறப் பொண்ணு வர
நீ முன்னால போய் வரவேற்க

ஆண் 2 : சிறு செந்தாமர சின்ன மூணாம் பிற
வேலு மச்சானையே எதிர் பார்க்க

ஆண் 1 : ஹோ விட்ட கொற மீண்டும் வந்து
ஒட்டிக்கிட்டு பாசம் பொங்க

ஆண் 2 : வெட்டி விட்ட வாய்க்கா போல
பொத்துகிட்டு நேசம் பொங்க

ஆண் 1 : எட்டு மொழ வேட்டி எடுத்து

ஆண் 2 : இடுப்புல

ஆண் 1 : கச்சிதமா நீயும் உடுத்து

ஆண் 2 : சொலிக்கிற

ஆண் 1 : பட்டு வண்ணச் சேலை எடுத்து

ஆண் 2 : அவளுக்கு

ஆண் 1 : பக்குவமா கையில் கொடுத்து

ஆண் 2 : அசத்திடு

ஆண் 1 : எதுக்கு தெரியுமா ஆ
நான் சொன்னா புரியுமா ஹாஹ ஹாஹா

கோரஸ் :  வள்ளி வரப் போறா
துள்ளி வரப் போறா ஹே
வள்ளி வரப் போறா வெள்ளி மணித் தேரா

ஆண் 1 : சந்தனம் ஜவ்வாது பன்னீர நீ
எடுத்துச் சேத்துக்கோ டோய்

ஆண் 2 : ஹஹ்ஹஹா மல்லியப் பூ முல்லப் பூவு
அல்லிப் பூவு மால கட்டிக் கோத்துக்கோ

ஆண் 1 : அடி சக்க அது ஏன் தான் தெரியுமா

ஆண் 2 : நான் சொன்னா புரியுமா

ஆண் 1 : ஏஹேஹே ஹே

கோரஸ் :  வள்ளி வரப் போறா
துள்ளி வரப் போறா ஹே
வள்ளி வரப் போறா வெள்ளி மணித் தேரா
வள்ளி வரப் போறா துள்ளி வரப் போறா ஹே
வள்ளி வரப் போறா வெள்ளி மணித் தேரா

*********************************

Tuesday, April 23, 2019

சாலை ஓரம் சோலை ஒன்று - (பயணங்கள் முடிவதில்லை)



படம்: பயணங்கள் முடிவதில்லை
இசை: இளையராஜா

*********************************


பெண்: சாலை ஓரம் சோலை ஒன்று
வாடும் சங்கீதம் பாடும்
சாலை ஓரம் சோலை ஒன்று
வாடும்
சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்துக்
கண்ணோ ரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்துக்
கண்ணோ ரங்கள் வேர்த்து
சாலை ஓரம் சோலை ஒன்று
வாடும்
சங்கீதம் பாடும்

*********************************

ஆண்: பாவையிவள் பார்த்துவிட்டால்
பாலைவனம் ஊற்றெடுக்கும்

கண்ணிமைகள் தானசைந்தால்
நந்தவனக் காற்றடிக்கும்

பெண்: நீங்கள் என்னைப் பார்த்தால்
குளிரெடுக்கும் ம்ம்ம்
மனதுக்குள் ஏனோ
மழையடிக்கும்

ஆண்: ஓ பாரிஜாத வாசம்
நேரம் பார்த்து வீசும்
பாரிஜாத வாசம்
நேரம் பார்த்து வீசும்

பெண்: மொட்டுக் கதவை
பட்டு வண்டுகள்
தட்டுகின்றதே இப்போது
சாலை ஓரம் சோலை ஒன்று
வாடும்
சங்கீதம் பாடும்

ஆண்: கண்ணாளனைப் பார்த்துக்
கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்துக்
கண்ணோரங்கள் வேர்த்து
சாலை ஓரம் சோலை ஒன்று
வாடும்
சங்கீதம் பாடும்

*********************************

பெண்: கடற்கரை ஈரத்திலே
காலடிகள் நீ பதிக்க

பெண்: அலை வந்து அழித்ததினால்
கன்னி மனம்தான் துடிக்க

ஆண்: கடலுக்குக் கூட
ஈரமில்லையோ
நியாயங்களைக் கேட்க
யாருமில்லையோ

பெண்: சேர்த்து வைத்த தாகம்
கண்ணா என்று தீரும்
சேர்த்து வைத்த தாகம்
கண்ணா என்று தீரும்

ஆண்: பேசும் கிள்ளையே
ஈர முல்லையே
நேரமில்லையே இப்போது
சாலை ஓரம் சோலை ஒன்று
வாடும்
சங்கீதம் பாடும்

பெண்: கண்ணாளனைப் பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்து
கண்ணோரங்கள் வேர்த்து

இருவரும்: தா ர ரா த
தா ர ரா த ர ராஆ
த ரா ராஆஆஆ

*********************************

கீதம் சங்கீதம் - (கொக்கரக்கோ)



படம்: கொக்கரக்கோ
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
ஆஹா
ஆஹா ஹா
ஆஹா
ஆஹா ஹா

ஆண்: கீதம்
பெண்: கீதம்
ஆண்: சங்கீதம்
பெண்: சங்கீதம்

ஆண்: நீதானே என் காதல் வேதம்
பெண்: நீதானே என் காதல் ஹாஹா


ஆண்:
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே
போதும் எப்போதும்
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்

*********************************

ஆண்:
வாசமான முல்லையோ வானவில்லின் பிள்ளையோ
பூவில் நெய்த சேலையோ நடந்து வந்த சோலையோ
உன் கண்ணில் நீலங்கள் நான் கண்டு நின்றேன்
ஆகாயம் ரெண்டாக மண் மீது கண்டேன்
காணாத கோலங்கள் என்றேன்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே
போதும் எப்போதும்
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்

*********************************

ஆண்:
நீளமான கண்களே நீண்டுவந்து தீண்டுதே
பாவை பாதம் பார்க்கவே
கூந்தல் இங்கு நீண்டதே
உளி வந்து தீண்டாமல் உருவான சிற்பம்
உன்னை நான் கண்டாலே உண்டாகும் வெப்பம்
நீதானே ஆனந்தத் தெப்பம்
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் (பெண்: லலல overlap)
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே (பெண்: லலல overlap)
போதும் எப்போதும் (பெண்: லலல overlap)
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம் (பெண்: லலல overlap)


