படம் : உதயகீதம்
இசை: இளையராஜா
*********************************
பெண் :
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
ஆ ஆ ஆஆஆஆ
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
*********************************
பெண் :
நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமல் ஏன் போகுமோ
கைதான போதும் கை சேர வேண்டும்
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறவே
ஆண் :
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே
*********************************
ஆண் :
ஊரெங்கும் போகும் என் ராகங்களே
உன் வீடு தேடும் என் மேகங்களே
பூ மீது தேன் தூவும் காதல் வரம்
என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்
காவேரி வெள்ளம் கை சேரத் துள்ளும்
ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே
பெண் : உன் பாடலை நான் கேட்கிறேன்
ஆண் : பாமாலையை நான் கோர்க்கிறேன்
பெண் : பாடும் நிலாவே
ஆண் : தேன் கவிதை
பெண் : பூ மலரே
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...