படம்: கரகாட்டக்காரன்
இசை: இளையராஜா
******************************************
ஆண்:
மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு
பெண்:
மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு
ஆண்:
முத்து முத்துக் கண்ணாலே
நான் சுத்தி வந்தேன் பின்னாலே
பெண்:
முத்து முத்துக் கண்ணாலே
நான் சுத்தி வந்தேன் பின்னாலே
ஆண்:
மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
பெண்:
ஒன்ன மாலையிடதேடி வரும்
நாளு எந்த நாளு
******************************************
ஆண்:
காலைத்தழுவி நிக்கும்
கனகமணி கொலுசு
யம்மா நானாக மாற இப்போ
நெனக்குதம்மா மனசு
பெண்:
உள்ளே இருக்குறீக
வெளிய என்ன பேச்சு
ஐயா ஒண்ணும் புரியவில்ல
மனசு எங்கே போச்சு
ஆண்:
இந்த மனசு நஞ்சே நெலந்தான்
வந்து விழுந்த நல்ல வெததான்
சந்திரனத்தான் சாட்சியும் வெச்சு
சொன்ன கததான் சொந்த கததான்
பெண்:
தோள தொட்டு ஆட
ஐயா சொர்க்கத்துல சேர
மால வந்து ஏற
பொண்ணு சம்மதத்தக் கூற
ஆண்:
சந்தனங்கரசசுப் பூசணும் எனக்கு
முத்தையன் கணக்கு மொத்தமும் ஒனக்கு
பெண்:
மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
ஆண்:
ஒன்ன மாலையிடதேடி வரும்
நாளு எந்த நாளு
******************************************
பெண்:
மாமரத்து கீழே நின்னு
மங்கையவ பாட
அந்த மங்கை குரலில் மனம்
மயங்கியது யாரோ
ஆண்:
பூமரத்து கீழிருந்து
பொண்ணூ அவ குளிக்க
அந்த பூமரத்து மேலிருந்து
புலம்பியது யாரோ
பெண்:
கன்னி மனசு ஒன்ன நெனச்சு
தன்னந்தனியே எண்ணித் தவிக்கும்
பொன்னை எடுத்து அள்ளிக் கொடுத்து
வண்ணக் கனவு அள்ளித் தெளிக்கும்
ஆண்:
கூரைப் பட்டுச் சேலை
அம்மா கூட ஒரு மால
வாங்கி வரும் வேள
பொண்ணு வாசமுள்ள சோல
பெண்:
தாலிய முடிக்கும் வேளைய நெனச்சு
தேடுது மனசு பாடுது வயசு
ஆண்:
மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
பெண்:
ஒன்ன மாலையிடதேடி வரும்
நாளு எந்த நாளு
ஆண்:
முத்து முத்துக் கண்ணாலே
நான் சுத்தி வந்தேன் பின்னாலே
பெண்:
முத்து முத்துக் கண்ணாலே
நான் சுத்தி வந்தேன் பின்னாலே
ஆண்:
மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு
பெண்:
ஒன்ன மாலையிடதேடி வரும்
நாளு எந்த நாளு
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...