படம்: செம்பருத்தி
இசை: இளையராஜா
*********************************
ஆண்1:
கடலிலே தனிமையில் போனாலும்
ம்ம் ம்ம் ம்ம்ம்
கண்மணி உன் நினைவில் களைப்பாறுவேன்
அலைகளில் தத்தளித்தாலும்
அவள் நினைவில் முக்குளிப்பேனே
அடியே அமுதே இதுவே போதும்
ஆண்1:
நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு
சிட்டு அவள் காதோரம் சேர்க்காதோ காத்து
நித்தம் உனை காணாது
நித்திரையும் தோணாது
சித்திரமே முத்து ரதமே
எட்டி எட்டி போனாலும்
கெட்டு மனம் போகாது
அற்புதமே அன்னக்கிளியே
ஆண்1:
பிரிந்தது உயிரல்ல உடல்தான்
விட்டு விலகாது உயிர் காதலே
கரையிலே கன்னி துடித்தாளே
கட்டுமரம் மீதில் காளை தவித்தானே
இதுதான் காதலில் இடைவேளை
*********************************
ஆண்1:
வந்தவர்கள் போனார்கள் போகாது காதல்
வங்கக் கடல் மீதாணை தேயாது காதல்
சுத்திவரும் புயலென்ன
கொட்டுகின்ற இடி என்ன
அன்பு விளக்கு என்றும் எரியும்
தெய்வத்துக்கு திரை என்ன
காதலுக்கு மறைவென்ன
உங்களுக்கு என்று புரியும்
ஆண்1:
ஆற்றிலே இக்கரையில் நின்று
அக்கரைக்கு தூது விட கூறலாம்
எண்ணத்தைச் சொல்ல நடு ஆழியில்
அன்னப்பறவையின் நான் எங்கு தேடுவேன்
அடியே அமுதே வருந்தாதே
*********************************
ஆண்2:
விட்டு இனி போகாது விடிவெள்ளி தூரம்
கட்டுமரம் கடலாடி கரையேறும் நேரம்
உப்பெடுக்கும் நேரம் ஒன்று
முத்தெடுக்கும் நேரம் இன்று
சித்திரமே செப்பு குடமே
கட்டுமுண்டு காவலுமுண்டு
நம்மை என்ன செய்யும் என்று
நித்திலமே முத்து ரதமே
நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு
சிட்டு அவள் காதோரம் சேர்க்காதோ காத்து
நித்தம் உன்னை காணாது
நித்திரையும் தோணாது
சித்திரமே முத்துரதமே
எட்டி எட்டிப் போனாலும்
கெட்டு மனம் போகாது
அற்புதமே அன்னக்கிளியே
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...