படம்: பெரிய வீட்டு பண்ணக்காரன்
இசை: இளையராஜா
******************************************
ஆண்:
நிக்கட்டுமா போகட்டுமா
நீலக் கருங்குயிலே
நீலக் கருங்குயிலே
தாவணி போய் சேலை வந்து
சேலை தொடும் வேளை வந்து,தாவுதடி
பெண்:
சொல்லட்டுமா தள்ளட்டுமா
சோலைக் கருங்குயிலே
சோலைக் கருங்குயிலே
******************************************
பெண்:
ஓடையில் நான் அமர்ந்தேன்
அதில் என் முகம் பார்த்திருந்தேன்
ஓடையில் பார்த்த முகம்
அது உன் முகம் ஆனதென்ன
வாடையில் வாடிடும் பூவினைப் போல்
என் நெஞ்சமும் ஆனதென்ன
ஆண்:
தேரடி வீதியிலே ஒரு
தோரணம் நான் தொடுத்தேன்
தோரண வாசலிலே ஒரு
தோழியை கைப்பிடித்தேன்
பிடித்த கரம் இணைந்திடுமா
இணைந்திடும் நாள் வருமா
பெண்:
சொல்லட்டுமா தள்ளட்டுமா
சோலைக் கருங்குயிலே
சோலைக் கருங்குயிலே
தாவனி போய் சேலை வரும்
சேலையுடான் மலை வரும்
நாள் வரட்டும்
ஆண்:
நிக்கட்டுமா போகட்டுமா
நீலக் கருங்குயிலே
நீலக் கருங்குயிலே
******************************************
குழு:
தூகூதூத்து து து து தூகூதூத்து து
தூகூதூத்து து து து தூகூதூத்து து
ஆண்:
ராத்திரி நேரத்திலே ஒரு
ராகமும் கேட்டதடி
கேட்டது கிடைக்குமென்று
ஒரு சேதியும் சொன்னதடி
மல்லிகை பூச்செடி பூத்தது போல்
என் உள்ளமும் பூத்ததடி
பெண்:
அம்மனின் கோவிலிலே
அன்று ஆசையில் நான் நடந்தேன்
உன் மன கோவிலிலே
மெட்டி ஓசையில் பின் தொடர்ந்தேன்
நாடியது நடந்திடுமா
நடந்திடும் நாள் வருமா
ஆண்:
நிக்கட்டுமா போகட்டுமா
நீலக் கருங்குயிலே
நீலக் கருங்குயிலே
பெண்:
தாவனி போய் சேலை வரும்
சேலையுடான் மலை வரும்
நாள் வரட்டும்
ஆண்:
நிக்கட்டுமா போகட்டுமா
நீலக் கருங்குயிலே
நீலக் கருங்குயிலே
பெண்:
சோலைக் கருங்குயிலே
சோலைக் கருங்குயிலே
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...