தமிழில் தேட.....

Monday, October 21, 2019

குறுக்கு சிறுத்தவளே - முதல்வன் பாடல் வரிகள்



படம்: முதல்வன்
இசை: ஏ ஆர் ரஹ்மான்

*********************************

ஆண்:
குறுக்கு சிறுத்தவளே
என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
எண்ணக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக
என்னக் கொஞ்சம் மாத்து தாயே
குறுக்கு சிறுத்தவளே
என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
எண்ணக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக
என்னக் கொஞ்சம் மாத்து தாயே

பெண்:
ஒரு கண்ணில் நீர் கசிய
உதட்டு வழி உசிர் கசிய
உன்னால சில முறை இறக்கவும்
சில முறை பிறக்கவும்
ஆனதே
அட ஆத்தோட விழுந்த இல
அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு ஒண்ணோடுதான்
பின்னோடுதே
அட காலம் மறந்து
காட்டு மரமும் பூக்கிறதே

ஆண்:
குறுக்கு சிறுத்தவளே
என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
எண்ணக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக
என்னக் கொஞ்சம் மாத்து தாயே

*********************************

பெண்:
கம்பஞ்சங்கு விழுந்த மாதிரியே
கண்ணுக்குள்ள நொழஞ்சு உறுத்தறயே

ஆண்:
கொடியவிட்டு குதிச்ச மல்லிகையே
ஒரு மொழி சிரிச்சு பேசடியே


பெண்:
வாயி மேல வாய வெச்சு
வார்த்தைகள உறிஞ்சி புட்ட
வெரல வெச்சி அழுத்திய கழுத்துல
கொளுத்திய வெப்பம் இன்னும்
போகல

ஆண்:
அடி உம்போல செவப்பு இல்ல
கணுக்கால் கூட கருப்பு இல்ல
நீ தீண்டும் இடம்
தித்திக்குமே
இனி பாக்கி ஒடம்பும் செய்ய வேண்டும்
பாக்கியமே
குறுக்கு சிறுத்தவளே
என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
எண்ணக் கொஞ்சம் பூசு தாயே
உன் கொலுசுக்கு மணியாக
என்னக் கொஞ்சம் மாத்து தாயே

*********************************


ஆண்:
ஒரு தடவ இழுத்து அணச்சபடி
உயிர் மூச்ச நிறுத்து கண்மணியே

பெண்:
உம்முதுக தொலச்சி வெளியேற
இன்னும் கொஞ்சம் இறுக்கு என்னவனே

ஆண்:
மழையடிக்கும் சிறு பேச்சு
வெயிலடிக்கும் ஒரு பார்வ
ஒடம்பு மண்ணில் புதையற வரையில்
உடன் வரக் கூடுமோ

பெண்:
உசிர் என்னோட இருக்கையில
நீ மண்ணோட போவதெங்கே
அட உன் ஜீவனில்
நானில்லையா
கொல்ல வந்த மரணம் கூடக்
குழம்புமய்யா

ஆண்:
குறுக்கு சிறுத்தவளே
என்னக் குங்குமத்தில் கரச்சவளே
மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
எண்ணக் கொஞ்சம் பூசு தாயே
கொலுசுக்கு மணியாக
என்னக் கொஞ்சம் மாத்து தாயே


பெண்:
ஒரு கண்ணில் நீர் கசிய
உதட்டு வழி உசிர் கசிய
உன்னால சில முறை இறக்கவும்
சில முறை பிறக்கவும்
ஆனதே
அட ஆத்தோட விழுந்த இல
அந்த ஆத்தோட போவது போல்
நெஞ்சு ஒண்ணோடுதான்
பின்னோடுதே
அட காலம் மறந்து காட்டு மரமும்
பூக்கிறதே

ஆண்:
குறுக்கு சிறுத்தவளே
என்னக் குங்குமத்தில் கரச்சவளே
நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்

பெண்:
உன்ன கொஞ்சம் பூசுவயா

ஆண்:
உன் கொலுசுக்கு மணியாக

பெண்:
என்னக் கொஞ்சம்மாத்துவயா

ஆண்:
ஒ ஹோ ஓ ஓ ஓ ஹோ

பெண்:
ஒ ஹோ ஓ ஓ ஓ ஹோ

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...