படம்: பத்ரகாளி
இசை: இளையராஜா
******************************************
பெண்:
கண்ணன் ஒரு கை குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என் மனதை
கையிரண்டில் நானெடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
மை விழியேதாலேலோ
மாதவனே தாலேலோ
கண்ணன் ஒரு கை குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம்சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என்மனதை
******************************************
ஆண்:
உன் மடியில் நானுறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ
பெண்:
உன் மடியில் நானுறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ
ஆண்:
ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தம் இந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள் வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சம் அம்மா
பெண்:
அன்னமிடும் கைகளிலே
ஆடிவரும் பிள்ளையிது
உன் அருகில் நான் இருந்தால்
ஆனந்தத்தின் எல்லையது
ஆண்:
காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும் வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா
******************************************
பெண்:
மஞ்சள் கொண்டு நீராடி
மொய்குழலில் பூச்சூடி
ஆண்:
வஞ்சி மகள் வரும் போது
ஆசை வரும் ஒருகோடி
பெண்:
மஞ்சள் கொண்டு நீராடி
மொய்குழலில் பூச்சூடி
ஆண்:
வஞ்சி மகள் வரும் போது
ஆசை வரும் ஒருகோடி
பெண்:
கட்டழகன் கண்களுக்கு
மை எடுத்து எழுதட்டுமா
கண்கள் படக்கூடும் என்று
பொட்டு ஒன்றுவைக்கட்டுமா
கண்ணன் ஒரு கை குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
ஆண்:
கன்னம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என்மனதை
பெண்:
கையிரண்டில் நானெடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
ஆண்: மை விழியே தாலேலோ
பெண்:
மாதவனே தாலேலோ
ஆராரிரோ
ஆண்: ஆராரிரோ
பெண்: ஆராரிரோ
ஆண்: ஆராரிரோ
இருவரும்: ஆராரா ரிரோ
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...