தமிழில் தேட.....

Wednesday, May 8, 2019

மல்லிகையே மல்லிகையே - (பெரியவீட்டுப் பண்ணக்காரன்)



படம்: பெரியவீட்டுப் பண்ணக்காரன்
இசை: இளையராஜா

*********************************

பெண்: மல்லிகையே மல்லிகையே
தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே
நீ சேர்த்து போ
நோய் கொண்டு நான்
சிறு நூலாகிறேன்
தேயாமலே
பிறை போல் ஆகிறேன்
தாங்காது
இனி தாங்காது

பெண்: மல்லிகையே மல்லிகையே
தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே
நீ சேர்த்து போ

*********************************

ஆண்: சந்திரனும் சுட்டது இங்கே
சந்தனமும் போனது எங்கே
சந்திரனும் சுட்டது இங்கே
சந்தனமும் போனது எங்கே
ஒத்தையிலே நிக்குறேன் கண்ணே
நித்திரையும் கெட்டது பெண்ணே
ஒத்தையிலே நிக்குறேன் கண்ணே
நித்திரையும் கெட்டது பெண்ணே

பெண்: மணிக்குயில் பாடும்
குரல் கேட்டு வருவாயா
தனிமையில் வந்து
ஒன்று கேட்டால் தருவாயா

ஆண்: மீண்டும் மீண்டும் நீ
அதை கேட்டுப் பாரம்மா

ஆண்: மல்லிகையே மல்லிகையே
தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே
நீ சேர்த்து போ
நோய் கொண்டு நான்
சிறு நூலாகினேன்
தேயாமலே
பிறை போல் ஆகிறேன்
தாங்காது
இனி தாங்காது

ஆண்: மல்லிகையே மல்லிகையே
தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே
நீ சேர்த்து போ

பெண்/குழு: தன தந்த தன தந்த
தன தந்த தன தந்த
நான் நானா நானா

தன தந்த தன தந்த
தன தந்த தன தந்த
நான் நானா நானா

*********************************

பெண்: என் மனசு என்னிடம் இல்லை
ராத்திரியில் எத்தனை தொல்லை
என் மனசு என்னிடம் இல்லை
ராத்திரியில் எத்தனை தொல்லை
செண்பகமும் மல்லிகை மொட்டும்
வந்து வந்து வாட்டுது என்னை
செண்பகமும் மல்லிகை மொட்டும்
வந்து வந்து வாட்டுது என்னை

ஆண்: கனவுகள் போலே
கண்ணில் நீயே வரும் நேரம்
மனதினில் பாலும்
இன்ப தேனும் கலைந்தோடும்

பெண்: ஆடி பாட தான்
வரும் ஆசை தேறும் நீயே

பெண்: மல்லிகையே மல்லிகையே
தூதாக போ

ஆண்: துள்ளி வரும் தென்றலையே
நீ சேர்த்து போ

பெண்: நோய் கொண்டு நான்
சிறு நூலாகினேன்

ஆண்: தேயாமலே
பிறை போல் ஆகிறேன்

ஆண்/பெண்: தாங்காது
இனி தாங்காது
மல்லிகையே மல்லிகையே
தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே
நீ சேர்த்து போ

*********************************

No comments:

Post a Comment

உங்கள் கருத்து...