*********************************

Monday, April 22, 2019

தேவமல்லிகை பூவே - (நடிகன்)



படம்: நடிகன்
இசை: இளையராஜா

*********************************

ஆண் : தேவமல்லிகை பூவே
பூவே தேனில் ஊறிடும் தீவே

பெண்: பூவில் ஆடிடும் காற்றே
காற்றே சிந்து செந்தமிழ் பாட்டே

ஆண் : நீ காதல் சித்திரமா
என் கண்ணில் சொப்பனமா

பெண்: இது மோக மந்திரமா
எனை ஏய்க்கும் தந்திரமா

ஆண் : அடி மானே மானே ஆசை
தேனே வா என் விழிகளின் வழியே

பெண்: பூவில் ஆடிடும் காற்றே
காற்றே சிந்து செந்தமிழ் பாட்டே

ஆண் : தேவமல்லிகை பூவே
பூவே தேனில் ஊறிடும் தீவே

*********************************

ஆண்: தென்றல் ஒரு புறம் மின்னல் ஒரு புறம்
பெண்ணில் தெரிகிறதே

பெண்: திங்கள் ஒருபுறம் வெய்யில் ஒருபுறம்
கண்ணில் வருகிறதே

ஆண் : அள்ளும் ஒருபுறம் துள்ளும் ஒருபுறம்
இன்பம் வழிகிறதே

பெண்:  அச்சம் ஒருபுறம் வெட்கம் ஒருபுறம்
நெஞ்சில் எழுகிறதே

ஆண்:  ஆடை கட்டி ஆட வந்த வானவில்லே
ஆசையென்னும் மாலை கட்டி வாடி இங்கே

பெண்:  காதல் என்னும்
நாடகத்தின் மேடை இங்கே
காண வந்த இன்பம் என்னும் காட்சி எங்கே

ஆண்:  இனி நானும் நீயும்
நாளும் கூட
அடி மானே மானே ஆசை தேனே வா
என் விழிகளின் வழியே

பெண்:  பூவில் ஆடிடும் காற்றே காற்றே
சிந்து செந்தமிழ் பாட்டே

ஆண்:  தேவமல்லிகை பூவே பூவே
தேனில் ஊறிடும் தீவே

பெண்: இது மோக மந்திரமா
எனை ஏய்க்கும் தந்திரமா

ஆண் : நீ காதல் சித்திரமா
என் கண்ணில் சொப்பனமா

பெண்:  என் மானின் மானின் ஆசை
தேனே வா என் விழிகளின் வழியே

ஆண் : தேவமல்லிகை பூவே
பூவே தேனில் ஊறிடும் தீவே

பெண்: பூவில் ஆடிடும் காற்றே
காற்றே சிந்து செந்தமிழ் பாட்டே

*********************************

பெண்:  அள்ளிக்கொடு கதை
சொல்லிக்கொடு என அன்னக்கிளி வருமே

ஆண் : அந்திக்கலை அது
சிந்தைக்கினியது ஆசைப்படி வருமே

பெண்:  எட்டிப்பிடி எனை
கட்டிப்பிடி என
அஞ்சும் இடைவருமே

ஆண்:  எங்கும் பிடி சுகம்
பொங்கும் வடியென
கொஞ்சும் கிளி வருமே

பெண்: காமன் அம்பை
கண்ணிரண்டில் பூட்டுகின்றாய்
காதல் என்னும் தீயை நெஞ்சில்
மூட்டுகின்றாய்

ஆண் : வாடை தன்னில்
நீயும் என்னை வாட்டுகின்றாய்
வாலிபத்தின் ஆசைதன்னை மீட்டுகின்றாய்

பெண்: என் ராஜா சூடும் ரோஜா பூவோ
என் மானின் மானின் ஆசை தேனே
வா என் விழிகளின் வழியே

ஆண் : தேவமல்லிகை பூவே
பூவே தேனில் ஊறிடும் தீவே

பெண்: பூவில் ஆடிடும் காற்றே
காற்றே சிந்து செந்தமிழ் பாட்டே

ஆண்:  நீ காதல் சித்திரமா
என் கண்ணில் சொப்பனமா

பெண்:  இது மோக மந்திரமா
எனை ஏய்க்கும் தந்திரமா

ஆண் : அடி மானே மானே ஆசை
தேனே வா என் விழிகளின் வழியே

பெண்: பூவில் ஆடிடும் காற்றே
காற்றே சிந்து செந்தமிழ் பாட்டே

ஆண் : தேவமல்லிகை பூவே
பூவே தேனில் ஊறிடும் தீவே

*********************************

நான் பூவெடுத்து வைக்கனும்- (நானும் ஒரு தொழிலாளி)

படம்: நானும் ஒரு தொழிலாளி
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
நான் பூவெடுத்து வைக்கனும் பின்னாலே
அதில் வஞ்சி இப்போ சொக்கணும் தன்னாலே
உன் மச்சான் மச்சான் தேன் மல்லிய வெச்சான்
உன் மச்சான் மச்சான் மல்லிய வெச்சான்
வெச்சதிலே என்னடி உண்டாச்சு

நான் பூவெடுத்து வைக்கனும் பின்னாலே
அதை வெக்கிறப்போ சொக்கணும் தன்னாலே
நான் பூவெடுத்து வைக்கனும் பின்னாலே

*********************************

ஆண் : அத்தை மவன் சொன்னத ஒத்துக்கணும்
பெண்: சரி தான் சரி தான்
ஆண்: அத்தனையும் நித்தமும் கத்துக்கணும்
பெண்: சுகம் தான் சுகம் தான்
ஆண்: அத்தை மவன் சொன்னத ஒத்துக்கணும்
பெண்: சரி தான் சரி தான்
ஆண்: அத்தனையும் நித்தமும் கத்துக்கணும்
பெண்: சுகம் தான் சுகம் தான்

ஆண்:
தென் பழனி சந்தனம் தான்
இங்கு ஒரு பெண்ணாச்சா

பெண்:
என்னென்னவோ எண்ணமும் தான்
என்னை கண்டு உண்டாச்சா

ஆண்: உன் முந்தானயை இழுக்கட்டுமா
பெண்: சும்மா இரு
ஆண்: ஒரு முத்தாரத்தை பதிக்கட்டுமா
பெண்: கொஞ்சம் பொறு
ஆண்: அடி பூவே பொன்னே கண்ணே இங்கே வா ஹொய்
பெண்: நீ பூவெடுத்து வைக்கனும் பின்னாலே
ஆண்: ஹாங் அதில் வஞ்சி இப்போ சொக்கனும் தன்னாலே

பெண்: ஹா

*********************************

பெண்: ஆ......
ஆண்: அஹாஹா....
பெண்: ஆ.....
ஆண்: ஹா.....
பெண்: லலலலா...
ஆண்: லலலலா...
பெண்: லலலலா...
ஆண்: லலலலா...
பெண்: லலல ஹா ஹா ஆ......

