படம்: தென்றலே என்னை தொடு
இசை: இளையராஜா
******************************************
ஆண்: தென்றல் வந்து என்னை தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு இரவே பாய் கொடு
நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு
பெண்: தென்றல் வந்து என்னை தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
******************************************
ஆண்: தூரல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
பெண்: சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்
ஆண்: தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
பெண்: நனைந்த பிறகு நாணம் எதற்கு
ஆண்: மார்பில் சாயும் போது
பெண்: தென்றல் வந்து என்னை தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு இரவே பாய் கொடு
நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு
ஆண்: தென்றல் வந்து என்னை தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
இருவரும்:
தரதத் தரதத் தரதா தரதத் தரதத் தரதா
#இசை##
தரதத் தரத தரதத் தரத தரதத் தரதா தா
******************************************
பெண்: தேகமெங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே
ஆண்: மோகம் வந்து என் மார்பில்
வீழ்ந்ததேனோ கண்ணே
பெண்: மலர்ந்த கொடியோ மயங்கி கிடக்கும்
ஆண்: இதழின் ரசங்கள் எனக்கு பிடிக்கும்
பெண்: சாரம் ஊறும் நேரம்
ஆண்: தென்றல் வந்து என்னை தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு இரவே பாய் கொடு
நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு
பெண்: தென்றல் வந்து என்னை தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
******************************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...