தமிழில் தேட.....

Sunday, July 28, 2019

என்ன தான் சுகமோ நெஞ்சிலே - மாப்பிள்ளை பாடல் வரிகள்



படம்: மாப்பிள்ளை
இசை: இளையராஜா

******************************************

பெண்:
என்ன தான் சுகமோ நெஞ்சிலே
இது தான் வளரும் அன்பிலே

ஆண்:
ராகங்கள் நீ பாடி வா பண்பாடும்
மோகங்கள் நீ காணவா என்னாளும்
காதல் உறவே
என்ன தான் சுகமோ நெஞ்சிலே
இது தான் வளரும் அன்பிலே

******************************************

பெண்:
பூவோடு வண்டு புது மோகம் கொண்டு
சொல்கின்ற வண்ணங்கள் நீ சொல்லத்தான்

ஆண்:
நான் சொல்லும் போது இரு கண்கள் மூடி
எழுதாத எண்ணங்கள் நீ சொல்லத்தான்

பெண்:
இன்பம் வாழும் உந்தன் நெஞ்சம்

ஆண்:
தீபம் ஏற்றும் காதல் ராணி

பெண்:
சிந்தாத முத்துக்களை
நான் சேர்க்கும் நேரம் இது
காதல் உறவே

என்ன தான் சுகமோ நெஞ்சிலே
இது தான் வளரும் அன்பிலே

******************************************

ஆண்:
தீராத மோகம் நான் கொண்ட நேரம்
தேனாக நீ வந்து சீராட்டத்தான்

பெண்:
காணாத வாழ்வு நீ தந்த வேளை
பூமாலை நான் சூட்டிப் பாராட்டத்தான்

ஆண்:
நீ என் ராணி நான் தான் தேனி

பெண்:
நீ என் ராஜா நான் உன் ரோஜா

ஆண்:
தெய்வீக பந்தத்திலே
நான் கண்ட சொர்க்கம் இது
காதல் உறவே

என்ன தான் சுகமோ நெஞ்சிலே
இது தான் வளரும் அன்பிலே

பெண்:
ராகங்கள் நீ பாடி வா பண்பாடும்
மோகங்கள் நீ காணவா என்னாளும்
காதல் உறவே
என்ன தான் சுகமோ நெஞ்சிலே

ஆண்:
இது தான் வளரும் அன்பிலே

******************************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...