பெண்: பத்து விரல் பட்டதும் தொட்டதும் தான்
ஆண்: சுடுதா சுடுதா
பெண்: ஆசையோடு அச்சமும் வெக்கமும் தான்
ஆண்: வருதா வருதா
பெண்: பத்து விரல் பட்டதும் தொட்டதும் தான்
ஆண்: சுடுதா சுடுதா
பெண்: ஆசையோடு அச்சமும் வெக்கமும் தான்
ஆண்: வருதா வருதா

பெண்:
தென்னங்கிளை தென்றலைதான்
பின்னுறது அங்கே தான்

ஆண்:
செவ்விளனி சேலை கட்டி
மின்னுறது இங்கே தான்

பெண்: ரெண்டு கண்ணால நீ அளக்குரது
ஆண்: உன் மேனி தான்
பெண்: என்னை கண்டாலுமே கொதிக்கிறது
ஆண்: ஸ்.. என் மேனி தான்
பெண்: அட மச்சான் வச்ச கண்ணு இங்கே தான்

பெண்:
நீ பூவெடுத்து வைக்கனும் பின்னாலே
அதை வெக்கிறப்போ சொக்கனும் தன்னாலே
என் மச்சான் மச்சான்

ஆண்: ஹா

பெண்: தேன் மல்லிய வெச்சான்

ஆண்: ம்

பெண்:
என் மச்சான் மச்சான்
மல்லிய வெச்சான்
வெச்சதிலே என்னவோ உண்டாச்சு

ஆண்: நான் பூவெடுத்து

பெண்: நீ பூவெடுத்து வெக்கனும் பின்னாலே

ஆண்: அதை வெக்கிறப்போ சொக்கனும் தன்னாலே
பெண்: ம் ஹா ஹா ஹா

*********************************

Wednesday, April 17, 2019

பூங்கதவே தாழ் திறவாய் - (நிழல்கள்)



படம்: நிழல்கள்
இசை: இளையராஜா

*********************************

ஆண் : பூங்கதவே தாழ் திறவாய்
பூங்கதவே தாழ் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும்
பூவாய் பெண் பாவாய்
பூங்கதவே தாழ் திறவாய்

*********************************

பெண் : நீரோட்டம் ஆண் : ம்ம்ம்
பெண் : போலோடும் ஆண் : ம்ம்ம்
பெண் : ஆசைக் கனவுகள் ஊர்கோலம் ஆண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
பெண் : ஆகாகா ஆண் : ம்ம்ம்
பெண் : ஆனந்தம் ஆண் : ம்ம்ம்
பெண் : ஆடும் நினைவுகள் பூவாகும் ஆண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ஆண் : காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய ராகம்..ம்ம்ம்
பெண் :  பூங்கதவே ஆண் : ம்ம்ம்
தாழ் திறவாய் ஆண் : ம்ம்ம்
ஆண் : பூவாய் பெண் பாவாய்

*********************************

ஆண் : திருத் தேகம் பெண் : ம்ம்ம்
ஆண் : எனக்காகும் பெண் : ம்ம்ம்
ஆண் : தேனில் நனைந்தது என் உள்ளம் பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ஆண் : பொன்னாரம் பெண் : ம்ம்ம்
ஆண் : பூவாழை பெண் : ம்ம்ம்
ஆண் : ஆடும் தோரணம் எங்கெங்கும் பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
பெண் : மாலை சூடும் அந்நேரம்
மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்ம்
ஆண் : பூங்கதவே தாழ் திறவாய்
பெண் : பூங்கதவே தாழ் திறவாய்
ஆண் : பூவாய் பெண் பாவாய்
பெண் : பொன் மாலை சூடிடும்
பூவாய் பெண் பாவாய்
பெண் : ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ஆண் : ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

*********************************

ஒரு காதல் தேவதை - (இதயத்தாமரை)



படம்: இதயத்தாமரை
இசை: ஷங்கர் கணேஷ் 

*********************************

ஆண்:
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலை வேளையில்

பெண்:
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலை வேளையில்

ஆண்:
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

*********************************

ஆண்:
பூக்களின் கருவறையில் பிறந்தவள் நீயா
பூவுக்கொரு பூஜை செய்ய
பிறந்தவன் நான் இல்லலையா

பெண்:
இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா
தாமரைக்குள் வீடு கட்டி
தந்தவள் நானில்லையா

ஆண்:
ஓடோடி வந்ததால்
உள் மூச்சும் வாங்குது

பெண்:
உன் மூச்சில் அல்லவா
என் மூச்சும் உள்ளது

ஆண்:
ஒன்றானது

பெண்:
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

ஆண்:
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்

பெண்:
கள்ளூறும் காலை வேளையில்
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

*********************************

பெண்:
யாருக்கு யாருறவு யாரறிவாரோ
என் பெயரில் உன் பெயரை
இயற்கையும் எழுதியதோ

ஆண்:
பொன் மகள் மூச்சு விட்டால் பூ மலராதோ
பூ மகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ

பெண்:
கல்லூரி வாழ்க்கையில்
காதல் ஏன் வந்தது

ஆண்:
ஆகாயம் எங்கிலும்
நீலம் யார் தந்தது

பெண்:
இயல்பானது

ஆண்:
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

பெண்:
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்

ஆண்:
கள்ளூறும் காலை வேளையில்

பெண்:
லலலால லாலலா லா லல லாலா லாலா (ஆண்: விசில்)
லலலால லாலலா லா லல லாலா லாலா (ஆண்: விசில்)

*********************************

Thursday, April 11, 2019

இசை மேடையில்- (இளமை காலங்கள்)



