படம்: பெரியவீட்டுப் பண்ணக்காரன்
இசை: இளையராஜா
*********************************
பெண்: மல்லிகையே மல்லிகையே
தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே
நீ சேர்த்து போ
நோய் கொண்டு நான்
சிறு நூலாகிறேன்
தேயாமலே
பிறை போல் ஆகிறேன்
தாங்காது
இனி தாங்காது
பெண்: மல்லிகையே மல்லிகையே
தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே
நீ சேர்த்து போ
*********************************
ஆண்: சந்திரனும் சுட்டது இங்கே
சந்தனமும் போனது எங்கே
சந்திரனும் சுட்டது இங்கே
சந்தனமும் போனது எங்கே
ஒத்தையிலே நிக்குறேன் கண்ணே
நித்திரையும் கெட்டது பெண்ணே
ஒத்தையிலே நிக்குறேன் கண்ணே
நித்திரையும் கெட்டது பெண்ணே
பெண்: மணிக்குயில் பாடும்
குரல் கேட்டு வருவாயா
தனிமையில் வந்து
ஒன்று கேட்டால் தருவாயா
ஆண்: மீண்டும் மீண்டும் நீ
அதை கேட்டுப் பாரம்மா
ஆண்: மல்லிகையே மல்லிகையே
தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே
நீ சேர்த்து போ
நோய் கொண்டு நான்
சிறு நூலாகினேன்
தேயாமலே
பிறை போல் ஆகிறேன்
தாங்காது
இனி தாங்காது
ஆண்: மல்லிகையே மல்லிகையே
தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே
நீ சேர்த்து போ
பெண்/குழு: தன தந்த தன தந்த
தன தந்த தன தந்த
நான் நானா நானா
தன தந்த தன தந்த
தன தந்த தன தந்த
நான் நானா நானா
*********************************
பெண்: என் மனசு என்னிடம் இல்லை
ராத்திரியில் எத்தனை தொல்லை
என் மனசு என்னிடம் இல்லை
ராத்திரியில் எத்தனை தொல்லை
செண்பகமும் மல்லிகை மொட்டும்
வந்து வந்து வாட்டுது என்னை
செண்பகமும் மல்லிகை மொட்டும்
வந்து வந்து வாட்டுது என்னை
ஆண்: கனவுகள் போலே
கண்ணில் நீயே வரும் நேரம்
மனதினில் பாலும்
இன்ப தேனும் கலைந்தோடும்
பெண்: ஆடி பாட தான்
வரும் ஆசை தேறும் நீயே
பெண்: மல்லிகையே மல்லிகையே
தூதாக போ
ஆண்: துள்ளி வரும் தென்றலையே
நீ சேர்த்து போ
பெண்: நோய் கொண்டு நான்
சிறு நூலாகினேன்
ஆண்: தேயாமலே
பிறை போல் ஆகிறேன்
ஆண்/பெண்: தாங்காது
இனி தாங்காது
மல்லிகையே மல்லிகையே
தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே
நீ சேர்த்து போ
*********************************
No comments:
Post a Comment
உங்கள் கருத்து...