படம் : சிறைச்சாலை
இசை: இளையராஜா
*********************************
ஆண்:
செம்பூவே பூவே உன் மேகம்
நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெண்:
சாய்ந்தாடும் சங்கில் துளி
பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
ஆண்:
படை கொண்டு நடக்கும்
மன்மதச் சிலையோ ஹோ
பெண்:
மன்னவன் விரல்கள்
பல்லவன் உளியோ ஹோ
ஆண்:
இமைகளும் உதடுகள் ஆகுமோ
பெண்:
வெட்கத்தின் விடுமுறை
ஆயுளின் வரைதானோ
ஆண்:
செம்பூவே பூவே உன் மேகம்
நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெண்:
சாய்ந்தாடும் சங்கில் துளி
பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
*********************************
ஆண்:
அந்திச் சூரியனும் குன்றில் சாய
மேகம் வந்து கச்சையாக
காமன் தங்கும் மோகப்
பூவில் முத்தக் கும்மாளம்
பெண்:
தங்கத் திங்கள்
நெற்றிப் பொட்டும் இட்டு
வெண்ணிலாவின் கன்னம் தொட்டு
நெஞ்சில் ஆடும் சுவாசச்சூட்டில்
காதல் குற்றாலம்
ஆண்:
தேன் தெளிக்கும் தென்றலாய்
நின்னருகில் வந்து நான்
சேலை நதியோரமாய்
நீந்தி விளையாடவா
பெண்:
நாளும் மின்னல் கொஞ்சும்
தாழம்பூவைச் சொல்லி
ஆண்:
ஆசைக் கேணிக்குள்ளே
ஆடும் மீன்கள் துள்ளி
பெண்:
கட்டிலும் கால்வலி கொள்ளாதோ
கைவளை கைகளை கீறியதோ
ஆண்:
செம்பூவே பூவே உன் மேகம்
நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெண்:
சாய்ந்தாடும் சங்கில் துளி
பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
*********************************
பெண்:
இந்த தாமரைப்பூ தீயில் இன்று
காத்திருக்கு உள்ளம் நொந்து
கண்கள் என்னும் தூண்டில்
தும்பி பாடிச் செல்லாதோ
ஆண்:
அந்த காமன் அம்பு என்னைச் சுட்டு
பாவை நெஞ்சின் நாணம் சுட்டு
மேகலையின் நூலறுக்கும்
சேலைப் பொன் பூவே
பெண்:
விம்மியது தாமரை
வண்டு தொடும் நாளிலோ
பாவை மயில் சாயுதே
மன்னவனின் மார்பிலோ
ஆண்:
முத்தத்தாலே பெண்ணே
சேலை நெய்வேன் கண்ணே
பெண்:
நாணத்தாலோர் ஆடை
சூடிக் கொள்வேன் நானே
ஆண்:
பாயாகும் வழி சொல்லாதே
பஞ்சணை புதையல் ரகசியமே
பெண்:
சாய்ந்தாடும் சங்கில் துளி
பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
ஆண்:
செம்பூவே பூவே உன் மேகம்
நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெண்:
மன்னவன் விரல்கள்
பல்லவன் உளியோ ஹோ
ஆண்:
படை கொண்டு நடக்கும்
மன்மதச் சிலையோ ஹோ
பெண்:
இமைகளும் உதடுகள் ஆகுமோ
ஆண்:
வெட்கத்தின்
விடுமுறை ஆயுளின் வரைதானோ
செம்பூவே பூவே உன் மேகம்
நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெண்:
சாய்ந்தாடும் சங்கில் துளி
பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...