தமிழில் தேட.....

Tuesday, October 8, 2019

குருவாயூரப்பா குருவாயூரப்பா - புதுப்புது அர்த்தங்கள் பாடல் வரிகள்



படம் : புதுப்புது அர்த்தங்கள்
இசை: இளையராஜா

*********************************

ஆண் :
குருவாயூரப்பா குருவாயூரப்பா
குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட
காதலுக்கு நீதானே சாட்சி

பெண் :
குருவாயூரப்பா குருவாயூரப்பா
வேண்டாத தெய்வம் இல்லை
நீதானே பாக்கி

ஆண் :
ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை
என்னாளும் உன் பாதை
ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை
என்னாளும் உன் பாதை

பெண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு
நீதானே சாட்சி

*********************************

ஆண் :
தேனாற்றங்கரையில் தெய்வீகக்குரலில்
நான்தான் ஒரு பாட்டிசைத்தேன்

பெண் :
தினம் தோறும் இரவில்
நடு ஜாமம் வரையில்
நான்தானே அதைக் கேட்டிருந்தேன்

ஆண் :
அரங்கேற்றம் தான் ஆகாமல்தான்
அலைபாயும் என் ஜீவன் தான்

பெண் :
வா வா என் தேவா
செம்பூவா என் தேகம்
சேராதோ உன் கைகளிலே

ஆண் :
குருவாயூரப்போ குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு
நீதானே சாட்சி

*********************************

பெண் :
ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும்
என் மேல் ஒரு போர் தொடுக்க

ஆண் :
எனை வந்து தழுவு ஏனிந்தப் பிரிவு
மானே வா உனை யார் தடுக்க

பெண் :
பரிமாறலாம் பசியாறலாம்
பூமாலை நீ சூடும் நாள்

ஆண் :
மாது உன் மீது
இப்போது என்மோகம்
பாயாதோ சொல் பூங்குயிலே

ஆண் :
குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு
நீதானே சாட்சி

பெண் :
குருவாயூரப்பா குருவாயூரப்பா
வேண்டாத தெய்வம் இல்லை
நீதானே பாக்கி

ஆண் :
ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன
நான் போகும் பாதை
என்னாளும் உன் பாதை

பெண் :
குருவாயூரப்பா குருவாயூரப்பா
நான் கொண்ட காதலுக்கு
நீதானே சாட்சி

ஆண் :
நான் கொண்ட காதலுக்கு
நீதானே சாட்சி

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...