படம்: இளமை காலங்கள்
இசை: இளையராஜா

*********************************

கோரஸ்:
***ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா***

பெண்:
இசை மேடையில் இன்ப வேளையில்
சுப ராகம் பொழியும்
இசை மேடையில் இன்ப வேளையில்
சுப ராகம் பொழியும்
இளமை நெருக்கம்
இருந்தும் தயக்கம்
இசை மேடையில் இன்ப வேளையில்
சுப ராகம் பொழியும்

ஆண்:
அஹஹாஹா அஹஹாஹா

பெண்:
இளமை நெருக்கம்
இருந்தும் தயக்கம்

*********************************

பெண் & கோரஸ்:
ஆஆஅ ... ஆஆஹஹஹஹா

ஆண்:
முத்தம் தரும் ஈரம்
பதிந்திருக்கும்
முல்லை இளம் பூவெடுத்து முகம் துடைக்கும்
முத்தம் தரும் ஈரம்
பதிந்திருக்கும்
முல்லை இளம் பூவெடுத்து முகம் துடைக்கும்

பெண்:
நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும்
மேனியெங்கும் பூ வசந்தம்
நெஞ்சுக்குள்ளே தீ இருந்தும்
மேனியெங்கும் பூ வசந்தம்
கன்னிகரும்பு
உன்னை எண்ணி சாறாகும்

இருவரும்: இசை மேடையில் இன்ப வேளையில்
சுப ராகம் பொழியும்

ஆண்: இளமை நெருக்கம்
இருந்தும் தயக்கம்

பெண்:
ப ப ப ப ப ப ப
ப ப ப ப ப ப ப

ஆண்:
ப ப ப ப ப ப
ப ப ப ப ப ப

*********************************

பெண்:
கன்னிமகள் கூந்தல் கலைந்திருக்க
வந்து தொடும் உன்கைகள்
வகிடெடுக்க...

கன்னிமகள் கூந்தல் கலைந்திருக்க
வந்து தொடும் உன்கைகள்
வகிடெடுக்க...

ஆண்:
போதை கொண்டு பூ அழைக்க
தேடிவந்து தேனெடுக்க
போதை கொண்டு பூ அழைக்க
தேடிவந்து தேனெடுக்க
தங்க கொழுந்து
தொட்டவுடன் பூவாக

இருவரும்:  இசை மேடையில் இன்ப வேளையில்
சுப ராகம் பொழியும்
ஆண்:
இளமை நெருக்கம்
இருந்தும்ம்ம்ம் தயக்கம்

இருவரும்: அ அ ஆ ஆ அ அ ஆ ஆ
லல லாலா லலலா

*********************************

வெள்ளி நிலா பதுமை - (அமுத கானம்)



படம்: அமுத கானம்
இசை: இளையராஜா

*********************************

பெண் : ஆ அ அ ஆ அ அ ஆ
அ ஆ அ ஆ அ ஆ அ ஆ
ம்ஹூம் ஹூம்
ஆண் : ம் ஹூம் ஹூம்
பெண் : ம்ஹூம் ஹூம்
ஆண் : ம் ஹூம் ஹூம்
பெண் : ம்ஹூம்
ஆண் : ம் ம்
பெண் : ம்ஹூம்
ஆண் : லாலா
பெண் : ஆ ஆ ஆ ஆ
லால லால லால லால லால

ஆண் : வெள்ளி நிலா பதுமை
காதல் பள்ளியிலே இளமை
வெள்ளி நிலா பதுமை
காதல் பள்ளியிலே இளமை
இது பூமேடையோ
இசை நான் பாடவோ
மலை தேன் மழையோ மதுவோ..
வெள்ளி நிலா பதுமை
காதல் பள்ளியிலே இளமை

*********************************

பெண் : நான் சூடும் சந்தன மல்லிகையோ
நான் சூடும் சந்தன மல்லிகையோ
பூமேனி மன்மதன் பூபாளமோ

ஆண் : தாமரை பூவின் ஊர்வலமே
பெண் : ஆ . ஆ.
தாமரை பூவின் ஊர்வலமே
பெண் : ஆ . ஆ.
அமுத கானமே
பெண் : ஆ ஹா
இதழோடு பாடவோ
பெண் : ஆ ஹா

என் திருவிழாவில் நேரில் ஆடும்
கிளியே (பெண் : ஆ ஆ ஆ ஆ )

பெண் : வெள்ளி நிலா பதுமை
காதல் பள்ளியிலே இளமை
இது பூமேடையோ
இசை நான் பாடவோ
மலை தேன் மழையோ மதுவோ
வெள்ளி நிலா பதுமை

*********************************

பெண் : கண்டாலே கொண்டாடும் தேவதை நான்
கண்டாலே கொண்டாடும் தேவதை நான்
கண்ணாலே சுக ராகம் நான் பாடவா..
ஆண் : ஆடையில் மூடிய தேன் நிலவே
பெண் : ஆ ஆ
ஆடையில் மூடிய தேன் நிலவே
பெண் : ஆ ஆ
அணைத்து பேசவோ
பெண் : ஆ ஹா
நான் மடியில் சாயவோ
பெண் : ஆ ஹா

நீ கொஞ்சும் வேளை அந்தி மாலை
வருமோ (பெண் : ஆ ஆ ஆ ஆ )
பெண் : வெள்ளி நிலா பதுமை..
காதல் பள்ளியிலே இளமை..
இது பூமேடையோ
இசை நான் பாடவோ
மலை தேன் மழையோ மதுவோ..
பெண் : வெள்ளி நிலா பதுமை (ஆண் : லா லல லா லலலா)
காதல் பள்ளியிலே இளமை (ஆண் : லா லல லா லலலா)

*********************************

ஒரு போக்கிரி ராத்திரி - (இது நம்ம பூமி)



படம்: இது நம்ம பூமி
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
ஒரு போக்கிரி ராத்திரி
பார்க்குற பார்வை தான்
ஒன்ன தாக்குது கேட்குது பூக்குது ஆசை தான்
பிறக்குது சபலம் சபலம்
கொடுப்பது சுலபம் சுலபம்
மன காயங்கள் ஆறாதோ காதலால் தான்
ஒரு ஆறுதல் கூறினேன் ஆதலால் தான்
ஒரு போக்கிரி ராத்திரி
பார்க்குற பார்வை தான்

