தமிழில் தேட.....

Tuesday, October 22, 2019

கஸ்தூரி மானே கல்யாண - புதுமைப்பெண் பாடல் வரிகள்



படம்: புதுமைப்பெண்
இசை: இளையராஜா

*********************************

ஆண்:
கஸ்தூரி மானே கல்யாணத் தேனே
கச்சேரி பாடு
வந்து கைத்தாளம் போடு
ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து
சூடிப்பார்க்கும் நேரம் இது

பெண்:
ஜாதிப்பூவை நெஞ்சோடு நீ சேர்த்து
சூடிப்பார்க்கும் நேரம் இது
கஸ்தூரி மானே கல்யாணத் தேனே
கச்சேரி பாடு
வந்து கைத்தாளம் போடு

*********************************
குழு:
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

ஆண்:
கட்டில் ஆடாமல் தொட்டில்கள் ஆடாது
கண்ணே வெட்கத்தை விட்டு தள்ளு

பெண்:
கன்னம் புண்பட்டு வெட்கத்தை நீ தொட்டு
நெற்றி பொட்டொன்று வைத்துக்கொள்ளு

ஆண்:
பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாயூரும்
அருந்த நேரஞ்சொல்லு
பாலூறும் வாயோரம் பார்த்தாலே வாயூரும்
அருந்த நேரஞ்சொல்லு

பெண்:
பெண்மையே பேசுமா
பெண்மையே பேசுமா

ஆண்:
மௌனம்தான் பள்ளியறை மந்திரமா

பெண்:
கஸ்தூரி மானே கல்யாணத் தேனே
கச்சேரி பாடு
வந்து கைத்தாளம் போடு

ஆண்:
ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து
சூடிப்பார்க்கும் நேரம் இது
கஸ்தூரி மானே கல்யாண தேனே
கச்சேரி பாடு
வந்து கைத்தாளம் போடு

*********************************

குழு:
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

பெண்:
ஆஹா பொன் முத்தம்
ரத்தத்தில் ஏன் சத்தம்
என்னை ஏதேதோ செய்கின்றதே

ஆண்:
வானம் சொல்லாமல் மேகங்கள் இல்லாமல்
இங்கே தேன்மாரி பெய்கின்றதே

பெண்:
என் தேகம் எங்கெங்கும்
ஏதோ ஓர் பொன் மின்னல்

என் தேகம் எங்கெங்கும்
ஏதோ ஓர் பொன் மின்னல்
நடந்து போகின்றதே ஏ

ஆண்:
நாணமே போனது
நாணமே போனது

பெண்:
போதுமே ஆளை விடு ஆடை கொடு

ஆண்:
கஸ்தூரி மானே கல்யாணத் தேனே
கச்சேரி பாடு
வந்து கைத்தாளம் போடு
ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து
சூடிப்பார்க்கும் நேரம் இது

பெண்:
ஜாதிப்பூவை நெஞ்சோடு நீ சேர்த்து
சூடிப்பார்க்கும் நேரம் இது

ஆண்:
கஸ்தூரி மானே கல்யாணத் தேனே
கச்சேரி பாடு
வந்து கைத்தாளம் போடு

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...