தமிழில் தேட.....

Wednesday, May 29, 2019

வெள்ளை புறா ஒன்று - புதுக்கவிதை பாடல் வரிகள்



படம்: புதுக்கவிதை
இசை: இளையராஜா

******************************************

பெண்:
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ

ஆண்: வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

பெண்: வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

ஆண்:
நமது கதை புது கவிதை
இலக்கணங்கள் இதற்கு இல்லை

பெண்: நான் உந்தன் பூ மாலை ஓ ஓ ஓ

ஆண்: வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

******************************************

பெண்:
கங்கை வெள்ளம் பாயும்
போது கரைகள் என்ன வேலியோ

ஆண்: ஆவியோடு சேர்ந்த ஜோதி பாதை மாற கூடுமோ

பெண்:
மனங்களின் நிறம் பார்த்த காதல்
முகங்களின் நிறம் பார்க்குமோ

ஆண்: நீ கொண்டு வா காதல் வரம்

பெண்: பூ தூவுமே பன்னீர் மரம்

ஆண்: சூடான கனவுகள் தன்னோடு தள்ளாட

பெண்: வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

******************************************


ஆண்:
பூவில் சேர்ந்து வாழ்ந்த
வாசம் காவல் தனை மீறுமே

பெண்:
காலம் மாறும் என்ற போதும்
காதல் நதி ஊறுமே

ஆண்:
வரையரைகளை மாற்றும் போது
தலைமுறைகளும் மாறுமே

பெண்: என்றும் உந்தன் நெஞ்சோரமே

ஆண்: அன்பே உந்தன் சஞ்சாரமே

பெண்: கார்கால சிலிர்ப்புகள் கண்ணோரம் உண்டாக

ஆண்: வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

பெண்: நமது கதை புது கவிதை

ஆண்: இலக்கணங்கள் இதற்கு இல்லை

பெண்: நான் உந்தன் பூ மாலை ஓ ஓ ஓ

இருவரும்:
லாலா லலலல
லாலலல லாலா லலலல
லாலா லலலல
லாலலல லாலா லலலல

******************************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...