*********************************

ஆண்:
கல்லூரி வாசலிலே நட்டு வைத்த காதல் விதை
காயாகி கனிந்துவரும் காலம் உள்ள காலம் வரை

பெண்:
கல்யாணப் பந்தலுக்கு
காத்திருக்கும் வாழை இது
கண்ணா உன் கையணைக்க
பூத்திருக்கும் தாழை இது

ஆண்:
சிங்காரமேனி தான் சொக்க வெள்ளி பாற் குடம்

பெண்:
சிந்தாமல் நீ இதை அள்ளுகின்ற நாள் வரும்

ஆண்:
எப்போது ஆரம்பம் அந்தப்புற நாடகம்

பெண்:
ஏனிந்த காமமோ என்ன சொல்ல காரணம்

ஆண்:
காத்திரு கண்ணே கொடி நாட்டலாம் ஹோய்

பெண்:
காதலே வெல்லும் என்ன காட்டலாம் ஹோய்

ஆண்: ஒரு போக்கிரி ராத்திரி
பார்க்குற பார்வை தான்

பெண்:
ஒன்ன தாக்குது கேட்குது பூக்குது ஆசை தான்

*********************************

பெண்:
என்னோட நீ இருந்தா
நெஞ்சுக்கொரு நிம்மதி தான்
இல்லாமல் தனித்திருந்தா
அம்புபட்ட பைங்கிளி தான்

ஆண்:
எப்போதும் என் மனது
உன்னைச் சுற்றி கோலமிடும்
தன்னந்தனி என்றிருந்தா
தத்தளித்து ஓலமிடும்

பெண்:
என் கூந்தல் வேண்டுது உன்னைடைய பூச்சரம்
எந்நாளில் கைவரும் உன்னுடைய மோதிரம்

ஆண்:
என் தேகம் யாவுமே உன்னுடைய சீதனம்
பார்த்தாலும் தீருமோ உன்னழகு நூதனம்

பெண்:
காதலால் கூவும் ஒரு பூங்குயில் ஹோய்
ஆண்:
பூங்குயில் மேவும் இளம் ஆண் குயில் ஹோய்

பெண்:
ஒரு போக்கிரி ராத்திரி
பார்க்குற பார்வை தான்
ஒன்ன தாக்குது கேட்குது பூக்குது ஆசை தான்
பிறக்குது சபலம் சபலம்
கொடுப்பது சுலபம் சுலபம்
மன காயங்கள் ஆறாதோ காதலால் தான்
ஒரு ஆறுதல் கூறினேன் ஆதலால் தான்

ஆண்:
ஒரு போக்கிரி ராத்திரி
பார்க்குற பார்வை தான்

பெண்:
ஒன்ன தாக்குது கேட்குது பூக்குது ஆசை தான்

*********************************

கோடி இன்பம் மேனி எங்கும் - (நெஞ்சில் ஆடும் பூவொன்று)



படம்:நெஞ்சில் ஆடும் பூவொன்று
இசை : இளையராஜா

**********************************************

பெண்:
லா லாலாலா லாலாலா லாலாலா லா
லா லா லா லா
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா
ப்ரீத்தீ என்று பேரைச்சொன்னால்
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்
ஏதேதோ எண்ணம் வந்ததோ
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா

**********************************************

பெண்:
இந்த சுகம் சொல்ல மொழி ஏது
இன்ப ரசம் பொங்கி வரும்போது
உந்தன் வசம்தானே இளமாது

ஆண்:
தேனில் ஊரும் பூச்செண்டு
தென்றல் கொஞ்சும் நாள்கண்டு
ஆனந்தம் தானாக என்னை தேடி வந்ததோ
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா
ப்ரீத்தீ என்று பேரைச்சொன்னால்
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்
ஏதேதோ எண்ணம் வந்ததோ
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா

**********************************************

ஆண்:
கன்னம் என்னும் கிண்ணம் அழகாக
கொண்டு வரும் வண்ணம் எதற்காக
ஓவியங்கள் தீட்டும் எனக்காக

பெண்:
கண்ணில் ரெண்டு மீனாட
காதல் ஓடை நீராட
தூங்காமல் போராட
உந்தன் ஆசை வந்ததோ
லாலலா.. லாலாலலா..லாலாலாலலாலாலா

**********************************************

பெண்:
கங்கை நதி வந்து கடல் சேரும்
மங்கை நதி மன்னன் மடி சேரும்
மஞ்சள் நதி எங்கும் வழிந்தோடும்

ஆண்:
நெஞ்சில் ஆடும் பூ ஒன்று
நானும் சூடும் நாள் இன்று
பாசத்தில் நேசத்தில் இந்த உள்ளம் துள்ளுதோ

ஆண்:
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா

பெண்:
ப்ரீத்தீ என்று பேரைச்சொன்னால்
ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால்
ஏதேதோ எண்ணம் வந்ததோ

ஆண்:
கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா

பெண்:
லாலா லாலா லாலா லாலா லாலா லாலாலா

ஆண்:
ஹும்ம் ம்ம் ஹும்ம்ம் ம்ம்ம்
ஹும்ம் ம்ம் ஹும்ம்ம் ம்ம்ம்
ஹும்ம் ம்ம் ஹும்ம்ம் ம்ம்ம்

**********************************************

இளம் வயசு பொண்ண - (பாண்டி நாட்டு தங்கம்)



படம்: பாண்டி நாட்டு தங்கம்
இசை: இளையராஜா

**********************************************

ஆண் : இளம் வயசு பொண்ண
வசியம் பண்ணும் வளவிக்காரன்
நல்ல மனச தொட்டு மயங்க
வச்சி வளைக்கபோறேன்


ஆண் : இளம் வயசு பொண்ண
வசியம் பண்ணும் வளவிக்காரன்
நல்ல மனச தொட்டு மயங்க
வச்சி வளைக்கபோறேன்
அடி போட்டுக்கடி
பொன் வளவி பூட்டிக்கடி
நா போட்டபின்ன பாரு
நீ பொன்னு மணித்தேரு
நா போட்டபின்னே பாரு
நீ பொன்னு மணித்தேரு
இளம் வயசு பொண்ண
வசியம் பண்ணும் வளவிக்காரன்
நல்ல மனச தொட்டு மயங்க
வச்சி வளைக்கபோறேன்

