படம்: கிழக்கே போகும் ரயில்
இசை: இளையராஜா
*********************************
ஆண்:
கோவில் மணி ஓசை தன்னை
கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ
<<பாஞ்சாலி பாஞ்சாலி>>
பெண்:
கோவில் மணி ஓசை தன்னை
செய்ததாரோ
அவர் என்ன பேரோ
<<பரஞ்சோதி பரஞ்சோதி >>
ஆண்:
கோவில் மணி ஓசை தன்னை
கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ
கன்னி பூவோ பிஞ்சு பூவோ
ஏழை குயில் கீதம் தரும் நாதம்
அது காற்றானதோ
தூதானதோ
பெண்:
கோவில் மணி ஓசை தன்னை
செய்ததாரோ
அவர் என்ன பேரோ
பாட்டு பாடும் கூட்டத்தாரோ
ஏழை குயில் கீதம் தரும் நாதம்
அது கொண்டாந்ததோ
என்னை இங்கு
ஆண்:
கோவில் மணி ஓசை தன்னை
கேட்டதாரோ
*********************************
ஆண்:
பாடல் ஒரு கோடி செய்தேன்
கேட்டவர்க்கு ஞானம் இல்லை
ஆசைக் கிளியே வந்தாயே பண்ணோடு
நான் பிறந்த நாளில் இது நல்ல நாளே
சின்ன சின்ன முல்லை கிளி பிள்ளை
என்னை வென்றாளம்மா
கோவில் மணி ஓசை தன்னை
கேட்டதாரோ
பெண்:
ஊருக்கு போன பொண்ணு
உள்ளூரு செல்லக் கண்ணு
கோவில் மணி ஓசை கேட்டாளே வந்தாளே
பாவம் உந்தன் கச்சேரிக்கு
பொண்ணு நானா
பாடும் வரை பாடு
தாளத்தோடு
அதை நீயே கேளு
கோவில் மணி ஓசை தன்னை
செய்ததாரோ
*********************************
ஆண்:
என் மனது தாமரை பூ
உன் மனது முல்லை மொட்டு
காலம் வருமே நீ கூட பெண்ணாக
பெண்:
ஊரில் ஒரு பெண்ணா இல்லை
தேடிப் பாரு
நல்ல பெண்ணை கண்டால்
கொஞ்சம் சொல்லு
ஆண்:
அது நீதானம்மா
ஆண்:
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ
இங்கு வந்ததாரோ
பெண்:
பாட்டு பாடும் கூட்டத்தாரோ
ஆண்:
ஏழை குயில் கீதம் தரும் நாதம்
பெண்:
அது கொண்டாந்ததோ என்னை இங்கு
பெண்:
கோவில் மணி ஓசை தன்னை
செய்ததாரோ
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...