தமிழில் தேட.....

Wednesday, October 30, 2019

கண்மணியே பேசு - காக்கிச்சட்டை பாடல் வரிகள்



படம்: காக்கிச்சட்டை
இசை: இளையராஜா

******************************************

ஆண்:
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ

பெண்:  ஆஹா

ஆண்: உன் கண்கள் இரு ஊதாப்பூ
பெண்: ஹாஹ்

ஆண்:
இது பூவில் பூத்த பூவையோ
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு

******************************************

ஆண்:
அந்தப்புறம் எந்தப்புறமோ விழி மையிட்டு
அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு
அந்தப்புறம் எந்தப்புறமோ விழி மையிட்டு
அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு

பெண்:
ஆயிரம் பொன் பூக்கும் எந்தன்
தேகம் எங்குமே

ஆண்:
லல லல லலலா

பெண்:
அங்குலம் விடாமல் இன்ப கங்கை பொங்குமே

ஆண்:
லல லல லலலா
தோளிலும் என் மார்பிலும்
கொஞ்சிடும் என் அஞ்சுகம்
நான் நீ ஏது ஓய் ஓய்

பெண்:
கண்மணியே பேசு

ஆண்: ம்ம்

பெண்:
மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ

ஆண்: ஆஹ்

பெண்: என் கண்கள் இரு ஊதாப்பூ

ஆண்: ம்ம்

பெண்:
இது பூவில் பூத்த பூவையே
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு

******************************************

பெண்:
உன்னைக் கொடு என்னைத் தருவேன்
ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ்
சொல்லித் தருவேன் விழி மூடாமல்
உன்னைக் கொடு என்னைத் தருவேன்
ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ்
சொல்லித் தருவேன் விழி மூடாமல்

ஆண்:
கண்களால் என் தேகம்
எங்கும் காயம் செய்கிறாய்

பெண்:
லல லல லலலா

ஆண்:
கைகளால் என் பாதம்
நீவி ஆறச் செய்கிறாய்

பெண்:
லல லல லலலா
வானகம் இவ்வையகம் யாவுமே
என் கையகம் நீதான் தந்தாய் ஓ ஓ…

ஆண்:
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு

பெண்:
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு

ஆண்:
கன்னங்கள் புது ரோசாப்பூ

பெண்: ஆஹா

ஆண்:
உன் கண்கள் இரு ஊதாப்பூ

பெண்:
இது பூவில் பூத்த பூவையே
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு

******************************************

1 comment:

  1. அருமையான வரிகள் மற்றும் பாடல்

    ReplyDelete

உங்கள் கருத்து...