**********************************************

பெண் : மாமா உங்க பார்வ
என்ன எப்போ வந்து சோ்வ
ஆண் : அடி ஏன்டி இந்த
போர்வ இப்போ கட்ட
வேண்டும் தீா்வ
பெண் : மாமா உங்க பார்வ
என்ன எப்போ வந்து சோ்வ
ஆண் : அடி ஏன்டி இந்த
போர்வ இப்போ கட்ட
வேண்டும் தீா்வ

பெண் : கையதொட்டு
மந்திரம் சொல்லி கன்னி
பொண்ண துாண்டாதே
ஆசையில முத்திரவச்சி
அங்க இங்க நோண்டாதே

ஆண் : வேலி இல்ல காவலும் இல்ல
வேலையும் இல்ல அம்மாடி
தாலிக்கட்டி கட்டிலுக்குள்ள சம்மதம்
சொல்லு அம்மாடி

பெண் : மனசத்தொட்டு
ஏச்சி புட்ட என்ன தடை
உண்டு மாமனே

ஆண் : இளம் வயசு பொண்ண
வசியம் பண்ணும் வளவிக்காரன்
நல்ல மனச தொட்டு மயங்க
வச்சி வளைக்கபோறேன்
பெண் : அட போட்டு விடு
பொன் வளவிபூட்டிவிடு
நீ போட்டபின்ன பாரு
நா பொன்னு மணித்தேரு
நீ போட்டபின்ன பாரு
நா பொன்னு மணித்தேரு

**********************************************

பெண் : ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆண் : ஏதோ போல ஆச்சி
சூடு ஏறிப்போச்சி மூச்சி
பெண் : அட வேணா இந்த
பேச்சி இப்போ வெட்கம்
கூடி போச்சி

ஆண் : ஏதோ போல ஆச்சி
சூடு ஏறிப்போச்சி மூச்சி
பெண் : அட வேணா இந்த
பேச்சி இப்போ வெட்கம்
கூடி போச்சி

ஆண் : முத்து முத்து முத்தம்
கொடுத்து பித்தம் இது ஆறாது
மெத்தையில கட்டி பொரண்டா
மோகம் இது மாறாது

பெண் : காஞ்ச மாடு
தோட்டத்துக்குள்ள
பூந்தது என்ன இப்போது
கன்னி பொண்ண கட்டிபுடிச்சா
தண்டணை இப்போ தப்பாது

ஆண் : எதுக்கும் இப்போ
துணிஞ்சிவந்தேன் இன்னும்
தடை என்ன வா புள்ள

பெண் : இளம் வயசு பொண்ண
வசியம் பண்ணும் வளவிக்காரன்
நல்ல மனச தொட்டு மயங்க
வைக்கும் மதுர காரன்

ஆண் : அடி போட்டுக்கடி
பொன் வளவி பூட்டிக்கடி
நா போட்டபின்ன பாரு
நீ பொன்னு மணித்தேரு
நா போட்டபின்னே பாரு
நீ பொன்னு மணித்தேரு

பெண் : இளம் வயசு பொண்ண
வசியம் பண்ணும் வளவிக்காரன்
ஆண் : நல்ல மனச தொட்டு மயங்க
வச்சி வளைக்கபோறேன்

**********************************************

Monday, April 8, 2019

வா பொன் மயிலே - (பூந்தளிர்)



படம்: பூந்தளிர்
இசை: இளையராஜா

*********************************

வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை கண்மணி

வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

*********************************

காதலின் ஜாடையெல்லாம் கண்ணழகிலே
கோவிலின் தேரழகோ முன்னழகிலே
கனியே மனம் மயங்க மயங்க
வருவாய் சுவை பெருகப் பெருக
இளமையின் நளினமே
இனிமையின் உருவம் மலர

வா பொன் மயிலே நெஞ்சம்
ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை கண்மணி

வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

*********************************

மேனியின் மஞ்சள் நிறம்
வானளந்ததோ
பூமியின் நீல நிறம் கண்ணளந்ததோ
அழகே சுகம் வளர வளர
நினைவே தினம் பழகப் பழக
உரிமையில் அழைக்கிறேன்
உயிரிலே கலந்து மகிழ

வா பொன் மயிலே நெஞ்சம்
ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை கண்மணி

வா பொன் மயிலே நெஞ்சம்
ஏக்கத்தில் தவிக்குது

*********************************

என் வாழ்விலே வரும் அன்பே வா - (தம்பிக்கு எந்த ஊரு)



படம்: தம்பிக்கு எந்த ஊரு
இசை: இளையராஜா

*********************************

என் வாழ்விலே வரும் அன்பே வா
என் வாழ்விலே வரும் அன்பே வா
கண்ணே வா நிலா முகம் கண்டேன் வா
ஒரே சுகம் நாம் காணஇன்பம்
என் வாழ்விலே வரும் அன்பே வா
என் வாழ்விலே

*********************************

இரும்பாக நினைத்தேனே
கரும்பாக இனித்தாயே
என்னென்ன எண்ணங்கள் உன் நெஞ்சிலே
இரும்பாக நினைத்தேனே
கரும்பாக இனித்தாயே
என்னென்ன எண்ணங்கள் உன் நெஞ்சிலே
காணாத சொர்க்கம் உந்தன் காதல் அல்லவா
லாலால லாலா லால லாலா லாலலா
தீராத மோகம் தந்த தேவி இங்கு வா

என் வாழ்விலே வரும் அன்பே வா
என் வாழ்விலே வரும் அன்பே வா
கண்ணே வா நிலா முகம் கண்டேன் வா
ஒரே சுகம் நாம் காண இன்பம்
என் வாழ்விலே வரும் அன்பே வா
என் வாழ்விலே

*********************************

சொன்னாலும் தீராது
சும்மாவும் போவாது
சூடான பன்னீரில் நீராட வா
சொன்னாலும் தீராது
சும்மாவும் போவாது
சூடான பன்னீரில் நீராட வா
பூவாடும் தேகம் எங்கும் வாசம் கொண்டு வா
லாலால லாலா லால லாலா லாலலா
நான் பாடும் பாடல் எங்கும் நேசம் உண்டு வா

என் வாழ்விலே வரும் அன்பே வா
என் வாழ்விலே வரும் அன்பே வா
லாலாலா லலாலல லாலாலா
லாலால லலாலல லாலாலா இன்பம்
என் வாழ்விலே வரும் அன்பே வா
வரும் அன்பே வா
வரும் அன்பே வா
ஹேய் லால லல்லா லா

