படம்: ஆண் பாவம்
இசை: இளையராஜா
******************************************
ஆண்:
குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே
ஆண்: குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே
ஒரு பூஞ்சோலையே ஒனக்காகத்தான்
பூத்தாடுதே வா வா
பெண்: குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே
ஒரு பூஞ்சோலையே ஒனக்காகத்தான்
பூத்தாடுதே வா
ஆ ஆ ஆ ஆ
ஆண்: குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே
******************************************
ஆண்: தொட்டாலே நீ சினுங்கும்
அழகு ஒன்ன தொட்டாலே சிலிர்க்குதடி
பெண்: பட்டாலே பத்திக்கொள்ளும்
காதல் இது ஒட்டாதே தள்ளி நில்லு
ஆண்: சிட்டுகொரு பட்டுத்
துணி கட்டித் தரவா
மொட்டுகென முத்துச் சரம்
கொட்டித் தரவா
பெண்: ஒட்டிகிற கட்டிகிற சிட்டுக் குருவி
கட்டுக்கத விட்டு ஒரு பாட்டா படிக்கும்
ஆண்: நெஜமா நெஜமா நான் தவிச்சேன்
ஒனையே நெனச்சி உயிர் வளர்த்தேன்
பெண்: இது ஆணுக்கும் பெண்ணுக்கும்
என்னாளும் உள்ள கதை
ஆண்: குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே
பெண்: ஒரு பூஞ்சோலையே ஒனக்காகத்தான்
பூத்தாடுதே வா
ஆ ஆ ஆ ஆ
ஆண்: குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே
******************************************
பெண்: ராசாதி ராசனத் தான்
கட்டிக்கொள்ள ராசாத்தி ஆசப்பட்டா
ஆண்: ராசாத்தி என்ன செய்வா
அவளுக்குன்னு ராசாவா
நான் பொறந்தா
பெண்: அன்னைக்கொரு எழுத்த
எனக்கெழுதிபுட்டான்
இன்னைக்கத அழிச்சா
அவன் எழுதப்போறான்
ஆண்: பெண்ணே பழி அவன் மேல சொல்லாதேடி
ஆண்பாவம் பொல்லாதது கொல்லாதடி
பெண்: தவறொ சரியோ விதி இது தான்
சரி தான் சரி தான் வழக்கெதுக்கு
ஆண்: இது ஆணுக்கும் பெண்ணுக்கும்
என்னாளும் உள்ள கதை
பெண்: குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே
ஆண்: ஒரு பூஞ்சோலையே ஒனக்காகத்தான்
பூத்தாடுதே வா வா
ஆ ஆ ஆ
பெண்: குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வாமயிலே
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...