*********************************

Thursday, April 4, 2019

வாழவைக்கும் காதலுக்கு ஜே - (அபூர்வ சகோதரர்கள்)



படம்: அபூர்வ சகோதரர்கள்
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
வாழவைக்கும் காதலுக்கு ஜே
வாலிபத்தின் பாடலுக்கும் ஜே

பெண்:
தூதுவிட்ட கண்கள் உன்னை தேடுதே
அம்பு விட்ட காமனுக்கும் ஜே

ஆண்:
வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே
நம் வாசல் வந்த தென்றலுக்கு ஜே

பெண்:
வாழவைக்கும் காதலுக்கு ஜே
வாலிபத்தின் பாடலுக்கும் ஜே

*********************************

பெண்:
ஆஆ  ரதார  ரதார  ரதார 
நாணம் என்னை விட்டுச்சே
மோகம் என்னை தொட்டுச்சே
கையணைக்க கையணைக்க

ஆண்:
கன்னி விழி பட்டுச்சே
காளை மனம் கெட்டுச்சே
மெய்யணைக்க மெய்யணைக்க

பெண்:
கள்ளோடும் முள்ளோடும்
தள்ளாடும் செம்பூவை
நீயும் அள்ள அம்மம்மா
என்னென்ன ரசிச்சே

ஆண்:
முன்னாலும் பின்னாலும்
முத்தாட இந்நேரம்
மோகம் கொண்டு
அப்பப்பா தப்புக்கு தவிச்சே

பெண்:
பார்வை தனில் நாளும்
நீந்தும் பாவை ஒரு மீனாச்சே

ஆண்:
தேகம் தனை நாளும் மூட
ஆடை இந்த ஆளாச்சே

பெண்:
வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே
நம் வாசல் வந்த தென்றலுக்கு ஜே

ஆண்:
வாழவைக்கும் காதலுக்கு ஜே
வாலிபத்தின் பாடலுக்கும் ஜே

பெண்:
தூதுவிட்ட கண்கள் உன்னை தேடுதே
அம்பு விட்ட காமனுக்கும் ஜே

பெண்:
வாழவைக்கும் காதலுக்கு ஜே
வாலிபத்தின் பாடலுக்கும் ஜே

*********************************

ஆண்:
தேன் மழையும் கொட்டுச்சே
தேகம் எங்கும் பட்டுச்சே
வெட்கம் விட்டு பக்கம் நிற்க

பெண்:
பெண் மனது அஞ்சிச்சே
போதும் என்று கஞ்சிச்சே
வஞ்சி என்னை கொஞ்ச கொஞ்ச

ஆண்:
உன் மடி பொன் மடி
மன்னவன் கொண்டாடும் நேரம் என்ன
சொல்லடி சொல்லடி சிந்திச்சே

பெண்:
பொன்மகள் பூமகள் என்மனம்
எந்நாளும் தஞ்சம் என்று
உன்னிடம் உன்னிடம் வந்துச்சே

ஆண்:
வாடை என நானும் வந்தேன்
வாழை மடல் போலாச்சே

பெண்:
வாரி எனை நானும் தந்தேன்
வாலிபந்தான் மேலாச்சே

ஆண்:
வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே
நம் வாசல் வந்த தென்றலுக்கு ஜே

பெண்:
வாழவைக்கும் காதலுக்கு ஜே (ஆண்: ம் ம் ம் )
வாலிபத்தின் பாடலுக்கும் ஜே  (ஆண்: ம் ம் ம் )

ஆண்:
தூதுவிட்ட கண்கள் உன்னை தேடுதே
அம்பு விட்ட காமனுக்கும் ஜே

பெண்:
வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே
நம் வாசல் வந்த தென்றலுக்கு ஜே

ஆண்: வாழவைக்கும் காதலுக்கு ஜே
பெண்: வாலிபத்தின் பாடலுக்கும் ஜே

பெண்: வாழவைக்கும் காதலுக்கு ஜே (ஆண்: ம் ம் ம் )
ஆண்: வாலிபத்தின் பாடலுக்கும் ஜே

*********************************

உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் - (அபூர்வ சகோதரர்கள்)



படம்: அபூர்வ சகோதரர்கள்
இசை: இளையராஜா

*********************************

உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே


உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
அந்த வானம் அழுதாத்தான்
இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சிலபேர்
சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்
உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே

*********************************

ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேணும்
கொட்டும் மழை காலம் உப்பு விக்க போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன்

தப்பு கணக்கை போட்டு தவித்தேன்
தங்கமே ஞான தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன்
தங்கமே ஞான தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு
நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்

உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே

*********************************

கண்ணிரண்டில் நான் தான் காதல் என்னும் கோட்டை
கட்டி வைத்து பார்த்தேன் அதனையும் ஓட்டை
உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும்
நட்ட விதை யாவும் நல்ல மரம் ஆகும்

ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம்
தங்கமே ஞான தங்கமே
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம்
தங்கமே ஞான தகமே
நலம் புரிந்தாய் எனக்கு
நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்

உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே

அந்த வானம் அழுதாத்தான்
இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சிலபேர்
சொந்த வாழ்க்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்

உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே

*********************************

Wednesday, April 3, 2019

வண்ணம் கொண்ட வெண்ணிலவே - (சிகரம்)



படம்: சிகரம்
இசை: எஸ். பி. பாலசுப்ரமணியம்

*********************************

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ

விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே

*********************************

பக்கத்தில் நீயும் இல்லை
பார்வையில் ஈரம் இல்லை
சொந்தத்தில் பாஷை இல்லை
சுவாசிக்க ஆசை இல்லை

பக்கத்தில் நீயும் இல்லை
பார்வையில் ஈரம் இல்லை
சொந்தத்தில் பாஷை இல்லை
சுவாசிக்க ஆசை இல்லை

கண்டு வந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானம் இல்லை
நீளத்தை பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை
தள்ளி தள்ளி நீ இருந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே

*********************************

நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்ச்சத்திர பூ பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி

நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்ச்சத்திர பூ பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி

கன்னி உன்னை பார்த்திருப்பேன்
கால் கடுக்க காத்திருப்பேன்
ஜீவன் வந்து சேரும்வரை
தேகம் போல் நான் கிடப்பேன்

தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை

வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே

*********************************

Tuesday, April 2, 2019

மடை திறந்து - (நிழல்கள்)

படம்: நிழல்கள்
இசை: இளையராஜா

*********************************

மடை திறந்து தாவும் நதி அலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசைக் கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹே
தனனன்னனா நான்ன நனனா
தனனன்னனா நான்ன நனனா


ஹேய் ஹப் பபப்பபப்பா
பபப்பபப்பா பாபப்ப பாபப்பா
பபப்பபப்பா பாபப்ப பாபப்பா
பபப்பபப்பா பாபப்ப பாபப்பா

*********************************

காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே
நானும் இறைவனே.. ஹேய்
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின்
நாட்டியம் அமைப்பேன் நான்

மடை திறந்து தாவும் நதி அலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசைக் கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹே ...

*********************************

நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்களம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்களம்
இசைக்கென இசைக்கின்ற ரசிகர்கள்
ராஜ்ஜியம் எனக்கே தான்

மடை திறந்து தாவும் நதி அலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசைக் கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹே

லலலல்லல்லா லால்லலலலா
லலலல்லல்லா லால்லலலலா


*********************************

கண்ணன் வந்து பாடுகின்றான் - (ரெட்டை வால் குருவி)



படம்: தனிக்காட்டு ராஜா
இசை: இளையராஜா

*********************************

கண்ணன் வந்து பாடுகின்றான்
காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்
காதல் சொன்னான்
காற்றில் குழல் ஓசை
பேசும் பூ மேடை மேலே

கண்ணன் வந்து பாடுகின்றான்
காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்
காதல் சொன்னான்
காற்றில் குழல் ஓசை
பேசும் பூ மேடை மேலே

கண்ணன் வந்து பாடுகின்றான்
காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்
காதல் சொன்னான்

*********************************

கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே
பாதங்கள் வண்ணப்பண்கள் பாடுதே
மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே
தாகங்கள் இன்பக்கள்ளில் ஊறுதே
காதலென்னும் ஓ  ஓ
காதலென்னும் கூட்டுக்குள்ளே
ஆசைக்குயில் கொஞ்சுதம்மா
இவள் வண்ணம் கூடி சின்னம் தேடி
மின்னும் தோளில் கன்னம் கூட
சந்தம் பாடி சொந்தம் தேடி
சொர்க்கங்கள் மலர்ந்ததோ

கண்ணன் வந்து பாடுகின்றான்
காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்
காதல் சொன்னான்
காற்றில் குழல் ஓசை
பேசும் பூ மேடை மேலே

கண்ணன் வந்து பாடுகின்றான்
காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்
காதல் சொன்னான்

*********************************

வானத்தில் செல்லக்கண்ணன் பாடுவான்
கானத்தில் சின்னப்பெண்ணும் ஆடுவாள்
ஆயர்கள் மத்துச்சத்தம் போலவே
ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே
மாலை நிலா ஓ  ஓ
மாலை நிலா பூத்ததம்மா
மௌன மொழி சொல்லுதம்மா
ஒரு அந்திப்பூவில் சிந்தும் தேனில்
வண்டு பேசும் தென்றல் வீசும்
கண்ணன் பாட கண்கள் மூட
கன்னங்கள் சிவந்ததோ

கண்ணன் வந்து பாடுகின்றான்
காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்
காதல் சொன்னான்
காற்றில் குழல் ஓசை
பேசும் பூ மேடை மேலே

கண்ணன் வந்து பாடுகின்றான்
காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபம் என்றான்
காதல் சொன்னான்

*********************************

Monday, April 1, 2019

சந்தனக் காற்றே - (தனிக்காட்டு ராஜா)



படம்: தனிக்காட்டு ராஜா
இசை: இளையராஜா

*********************************

ஆண் : சந்தனக் காற்றே
செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வா வா

சந்தனக் காற்றே
செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வா வா

காதோடு தான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை ஹோய் ஹோய்
நீங்காத ஆசை

பெண் : சந்தனக் காற்றே
செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வா வா

காதோடு தான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை ஹோய் ஹோய்
நீங்காத ஆசை

*********************************

ஆண் : நீர் வேண்டும் பூமியில்
பெண் : ந ந ந ந
ஆண் : பாயும் நதியே
பெண் : த ந ந ந
ஆண் : நீங்காமல் தோள்களில்
பெண் : த ந ந ந
ஆண் : சாயும் ரதியே
பெண் : ல ல ல ல
பெண் : பூலோகம் தெய்வீகம்…
பெண் : பூலோகம்
ஆண் : அ… மறைய மறைய
பெண் : தெய்வீகம்
ஆண் : அ…தெரியத் தெரிய
பெண் : வைபோகம்தான்…
பெண் : தநந நந நந நந (ஆண்:overlap நந நந நந நந)

சந்தனக் காற்றே
செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வா வா
ஆண் : காதோடு தான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை ஹோய் ஹோய்
நீங்காத ஆசை
பெண் : சந்தனக் காற்றே
ஆண் : செந்தமிழ் ஊற்றே
பெண் : சந்தோஷப் பாட்டே வா வா

*********************************

பெண் : கோபாலன் சாய்வதோ
ஆண் : ந ந ந ந
பெண் : கோதை மடியில்
ஆண் : ந ந ந ந
பெண் : பூபாளம் பாய்வதோ
ஆண் : ந ந ந ந
பெண் : பூவை மனதில்
ஆண் : ந ந ந ந
ஆண் :பூங்காற்றும் சூடேற்றும்
ஆண் : பூங்காற்றும்
பெண் : அ… தவழத் தவழ
ஆண் : சூடேற்றும்
பெண் : அ… தழுவ தழுவ
ஆண் : ஏகாந்தம்தான்…

பெண் : தநந நந நந நந (ஆண்:overlap நந நந நந நந)

பெண் : சந்தனக் காற்றே
செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே வா வா

ஆண் : காதோடு தான் நீ பாடும் ஓசை
நீங்காத ஆசை ஹோய் ஹோய்
நீங்காத ஆசை

பெண் : சந்தனக் காற்றே
ஆண் : செந்தமிழ் ஊற்றே
இரு: சந்தோஷப் பாட்டே வா வா


*********************************